
விசாகப்பட்டினத்தில் திறந்த சிறிது நேரத்தில், அலைகளால் அடித்து செல்லப்பட்ட மிதக்கும் பாலம் ; அசம்பாவிதம் தவிர்ப்பு
A floating bridge in Visakhapatnam, shortly after its opening, was swept away by the waves; accidents Avoided
-
சுற்றுலா வளர்ச்சிக்காக இந்த மிதக்கும் பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் பிரபலம் அடையும்.மேலும் இன்று முதல் மிதக்கும் பாலத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்
-
மிதக்கும் பாலத்தில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீர்மூழ்கி கப்பலான பிரஹரியும் சேதம்
விசாகப்பட்டினம், பிப். 27
விசாகப்பட்டினம் ஆர்கே கடற்கரையில் மிதக்கும் பாலம் சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டியின் அரசால் 1.6 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்ட இந்த பாலத்தை ஞாயிற்றுக்கிழமை ராஜ்யசபா உறுப்பினர் ஒய்.வி.சுப்பா ரெட்டி மற்றும் அமைச்சர் குடிவாடா அமர்நாத் ஆகியோர் திறந்து வைத்தனர்.
மிதக்கும் கடல் பாலம்
அப்போது மிதக்கும் கடல் பாலம் ஆர்கே கடற்கரையில் உள்ள குர்சுரா நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. விஎம்ஆர்டிஏ அதிகாரிகள் கூறியதாவது: கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள சாவக்காடு கடற்கரையில் உள்ள பாலம் மாதிரி அமைக்கப்பட்டுள்ளது.

கடலுக்குள் 100 மீட்டர்
இதன் மீது பார்வையாளர்கள் கடலுக்குள் 100 மீட்டர் நடந்து செல்ல முடியும். மும்பையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த திட்டத்தை நிறுவினர். விசாகப்பட்டினம் மிகவும் அமைதியான நகரம், மிதக்கும் பாலத்தால் கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இதையும் படியுங்கள் : பாலாற்றில் 3 அணைகள் கட்டப்படும் – முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேச்சு
சுற்றுலா வளர்ச்சி
சுற்றுலா வளர்ச்சிக்காக இந்த மிதக்கும் பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் பிரபலம் அடையும்.மேலும் இன்று முதல் மிதக்கும் பாலத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
பெரிய அலைகள் தாக்கியதால் அரிப்பு
பாலம் திறந்து வைக்கப்பட்ட சிறிது நேரத்தில் அதிக வேகத்தில் பலமான காற்று வீசியது. இதில் பெரிய அலைகள் வந்து கடற்கரையை தாக்கியதால் அரிப்பு ஏற்பட்டது.

இதனால் திறந்து வைக்கப்பட்ட சில மணி நேரத்தில் மிதக்கும் பாலம் இடிந்து விழுந்து கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டது. மிதக்கும் பாலத்தில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீர்மூழ்கி கப்பலான பிரஹரியும் சேதம் அடைந்தது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்