Home செய்திகள் நல்லதங்காள் அணை : விவசாயிகள் இழப்பீடு கேட்டு தொடர் காத்திருப்பு போராட்டம்

நல்லதங்காள் அணை : விவசாயிகள் இழப்பீடு கேட்டு தொடர் காத்திருப்பு போராட்டம்

0
நல்லதங்காள் அணை : விவசாயிகள் இழப்பீடு கேட்டு தொடர் காத்திருப்பு போராட்டம்

நல்லதங்காள் அணை : விவசாயிகள் இழப்பீடு கேட்டு தொடர் காத்திருப்பு போராட்டம்

Nallatangal Dam: Farmers continue to protest for compensation

  • அணைகட்டுவதற்கு 150 விவசாயிகளிடம் இருந்து 750 ஏக்கர் நிலம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கையகப்படுத்தினர்.

  • போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகன் சாமி தலைமை தாங்கினார்.

மூலனூர், ஆக .15

நல்லதங்காள் அணை : விவசாயிகள் இழப்பீடு கேட்டு தொடர் காத்திருப்பு போராட்டம் |மூலனூர் அருகே பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் ஓடையின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை கட்டுவதற்கு 1997-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. 2000-ம் ஆண்டில் அணை கட்டும் பணி தொடங்கியது. அணைகட்டுவதற்கு 150 விவசாயிகளிடம் இருந்து 750 ஏக்கர் நிலம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கையகப்படுத்தினர்.

கோர்ட்டில் வழக்கு

அணை கட்டுவதற்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இழப்பீடு கேட்டு 2003-ம் ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விவசாயிக்கு இழப்பீடு தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும் என்று 2019-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனாலும் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை.

ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு ‘சீல்’

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களை ‘சீல்’ வைத்தனர். ஆனால் அதன் பிறகும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் நல்லதங்காள் அணைப்பகுதியில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.

உரிய இழப்பீடு தொகை வழங்க ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் உரிய இழப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து நல்லதங்காள் அணையில் இருந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் மண் எடுத்துக்கொண்டு கோனாபுரத்தில் உள்ள கிராமத்திற்கு வந்தனர். அங்கு அந்த மண்ணுக்கு பூஜை செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உரிய இழப்பீடு தொகை தமிழக அரசு வழங்க வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்

அதனைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகன் சாமி தலைமை தாங்கினார். சங்க மாநில தலைவர் சண்முக சுந்தரம், மாநில செயலாளர் முத்துவிசுவநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போராட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோனேரிபட்டி பாலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.