Home Blog

வருமான வரி வழக்கு : நடிகர் விஜய்க்கு விதித்த அபராதம் செல்லும் – உயர் நீதிமன்றம் உத்தரவு

வருமான வரி வழக்கு : நடிகர் விஜய்க்கு விதித்த அபராதம் செல்லும் – உயர் நீதிமன்றம் உத்தரவு

Income tax case: The fine imposed on actor Vijay is valid – High Court order

கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, ‘புலி’ படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிப்பட்டது

வருமான வரித் துறை தரப்பில், வருமான வரி மதிப்பீட்டை எதிர்த்த அப்பீல் முடிந்த பின், ஆறு மாத கால அவகாசத்துக்குள்ளேயே அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை, பிப். 06

வருமான வரி வழக்கில் நடிகர் விஜய்க்கு ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2015-16-ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்தபோது, அந்த ஆண்டுக்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.

அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, ‘புலி’ படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது.

வருமானத்தை மறைத்ததற்காக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வருமான வரித் துறை உத்தரவு பிறப்பித்தது.

தனக்கு அபராதம் விதித்து வருமான வரித் துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வருமான வரித் துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், விஜய் தாக்கல் செய்திருந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் கடந்த 23ம் தேதி நடந்தது.

அப்போது, விஜய் தரப்பில், சட்டப்படி அபராத உத்தரவை 2019 ஜூன் 30-ம் தேதிக்கு முன்பே பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால், காலதாமதமாக 2022-ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

வருமான வரித் துறை தரப்பில், வருமான வரி மதிப்பீட்டை எதிர்த்த அப்பீல் முடிந்த பின், ஆறு மாத கால அவகாசத்துக்குள்ளேயே அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டப்படி நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்து சரிதான். விஜய் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில், வருமான வரி வழக்கில் நடிகர் விஜய்க்கு ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது செல்லும் என தெரிவித்துள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

‘உம் வினை உம்மை சுடுக’. எங்கள் நாடு நீடூழி வாழும் – மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி.  சூளுரை

‘உம் வினை உம்மை சுடுக’. எங்கள் நாடு நீடூழி வாழும் – மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி.  சூளுரை

‘May your actions burn you.’ Our country will live long – A pledge by Makkal Needhi Maiam party leader and MP, Kamal Haasan, in the Rajya Sabha.

  • . பிஹார் ஏற்கெனவே பல ‘வாழும் பிணங்களின்’ (வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள்) தேசமாகிவிட்டது.
  • எமது மொழி, கலாசாரம் மற்றும் உரிமைகள் மீதான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எப்படி எதிர்கொள்வது என்று அண்ணா எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.

புதுடெல்லி, பிப். 05

“இன்று தமிழை, தமிழரைப் பார்த்து பிச்சை எடுக்கக்கூட தமிழ் உதவாது என்கிறீர்கள். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே! தமிழ்… பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது” என்று மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. பேசினார்.

இன்று மாநிலங்களவையில் முதன்முறையாக கமல்ஹாசன் பேசினார். ஆங்கிலத்தில் உரையாற்றிய அவர், “இங்கு வரமுடியாமல் போன எம் தமிழர் தலைவர்களுக்கும், என் நண்பர் ஸ்டாலினுக்கும் நன்றி. இந்த அவையில் ஓர் உறுப்பினராக நின்று பேசுவதை நான் பெரும் கவுரவமாகக் கருதுகிறேன். சினிமா எனும் ஊடகத்தின் வழியாகப் பயணம் செய்து, தமிழகத்தின் பரமக்குடி எனும் ஒரு சிறிய ஊரிலிருந்து புறப்பட்டு வந்தவன் நான்.

இந்தியா என்பது மாநிலங்களால் இணைந்த ஒரு நாடு. அதுதான் இந்திய அரசியல் சாசனமும் வகுத்துக் கொடுத்திருக்கிறது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். நான் எனது மொழியை எனது ஆசிரியர்கள் வாயிலாக கற்றுக் கொண்டேன். எனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய எனது ஆசிரியர்களில் ஒருவர்தான் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணா.

எனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய ஆசிரியர்களில் ஒருவர் அரசியல் தலைவர் சி.என்.அண்ணாதுரை. ‘துரை’ (Durai) என்றால் பிரெஞ்சு மொழியில் அரசன் என்று பொருள். அவர் அரசராகப் பிறக்கவில்லை, ஆனால் தமிழர்களாகிய நாங்கள் அவரை எங்கள் மனங்களில் அரசராக அரியணையில் ஏற்றினோம். எமது மொழி, கலாசாரம் மற்றும் உரிமைகள் மீதான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எப்படி எதிர்கொள்வது என்று அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.

57 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நான் உங்கள் முன்னால் பேசுகிறேன். 1969 பிப்ரவரி 3-ம் தேதி அவர் மறைந்த தினம். எனது சித்தாந்தத்தின் தந்தைகளில் ஒருவரை இழந்த நான் அப்போது 14 வயது சிறுவன். இன்று அவர் பேசிய அதே அவையில் நான் பேசுகிறேன். இது மேடை அச்சம் அல்ல, உணர்ச்சிகளால் நான் நடுங்குகிறேன். எனக்குள் இருக்கும் உணர்ச்சிப் பெருக்கெடுத்து உங்களைத் புண்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே நான் இதையெல்லாம் எழுதி வைத்திருக்கிறேன். இன்று அண்ணாவின் மகனாகவும், காந்தி மற்றும் பெரியாரின் கொள்ளுப் பேரனாகவும் உங்கள் முன் நிற்கிறேன்.

இந்த உரையை ஒரு துளி கோபமும் இல்லாமல் எழுதுவதற்கு மகாத்மா காந்தி எனக்கு உதவினார். தர்க்க ரீதியான வாதங்களை முன்வைக்க தந்தை பெரியார் எனக்கு உதவினார். இந்த மாபெரும் ஜனநாயகக் கட்டிடத்தின் மாண்பைப் புரிந்து கொள்ள அண்ணா எனக்கு உதவினார்.

உயர்ந்த உங்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்ற ஒரு சாமானியனின் ஆர்வத்தை மன்னித்துவிடுங்கள். ஆனால், வரலாற்றின் போக்கை மாற்றியதும், ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளை வீழ்த்தியதும் இந்தச் சாமானியர்கள்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தண்டி யாத்திரையை நினைவுகூருங்கள்.

இப்போது நாம் நிகழ்காலத்தைப் பார்ப்போம். எனது உடனடி கவலை வரவிருக்கும் தேர்தல்கள் பற்றியது. எங்களின் தற்போதைய நிலையை ‘உயிரோடு இருப்பவர்களின் மரண வாக்குமூலம்’ என்று அழைக்கிறேன். நாங்கள் வாக்களிக்க விரும்புகிறோம், ஆனால், தேர்தல் ஆணையம் எழுத்துப் பிழைகளையும் முகவரிகளையும் காரணம் காட்டி எங்களது வாக்களிக்கும் உரிமையையே கேள்விக்குள்ளாக்குகிறது.

‘ஸ்பெல்’ என்பது ஒரு சொல்லாகவும் இருக்கலாம் அல்லது ஒரு மந்திரமாகவும் இருக்கலாம். நவீன இலக்கியமும் இணையமும் உள்ளடக்கத்திற்காக எழுத்துப் பிழைகளை மன்னிக்கின்றன. ஆனால் தேர்தல் ஆணையம் மன்னிப்பதில்லை. ‘EC’ என்றால் ‘ஆங்கிலப் பயிற்சியாளர்கள்’ (English Coaches) என்று அர்த்தமல்ல. பிஹார் ஏற்கெனவே பல ‘வாழும் பிணங்களின்’ (வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள்) தேசமாகிவிட்டது.

இந்த நோய் நாடு முழுவதும் பரவுவதை நாங்கள் விரும்பவில்லை. மேற்கு வங்கத்தை சேர்ந்த எனது சகோதரியும் இதற்காக அவர் உச்ச நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிலும் கிட்டத்தட்ட ஒரு கோடி ‘வாழும் பிணங்கள்’ காகித அளவில் உருவாக்கப்பட்டு விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். இந்த அவையில் நான் பேசும் வார்த்தைகள் உங்களில் சிலருக்குக் காயத்தை ஏற்படுத்தலாம். ஆனால், மேலும், நான் கடவுளை நோக்கி கைகூப்பப் போவது கிடையாது. எனது பகுத்தறிவு மூளை கடவுள் என்ற பிம்பத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்பே அப்புறப்படுத்திவிட்டது” என்று பேசினார்.

தொடர்ந்து தமிழில் பேசிய அவர், “பிச்சைப் பாத்திரத்தில் இருந்து எடுத்த சில்லறைகள் நவீன காலத்துக்கு உதவாது என்று தெரிந்தவர் நீங்கள். நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகுதான் உங்கள் பிச்சை பாத்திரம் உருவாக்கப்பட்டது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து பிச்சை எடுக்கக்கூட தமிழ் உதவாது என்கிறீர்கள். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே! தமிழ்… பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது.

தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். தங்கச்சி ஓட்டையும் நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச் சித்தன் கூற்று இது ‘உம் வினை உம்மை சுடுக’. எங்கள் நாடு நீடூழி வாழும், உம் வினை உம்மைச் சுடுக, ஓட்டப்பம் வீட்டைச் சுடுக. ‘வந்தீர் வென்றீர் செல்வீர்’ இது உலக நியதி, அரசியல் நியதியும்கூட. வீழ்க வளமுடன். தமிழ் என்றும் வாழும் நலமுடன்” என்று கமல்ஹாசன் எம்.பி. பேசினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

தலை​மைச் செயல​கம் முற்​றுகை போராட்​டத்​தில் ஈடு​பட முயன்ற டாஸ்மாக் பணி​யாளர்​கள் கைது

0

தலை​மைச் செயல​கம் முற்​றுகை போராட்​டத்​தில் ஈடு​பட முயன்ற டாஸ்மாக் பணி​யாளர்​கள் கைது

Tasmac employees arrested for attempting to participate in protest against the Presidential Secretariat

*கடந்த 20 ஆண்​டு​களுக்கு மேலாக பணி​யாற்றி வரக்​கூடிய ஆயிரக்​கணக்​கான டாஸ்மாக் பணி​யாளர்​கள் தொடர்ச்​சி​யாக மாநாடு​கள், பேரணி, ஆர்ப்​பாட்​டம் என ஓராண்​டுக்​கும் மேலாக
பணிநிரந்​தரம், கால​முறை ஊதி​யம், ஓய்​வூ​தி​யம் கோரி போராடி வரு​கின்​றனர்

*பிரதமர் மோடி​யின் கண்​களுக்கு தெரிவதெல்​லாம் கார்ப்​பரேட் நிறு​வனங்​கள் மட்​டும்​தான். சாதாரண தொழிலா​ளர்​கள், விவ​சா​யிகள், உழைக்​கும் மக்​களைப் பற்றி எந்த அக்​கறை​யும் பாஜக அரசுக்குஇல்​லை.

சென்னை, பிப்​.12

தலை​மைச் செயல​கம் முற்​றுகை போராட்​டத்​தில் ஈடு​பட முயன்ற டாஸ்மாக் பணி​யாளர்​கள் கைது

பணிநிரந்​தரம், கால​முறை ஊதி​யம், ஓய்​வூ​தி​யம் வழங்​கக்​கோரி தலை​மைச் செயல​கம் முற்​றுகை போராட்​டத்​தில் ஈடு​பட முயன்ற டாஸ்மாக் பணி​யாளர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர்.

பணிநிரந்​தரம், கால​முறை ஊதி​யம், ஓய்​வூ​திய, இஎஸ்ஐ உள்​ளிட்ட கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி ஏஐடி​யுசி தமிழ்​நாடு டாஸ்மாக் பணி​யாளர்​கள் சங்​கம் சார்​பில் தலை​மைச்செயல​கம் நோக்கி முற்​றுகைப் போராட்​டம், எழும்​பூரில் உள்ளதமிழ்​நாடு டாஸ்மாக் மேலாண்மை இயக்​குநர் அலு​வல​கம் அருகே நேற்று நடை​பெற்​றது.

சங்​கத்​தின் மாநிலத் தலை​வர் நா.பெரிய​சாமி தலை​மை​யில் 500-க்​கும் மேற்​பட்ட டாஸ்மாக் பணி​யாளர்​கள் தங்​களது வாழ்​வா​தார கோரிக்​கைகளை நிறைவேற்​றக்​கோரி கோஷங்​களை எழுப்​பிய​வாறு, லாங்க்ஸ் கார்​டன் சாலை​யி​லிருந்து முற்​றுகைக்​கான பேரணி​யைத் தொடங்​கினர்.

அப்​போது போலீ​ஸார் அவர்​களை தடுத்தி நிறுத்தி கலைந்து செல்​லு​மாறு அறி​வுறுத்​திய நிலை​யில், தொடர்ந்து முன்​னேறிய​தால் போராட்​டக்​காரர்​களை காவல் துறை​யினர் கைது செய்து அரு​கில் உள்ள மண்​டபங்​களுக்கு கொண்டு சென்​றனர். போராட்​டத்​தில் ஏஐடி​யுசிதேசிய செய​லா​ளர் டி.எம்​.மூர்த்​தி, மாநில செய​லா​ளர்டி.​ரா​தாகிருஷ்ணன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

முன்​ன​தாகஇந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி முன்​னாள் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன் போராட்​டத்தை தொடங்கி வைத்து செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கடந்த 20 ஆண்​டு​களுக்கு மேலாக பணி​யாற்றி வரக்​கூடிய ஆயிரக்​கணக்​கான டாஸ்மாக் பணி​யாளர்​கள் தொடர்ச்​சி​யாக மாநாடு​கள், பேரணி, ஆர்ப்​பாட்​டம் என ஓராண்​டுக்​கும் மேலாக பணிநிரந்​தரம், கால​முறை ஊதி​யம், ஓய்​வூ​தி​யம் கோரி போராடி வரு​கின்​றனர்.

அரசுக்கு எதிரானது அல்ல: இந்த போராட்​டம் அரசுக்கு எதி​ரானது அல்ல. இந்த போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ள தொழிலா​ளர்​கள் அனை​வரும் அரசுக்கு ஆதர​வாக இருப்​பவர்​கள். இதே அரசு​தான் மீண்​டும் வரும் சட்​டப்​பேரவை தேர்​தலில் வெற்​றி​பெற வேண்​டும் என்று உணர்​வுப்​பூர்​வ​மாக விரும்​பக்​கூடிய​வர்​கள்.
இவ்​விவ​காரத்​தில் முதல்​வர் தலை​யிட்​டு, அவர்​களின் நியாய​மான கோரிக்​கைகளை நிறைவேற்ற வேண்​டும். மத்​திய பாஜக அரசின் கடந்த கால பட்​ஜெட்​டு​களில் மக்​கள் என்​னென்ன ஏமாற்​றங்​களை சந்​தித்​தார்​களோ, அதே​தான் 2026-27 பட்​ஜெட்​டிலும் நடந்​திருக்​கிறது. பிரதமர் மோடி​யின் கண்​களுக்கு தெரிவதெல்​லாம் கார்ப்​பரேட் நிறு​வனங்​கள் மட்​டும்​தான். சாதாரண தொழிலா​ளர்​கள், விவ​சா​யிகள், உழைக்​கும் மக்​களைப் பற்றி எந்த அக்​கறை​யும் பாஜக அரசுக்குஇல்​லை.

எனவே வரும் பிப்​.12-ம் தேதி தொழிலா​ளர்​கள், விவ​சா​யிகள், விவ​சா​யத் தொழிலா​ளர்​கள் இணைந்து மத்​திய அரசுக்கு எதி​ராக நாடு தழு​விய பொது வேலைநிறுத்​தப் போ​ராட்​டத்தை நடத்​தவுள்​ளனர். இந்த போ​ராட்​டம்​ வெற்​றிகர​மாக நடை​பெறும்​. இவ்வாறு அவர் கூறினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

​நாடாளு​மன்றத்தில் ராகுல் காந்தி சீனா பேச்சு ; நடவடிக்கை குறித்து சபாநாயகர் ஆலோசனை

​நாடாளு​மன்றத்தில் ராகுல் காந்தி சீனா பேச்சு ; நடவடிக்கை குறித்து சபாநாயகர் ஆலோசனை

Rahul Gandhi’s China remarks in Parliament; Speaker consults on action

  • ராகுலின் சீனா பேச்சு மீது நடவடிக்கை எடுப்​பது குறித்து சபா​நாயகர் தனது சட்ட நிபுணர்களிடம் ஆலோ​சனை

  • எம்​பி, தனது உரைக்கு முன்​பாக சபா​நாயகரின் அனு​மதி பெற வேண்டும். ஏனெனில், மக்​களவை விதி 349(I) விதியை மீறும் எம்​.பி. தனது பதவியை இழக்க நேரிடும்”

புதுடெல்லி, , பிப். 03

​நாடாளு​மன்றத்தில் ராகுல் காந்தி சீனா பேச்சு ; நடவடிக்கை குறித்து சபாநாயகர் ஆலோசனை: நாடாளு​மன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின்போது, விதி​களை ராகுல் காந்தி மீறி​யிருப்​ப​தாகத் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளது.

இவரது நடவடிக்கை மீது நாடாளுமன்ற விதி​களின்​படி சபாநாயகர் ஓம் பிர்லா நடவடிக்கை எடுத்​தால், ராகுலின் எம்பி பதவி பறிபோகும் எனக் கருதப்​படு​கிறது.

இது குறித்து நாடாளு​மன்ற அலு​வலக வட்​டாரம் கூறுகை​யில், ‘மக்களவை எம்​.பி. தனது பேச்​சில் ஒரு புத்​தகம், செய்​தித்​தாள் அல்​லது கடிதத்​தில் இருந்து மேற்​கோள் காட்​டு​வது, அவை​யின் நடவடிக்​கைகளுக்​குத் தொடர்​புடைய​தாக இருந்​தாலன்​றி, தடை செய்​யப்​பட்​டுள்​ளது. இதை மக்​களவை விதி 349(I) குறிப்​பிடு​கிறது.

இதையும் படியுங்கள் : தமிழகத்தின் வளர்ச்சியை மீண்டும் படுகுழியில் தள்ள நினைக்கும் சதியை முறியடிப்போம் – திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

எனவே அவ்​வாறு செய்​வதற்கு முன்பு சில விதி​களை அந்த எம்​.பி. பின்​பற்​று​வது மிக​வும் முக்​கி​யம். இந்த விதி​யின்​படி அந்த எம்​பி, தனது உரைக்கு முன்​பாக சபா​நாயகரின் அனு​மதி பெற வேண்டும். ஏனெனில், இந்த விதியை மீறும் எம்​.பி. தனது பதவியை இழக்க நேரிடும்” என்று தெரிவிக்​கின்​றனர்.

சபா​நாயகரின் அனு​மதி பெறாதது மட்​டுமின்​றி, ராகுல் காந்தி குறிப்​பிட்ட நூலானது இன்​னும் வெளி​யிடப்​பட​வில்​லை. ராகுலின் இந்த நடவடிக்கை நாடாளு​மன்​றக் குழு​வின் விசா​ரணைக்கு உகந்​த​தாக கருதப்​படு​கிறது. எனவே, ராகுலின் சீனா பேச்சு மீது நடவடிக்கை எடுப்​பது குறித்து சபா​நாயகர் தனது சட்ட நிபுணர்களிடம் ஆலோ​சனை செய்து வரு​வ​தாக​வும் தெரி​கிறது.

மேலும், இது​போன்ற தகவல்​களை சரி​ பார்க்​கு​மாறு ஆளும் கட்சி உறுப்​பினர்​கள் கோரலாம். இதன் அடிப்​படை​யில் அந்த விவ​காரம் நாடாளு​மன்ற சிறப்​புரிமைக் குழு​வுக்கு பரிந்​துரைக்​கப்பட வாய்ப்புள்​ளது. இதில் குற்​றம் நிரூபிக்​கப்​பட்​டால் சம்​பந்​தப்​பட்ட உறுப்​பினர் தனது எம்​.பி. பத​வியை இழக்​க நேரிடும்​ எனவும்​ கருத்துகள்​ எழுந்​துள்​ளன.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

தமிழகத்தின் வளர்ச்சியை மீண்டும் படுகுழியில் தள்ள நினைக்கும் சதியை முறியடிப்போம் – திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

தமிழகத்தின் வளர்ச்சியை மீண்டும் படுகுழியில் தள்ள நினைக்கும் சதியை முறியடிப்போம் – திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
Let us thwart the conspiracy to plunge Tamil Nadu’s development back into the abyss – Chief Minister M.K. Stalin’s call to DMK members

  • இருபெரும் தலைவர்களையும், ஐம்பெரும் முழக்கங்களையும் நெஞ்சில் ஏந்தி திமுக எனும் அரசியல் பேரியக்கத்தை நான் வழிநடத்தி வருகிறேன்

  • மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி என்பதைத் திராவிட மாடல் அரசு தனது ஒவ்வொரு செயல்பாட்டிலும் மத்திய பாஜக அரசுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது

சென்னை, பிப் .03

தமிழகத்தின் வளர்ச்சியை மீண்டும் படுகுழியில் தள்ள நினைக்கும் சதியை முறியடிப்போம் – திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு:

பாஜகவும், அதிமுகவும் நமக்கு எதிராகச் செயல்படுவதாக நினைத்து தமிழகத்தின் வளர்ச்சியை மீண்டும் படுகுழியில் தள்ள நினைக்கும் சதியை முறியடிப்போம் என திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய மடலில் கூறியிருப்பதாவது: அண்ணா வழி என்பது அன்பு வழி. அறவழி. சுயமரியாதைப் பாதையில் சமூக நீதி எனும் இலக்கை அடையும் வழி. அண்ணா வழியில் அயராது உழைத்தால்தான் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைக்க முடியும், இந்தித் திணிப்பை என்றும் எதிர்த்து இன்பத்தமிழ் மொழியைக் காக்க முடியும், வன்முறை தவிர்த்து வறுமையை வெல்ல முடியும். மாநிலத்தில் சுயாட்சியையும் மத்தியில் கூட்டாட்சியையும் நிலைநாட்ட முடியும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஐம்பெரும் முழக்கங்களை நமக்கு கருணாநிதி வழங்கினார்.
அண்ணாவுக்குப்பின் திமுக என்னவாகும் என்று நினைத்தவர்களுக்கு, அண்ணா வழியிலேயே தொடர்ந்து பயணிக்கும் என்பதை உணர்த்தும் வகையில், அரை நூற்றாண்டு காலம் இந்த இயக்கத்தைத் தலைமையேற்று வழிநடத்தியவர் கருணாநிதி. இந்த இருபெரும் தலைவர்களையும், ஐம்பெரும் முழக்கங்களையும் நெஞ்சில் ஏந்தி திமுக எனும் அரசியல் பேரியக்கத்தை நான் வழிநடத்தி வருகிறேன்.

பத்தாண்டுகால அதிமுக ஆட்சியின் இருட்டிலிருந்து தமிழகம் மீட்கப்பட்டு விடியல் வெளிச்சத்தைக் காண்கிறது. மத்திய பாஜக அரசின் திட்டமிடப்பட்ட வஞ்சகத்தை எதிர்கொண்டு தமிழகம் பொருளாதாரத்திலும் தொழில்துறையிலும் கல்வியிலும் கட்டமைப்புகளிலும் இன்னும் பல துறைகளிலும் முன்னேறி வருவதை அந்த மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையே உறுதி செய்கிறது. இந்தியாவுக்கே முன்னோடியான சமூகநலத் திட்டங்களை வழங்கி, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் வளர்ச்சியிலும் திராவிட மாடல் அரசு பெரும் பங்காற்றி வருகிறது.


எதிர்ப்புகளையும் வஞ்சகத்தையும் எதிர்கொள்ளும் போராட்டமாகவே முதல்வர் பொறுப்பை அனுபவித்தபடி, தமிழக மக்களின் முன்னேற்றத்துக்கு உழைத்து வருகிறேன். உடன்பிறப்புகளான உங்களின் ஆதரவே என்னுடைய வலிமை. நம்மை எதிர்ப்பவர்கள் ஆட்சிக்கு வந்தபோதும், அண்ணாவின் பெயரைத்தான் உச்சரிக்க வேண்டியிருந்தது. அதுதான் திமுக எனும் பேரியக்கத்தின் கொள்கைக்கான வெற்றி.

இப்போதும் நாம் அண்ணா வழியில் அயராது உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்திக்கு இடமில்லை என்று இருமொழிக் கொள்கையை அண்ணா நிலைநாட்டிய மாநிலத்தில், இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது மத்திய பாஜக அரசு. தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக அரசுக்குச் சாமரம் வீசும் அடிமையாக இருக்கிறது அதிமுக.
வன்முறை தவிர்த்து வறுமையை வெல்ல வேண்டிய மண்ணில், எந்த வகையில் மத வன்முறையைத் தூண்டலாம் என்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது. அதற்கு மௌன சாட்சியாக அமைதி காக்கிறது அதிமுக.

மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி என்பதைத் திராவிட மாடல் அரசு தனது ஒவ்வொரு செயல்பாட்டிலும் மத்திய பாஜக அரசுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. திராவிட மாடலின் குரல், பாஜக ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும் ஒலிக்கிறது. மாநில சுயாட்சி என்றாலே பயந்து ஒளிந்து கொள்கிறது, சுயாட்சி எண்ணமோ சுயமரியாதை உணர்வோ இல்லாத அதிமுக.
மக்களுக்காகவே செயல்படுகிற மக்கள் இயக்கமான திமுகவை 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற வைத்து, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய வேண்டும் என்ற எண்ணம் மக்களின் மனதில் பதிந்துள்ளது. பாஜகவும், அதிமுகவும் நமக்கு எதிராகச் செயல்படுவதாக நினைத்து தமிழகத்தின் வளர்ச்சியை மீண்டும் படுகுழியில் தள்ள நினைக்கும் சதியை, உடன்பிறப்புகளான உங்களால்தான் முறியடித்திட முடியும். அந்த உறுதியை ஏற்கும் வகையில், பிப்ரவரி 3-ம் தேதி (இன்று) பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் அண்ணா சதுக்கம் நோக்கி அமைதிப் பேரணியில் நானும் கழக முன்னோடிகளும் கழகத் தொண்டர்களும் பங்கேற்கிறோம்.

அண்ணாவின் நினைவு நாளில் அவரது படத்துக்கு மாலையிட்டு, மலர் தூவி மரியாதை செலுத்தி, முத்தமிழறிஞர் கலைஞர் வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களை உறுதிமொழியாக ஏற்று, தேர்தல் களப்பணிகளுக்கு ஆயத்தமாவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தே பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறார்கள்- அமைச்சர் ரகுபதி

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தே பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறார்கள்- அமைச்சர் ரகுபதி

Knowing full well that they cannot come to power in Tamil Nadu, they neglected Tamil Nadu in the budget – Minister Raghupathi

  • பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும் நாடகத்தைக் கூட தமிழ்நாடு என்றால் புறக்கணிக்கிறது ஒன்றிய பாஜக அரசு

  • பட்ஜெட்டில் தமிழ்நாட்டை ஒன்றும் செய்யாமல் வஞ்சிக்கும் பாஜக அரசுக்கு அவர்களின் அடிமைகளுக்கும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்’

சென்னை, பிப்.02

தேர்தல் நடக்கும் மாநிலங்களை கவருவதற்காக பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும் நாடகத்தைக் கூட தமிழ்நாடு என்றால் புறக்கணிக்கிறது ஒன்றிய பாஜக அரசு. எவ்வளவு அறிவிப்புகளைச் செய்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்கு விழாது என்பதை தெளிவாகத் தெரிந்தே பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறார்கள் என தமிழக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “வழக்கமாக ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் சமயத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் மாநிலங்கள் கொண்டாடக்கூடிய அம்சங்கள் இருக்கும். ஆனால், ஒன்றிய பாஜக அரசின் இப்போதைய பட்ஜெட்டில் தமிழ்நாடு கொண்டாட எதுவுமே இல்லை.

பாஜகவிற்குச் சித்தாந்த ரீதியில் சிம்மசொப்பனமாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். தமிழர்கள் மீது பாஜக கொண்டிருக்கும் வன்மம் ஒருபோதும் தீராது என்பதை மோடி அரசு தாக்கல் செய்த பட்ஜெட் நிரூபித்துவிட்டது.

தமிழ்நாடு என்கிற பெயரே இல்லாத பட்ஜெட்டை கடந்த காலங்களில் தாக்கல் செய்த ஒன்றிய பாஜக அரசு, அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த முறைப் பெயருக்காவது தமிழ்நாடு என்ற வார்த்தையைச் சேர்த்துவிடுவது என்று குறியாக இருந்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதுவும் பெயரளவு அறிவிப்புகள்தான். தமிழ்நாட்டுக்கென பிரத்தியேகமான சிறப்புத் திட்டங்கள் எதையும் பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.

கடந்த காலத்தில் பிஹார் மற்றும் ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு திட்டங்களை அள்ளி வழங்கியது ஒன்றிய பாஜக அரசு. குறிப்பாக ’பிஹார் பட்ஜெட்டா!’ என சொல்லும் அளவிற்கு, வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கு ரூ.11 ஆயிரம் கோடி, மூன்று தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க ரூ.26 ஆயிரம் கோடி, பெகல்பூர் மின் நிலைய திட்டத்திற்கு ரூ.21 ஆயிரம் கோடி எனச் சுமார் ரூ.70 ஆயிரம் கோடிக்குச் சிறப்புத் திட்டங்களை அறிவித்தது மோடி அரசு. ஆனால், இப்போதும் தமிழ்நாட்டை வழக்கம் போலவே புறக்கணித்திருக்கிறார்கள்.
மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை 41 சதவிகிதத்தில் இருந்து 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்ற நமது நீண்ட காலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. மோடி குஜராத் முதல்வராக இருக்கும்போது, 50 சதவிகித வரிப் பகிர்வு கேட்டுப் போராடினார். அவர் பிரதமர் ஆன பிறகு அதனைச் செயல்படுத்த மறுக்கிறார்.

இதையும் படியுங்கள் :  திரு​வொற்​றியூர் நெடுஞ்சாலைக்கு ‘வள்ளலார் நெடுஞ்​சாலை’ என பெயர் சூட்​டப்​படும் – முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறிவிப்பு

விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான சமக்ரா சிக்ஷா நிதி 3,548 கோடி ரூபாய், தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் ஜல்ஜீவன் திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி போன்றவற்றை விடுவிப்பது குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் பற்றி அறிவிப்பும் இடம்பெறவில்லை. அமெரிக்காவின் வரிவிதிப்பால் பல்லாயிரம் கோடி இழப்பை சந்தித்திருக்கும் திருப்பூர் ,கோவை தொழிற்துறையை மீட்பதற்கு ஆக்கபூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லை.

தேர்தல் நடக்கும் மாநிலங்களை கவருவதற்காக பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும் நாடகத்தைக் கூட தமிழ்நாடு என்றால் புறக்கணிக்கிறது ஒன்றிய பாஜக அரசு. நாட்டின் பொருளாதாரத்திற்கு 9 விழுக்காடு பங்களிப்பைச் செய்யும் தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு வெறும் 4 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதால் ஆண்டுக்குச் சுமார் ரூ. 5,000 கோடி நிதி இழப்பு ஏற்படும்.

பொதிகை மலையில் டிரெக்கிங், பழவேற்காட்டில் பறவைகளைக் கண்காணிக்க மூன்று புதிய கோபுரங்கள் அறிவித்திருக்கிறார்கள். இதெல்லாம் ஒன்றிய அரசின் அறிவிப்பா?

ஆட்சியைத் தாங்கி பிடிக்கும் பிஹாருக்கும் ஆந்திராவுக்கு வாரிக் கொடுப்பார்கள். ஆட்சி அமைக்கக் கூடிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்தால் ஆயிரம் கோடிகளில் திட்டங்களை அறிவிப்பார்கள். ஆனால், தேர்தல் நடக்கும் காலத்தில்கூட அள்ளிக் கொடுக்க மனம் இல்லாமல் டிரெக்கிங், கோபுரம் என வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு ஏமாற்றப் பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசு. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தே பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறார்கள்.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில் மதுரையில் தொழில் வழித்தடம், தமிழகத்தில் பல்நோக்கு கடல் பூங்கா, மதுரையிலிருந்து கொல்லம் நவீன தேசிய நெடுஞ்சாலை, சென்னை, கொச்சி உள்ளிட்ட 5 மீன் பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும், புதிதாக 7 ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும் என்றெல்லாம் சொன்னார்கள். அவையெல்லாம் என்ன நிலையில் இருக்கிறது என சொல்வார்களா?

பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் இந்தியப் பங்குச்சந்தைகள் விடுமுறையில் இருக்கும். ஆனால், ஞாயிற்றுக் கிழமை ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால் பங்குச்சந்தைகள் செயல்பட்டன. அதன் விளைவு என்ன தெரியுமா? பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவு காரணமாக முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. ஒன்றிய பட்ஜெட்டில் பலனே இல்லை என்பதைப் பங்குச் சந்தையே பறைசாற்றிவிட்டது.
தமிழ்நாட்டை முழுவதுமாக புறக்கணித்த பட்ஜெட்டை வெட்கமேயில்லாமல் வரவேற்று அறிக்கை விடுகிறார் அடிமை பழனிசாமி. சொல்வதற்கு ஒன்றுமேயில்லாமல் தொடர்ந்து 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ள நிதி அமைச்சருக்கு வாழ்த்துகள் என்று அறிக்கை வெளியிடுகிறார்.

அதிமுகவோ பாஜகவோ எத்தனை முகமூடிகளை அணிந்து வந்தாலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்ல இனி எப்போதும் தமிழ்நாட்டில் தலையெடுக்க முடியாது. இதனை உணர்ந்து கொண்டதால்தான் ஒன்றிய பட்ஜெட்டில்கூட தமிழ்நாட்டை வஞ்சித்திருக்கிறார்கள். பட்ஜெட்டில் தமிழ்நாட்டை ஒன்றும் செய்யாமல் வஞ்சிக்கும் பாஜக அரசுக்கு அவர்களின் அடிமைகளுக்கும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்’ எனத் தெரிவித்தார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

திரு​வொற்​றியூர் நெடுஞ்சாலைக்கு ‘வள்ளலார் நெடுஞ்​சாலை’ என பெயர் சூட்​டப்​படும் – முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறிவிப்பு

திரு​வொற்​றியூர் நெடுஞ்சாலைக்கு ‘வள்ளலார் நெடுஞ்​சாலை’ என பெயர் சூட்​டப்​படும் – முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறிவிப்பு

Thiruvottiyur Highway to be named ‘Vallalar Highway’ – Chief Minister M.K. Stalin’s announcement

  • நாட்​டினரிட​மும் வள்​ளலாரின் உயரிய கருத்​துகளை கொண்டு சேர்க்க, வரும் பிப்​ர​வரி 15-ம் தேதி சென்னை கீழ்ப்​பாக்​கம் ஏகாம்​பர​நாதர் பள்ளி வளாகத்​தில் ‘

    அனைத்​துலக வள்ளலார் மாநாடு 2026’ நடத்​தப்​படும்.

  • தன்னை நாடி வந்த அன்​பர்​களுக்கு ஆண்​ட​வரை அடை​யும் அருளியலை வழங்​கு​வதோடு, தேனினும் இனிய திரு​வருட்​பாக்​களின் மூலம் மனிதகுலம் நீடூழி வாழ்​வதற்​கான ஒழுக்க நெறி​முறை​களை​யும் போதித்த வள்​ளலாரை எந்​நாளும் நினை​வில் வைத்து போற்​று​வோம்

 

சென்னை, பிப்​. 02

திரு​வொற்​றியூர் நெடுஞ்சாலைக்கு ‘வள்ளலார் நெடுஞ்​சாலை’ என பெயர் சூட்​டப்​படும் என்று தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

வள்ளலார் தினத்​தையொட்டி நேற்று தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: வள்ளலார் பிறந்​த​நாள் தனிப்​பெரும் கருணை நாள்; ஓராண்டு தொடர் கொண்​டாட்​ட​மாக வள்ளலார் முப்​பெரும் விழா; வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்​லம் புனரமைப்பு என வள்​ளலாரின் புகழைப் போற்​று​வதன் தொடர்ச்​சி​யாக, அயல் நாட்​டினரிட​மும் வள்​ளலாரின் உயரிய கருத்​துகளை கொண்டு சேர்க்க, வரும் பிப்​ர​வரி 15-ம் தேதி சென்னை கீழ்ப்​பாக்​கம் ஏகாம்​பர​நாதர் பள்ளி வளாகத்​தில் ‘அனைத்​துலக வள்ளலார் மாநாடு 2026’ நடத்​தப்​படும்.

இதையும் படியுங்கள் : மத்​திய பட்​ஜெட் மக்​கள் விரோத பட்ஜெட் – மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி கடுமை​யாக சாடல்

மேலும், வள்ளலார் நெறி​யாளர்​களின் கோரிக்​கையை ஏற்​று, திரு​வொற்​றியூர் நெடுஞ்​சாலைக்கு ‘வள்ளலார் நெடுஞ்​சாலை’ என பெயர் சூட்​டப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

டிடிவி தினகரன்: அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன் சமூகவலை​தளப் பதி​வில், “இறைவன் ஒளி வடிவ​மானவர் என்​பதை மக்​களிடம் கொண்டு சேர்க்க சத்​திய ஞான சபையை நிறுவிய வரும், ஏழை, எளிய மக்களின் பசிப்​பிணியை போக்கு​வதே ஆகச்​சிறந்த இறைப்​பணி என்​ப​தில் உறு​தி​யாக இருந்​தவரு​மான அருட்​பெருஞ்​ஜோதி வள்ளலார், ஜோதி வடி​வான தினம் இன்று (நேற்​று).

தன்னை நாடி வந்த அன்​பர்​களுக்கு ஆண்​ட​வரை அடை​யும் அருளியலை வழங்​கு​வதோடு, தேனினும் இனிய திரு​வருட்​பாக்​களின் மூலம் மனிதகுலம் நீடூழி வாழ்​வதற்​கான ஒழுக்க நெறி​முறை​களை​யும் போதித்த வள்​ளலாரை எந்​நாளும் நினை​வில் வைத்து போற்​று​வோம்” என்று தெரி​வித்​துள்​ளார்​.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

மத்​திய பட்​ஜெட் மக்​கள் விரோத பட்ஜெட் – மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி கடுமை​யாக சாடல்

மத்​திய பட்​ஜெட் மக்​கள் விரோத பட்ஜெட் – மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி கடுமை​யாக சாடல்

Central Budget is an anti-people budget – West Bengal Chief Minister Mamata Banerjee strongly criticizes

  • மத்​திய பட்​ஜெட் திசையற்றது, தொலைநோக்​குப் பார்​வையற்​றது, செயலற்றது. இது பெண்​கள், விவ​சா​யிகள், மாணவர்​கள் மற்​றும் எஸ்​சி, எஸ்​டி, ஓபிசி பிரி​வினருக்கு எதி​ரானது. குறிப்​பாக மேற்கு வங்​கத்​துக்​கான அறி​விப்​பு​கள் பட்ஜெட்டில் இடம்​பெற​வில்​லை.

  • திரிண​மூல் பொதுச் செய​லா​ளர் அபிஷேக் பானர்ஜி கூறுகை​யில், “81 நிமிட பட்​ஜெட் உரை​யில் மேற்கு வங்​கம் என்ற பெயரே இடம் பெற​வில்​லை.

 

கொல்​கத்தா, பிப். 02

2026–27- க்கான மத்​திய பட்​ஜெட் மக்​கள் விரோத பட்ஜெட் என்று மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி கடுமை​யாக சாடி​யுள்​ளார். தலை​மைத் தேர்​தல் ஆணையர் ஞானேஷ் குமாரை டெல்​லி​யில் இன்று மம்தா பானர்ஜி சந்​திக்க உள்​ளார். இதற்​காக, நேற்று கொல்​கத்தா விமான நிலை​யத்​துக்கு வந்த அவர் செய்​தி​யாளர்​களை சந்​தித்​தார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: மத்​திய பட்​ஜெட் திசையற்றது, தொலைநோக்​குப் பார்​வையற்​றது, செயலற்றது. இது பெண்​கள், விவ​சா​யிகள், மாணவர்​கள் மற்​றும் எஸ்​சி, எஸ்​டி, ஓபிசி பிரி​வினருக்கு எதி​ரானது. குறிப்​பாக மேற்கு வங்​கத்​துக்​கான அறி​விப்​பு​கள் பட்ஜெட்டில் இடம்​பெற​வில்​லை. சமூகப் பாது​காப்​புத் திட்டங்​களும் இல்​லை.

தேர்​தலில் தோல்​வியடைவோம் என்ற அச்​சத்​தில் பொருளா​தார ரீதி​யாக வங்​கத்தை அவர்​கள் புறக்​கணிக்​கிறார்​கள். மத்​திய பட்​ஜெட் பொய்​களின் குவிய​லாக உள்ளது. ஜிஎஸ்டி மூலம் மேற்கு வங்​கத்​திலிருந்து வரு​வாயைப் பெறும் மத்​திய அரசு, மாநிலத்​திற்கு அதை திருப்பித் தரு​வ​தில்​லை. நான் ரயில்வே அமைச்​ச​ராக இருந்​த​போது அறி​வித்த டன்​குனி – சூரத் சரக்கு வழித்​தடத் திட்​டம் தொடர்ந்து முடக்​கப்​பட்​டுள்​ளது. இது ஒரு மக்​கள் விரோத வெற்று பட்ஜெட். இவ்​வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

திரிண​மூல் பொதுச் செய​லா​ளர் அபிஷேக் பானர்ஜி கூறுகை​யில், “81 நிமிட பட்​ஜெட் உரை​யில் மேற்கு வங்​கம் என்ற பெயரே இடம் பெற​வில்​லை. மத்​திய அரசு மேற்கு வங்க மக்​களை வங்க தேசத்​தவர்​களாகப் பார்க்​கிற​தா? 2021 தேர்​தல் தோல்விக்​குப் பிறகு மாநிலத்​துக்​கான நிதியை மத்​திய அரசு நிறுத்தி வைத்​துள்​ளது. இதற்கு வரும் தேர்​தலில் மக்​கள் தகுந்​த பதிலடி கொடுப்​பார்​கள்​” என்​றார்​.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

அரசு ஊழியர்கள் போராட்டம் பற்றிய கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது; தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

அரசு ஊழியர்கள் போராட்டம் பற்றிய கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது; தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

Statement regarding government employees’ protest has been misunderstood; Tamil Nadu Health Minister Ma. Subramanian clarifies

  • அரசு ஊழியர்களின் உழைப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை நன்கு உணர்ந்தவன். அதனால் எனது கருத்தினை அரசு ஊழியர்கள் யாரும் தவறுதலாக புரிந்து கொள்ள வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’

  • அரசு தேர்தலை சந்திக்க இருக்கிறது என்ற காரணத்தினாலே தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் எல்லோரும் பணி நிரந்தரம் கேட்டு போராடுவது இப்போது பேஷனாகிவிட்டது”

சென்னை, ஜன. 31

“நான் கூறிய அரசு ஊழியர்கள் போராட்டம் பற்றிய கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. உரிமைக்காக போராடுபவர்களை என்றைக்கும் மதிப்பவன் நான்” என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஒரு சில போராட்டங்கள் பற்றி கருத்துக் கூற நேரிடும்போது, நான் கூறிய அரசு ஊழியர்கள் போராட்டம் பற்றிய கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. உரிமைக்காக போராடுபவர்களை என்றைக்கும் மதிப்பவன் நான். ஏனென்றால் நானே அமைச்சர் ஆவதற்கு முன்பு ஒரு யூனியன் தலைவராக இருந்தவன் தான்.

அதிலும் குறிப்பாக, அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல அரசு ஊழியர்களின் உழைப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை நன்கு உணர்ந்தவன். அதனால் எனது கருத்தினை அரசு ஊழியர்கள் யாரும் தவறுதலாக புரிந்து கொள்ள வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஒப்பந்த மருத்துவப் பணியாளர்கள் போராட்டம் குறித்து நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அவர்கள் 6,7 சங்கங்களாக இருக்கிறார்கள். நாங்கள் அழைத்துப் பேசியிருக்கிறோம். அவர்கள் 2013-ல் அதிமுக ஆட்சியில் ஒப்பந்த ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டார்கள். அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் எடுக்கப்பட்ட தற்காலிக பணியாளர்கள்.
அரசு தேர்தலை சந்திக்க இருக்கிறது என்ற காரணத்தினாலே தற்காலிக பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் எல்லோரும் பணி நிரந்தரம் கேட்டு போராடுவது இப்போது பேஷனாகிவிட்டது” என்றார். அமைச்சரின் இந்த பேச்சு பெரும் சலசலப்பை உருவாக்கியது. அமைச்சரின் இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்தச் சூழலில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

0

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

Teacher Eligibility Test Results Published on Website

தேர்வு முடிவுகளை http://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறியலாம். பிப்.2-ம் தேதி முதல் சான்றிதழை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

இடஒதுக்​கீட்​டுப் பிரி​வினருக்கு டெட் தேர்ச்சி மதிப்​பெண் 5 சதவீதம் குறைக்​கப்​பட்​டு, அதற்​கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது

சென்னை, ஜன. 31

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்புவரை பணி​யாற்​றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்​ட​தாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகு​தித் தேர்வு (டெட்) தேர்ச்சி கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது.
கடந்த நவம்பர் மாதம் தமிழகத்தில் டெட் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுகளை சுமார் 4.2 லட்சம் பேர் எழுதியிருந்தனர். இத்தேர்வுகளின் முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை http://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறியலாம். மேலும் பிப்.2-ம் தேதி முதல் சான்றிதழை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணை வெளியீடு… மொத்​தம் 150 மதிப்​பெண்​கள் கொண்ட டெட் தேர்​வில் தேர்ச்சி பெற பொதுப் பிரி​வினர் 60 சதவீத மதிப்​பெண்​ணும் (90), இடஒதுக்​கீட்​டுப் பிரி​வினர் 55 சதவீத​மும் (82) எடுக்க வேண்​டும்.

இந்​நிலை​யில், ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, ஒடிசா மாநிலங்​களைப் பின்​பற்றி தமிழகத்​தி​லும் இடஒதுக்​கீட்​டுப் பிரி​வினருக்கு டெட் தேர்ச்சி மதிப்​பெண் 5 சதவீதம் குறைக்​கப்​பட்​டு, அதற்​கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது நினைவுகூறத்தக்கது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்