Sunday, March 22, 2026
Google search engine
Homeதமிழகம்தமிழ்நாடு விருதுநகரில் மெகா ஜவுளி பூங்கா; பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் முதல் அமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாடு விருதுநகரில் மெகா ஜவுளி பூங்கா; பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் முதல் அமைச்சர் ஸ்டாலின்

  • மித்ரா திட்டத்தின் கீழ் மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்ற செய்தியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • ஜவுளி பூங்கா அமைக்க தமிழகத்தின் விருதுநகரை தேர்வு செய்ததற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை, மார்ச். 18

ஜவுளித் துறையை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ம.பி மற்றும் உ.பி.யில் பி.எம். மித்ரா திட்டத்தின் கீழ் மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்ற செய்தியை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே, மத்திய அமைச்சரவை அனுமதியளிதிருந்த நிலையில் இந்த அறிவிப்பு நேற்று வெளியானது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் 7 மெகா ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடை தயாரிப்பு பூங்காக்கள் அமைக்கப்படும்.

இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் பால் விநியோகம் தடை இல்லை ;எதிர் கட்சிகள் போராட்டத்தை தூண்டுகின்றன – அமைச்சர் நாசர் விளக்கம்

இதனால் 7 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 14 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஜவுளி பூங்கா அமைக்க தமிழகத்தின் விருதுநகரை தேர்வு செய்ததற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments