Tuesday, March 3, 2026
Google search engine
Homeசெய்திகள்உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு | முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு | முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு | முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

Funeral rites with state honors for organ donors | Chief Minister Stalin’s announcement

  • உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.

  • தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம்

சென்னை, செப். 23

உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு | முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு : இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் :பயிர் காப்பீடு தொகை கூடுதலாக தர வேண்டும் | தமிழக அரசிடம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.

தியாகங்களால் சாதனை

குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.

அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள்

தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments