ஜூலை 9-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் : வங்கி ஊழியர்கள் , தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் பங்கேற்பு 

ஜூலை 9-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் : வங்கி ஊழியர்கள் , தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் பங்கேற்பு

Nationwide strike on July 9: Bank employees, Tamil Nadu Secondary Teachers Association to participate

  • “AIBEA, AIBOA மற்றும் BEFI உள்ளிட்ட வங்கித் துறை தொழிற்சங்கங்கள் புதன்கிழமை நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் இணைய முடிவு

  • தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர வேலை நேரம் என்பதை உறுதி செய்திட வேண்டும். தனியார்மயமாக்கல் கொள்கைகளை எதிர்த்திட, பொதுத்துறை நிறுவனங்களை காத்திட வேண்டும். அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

புதுடெல்லி: ஜூலை.07

ஜூலை 9-ஆம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் பங்கேற்பார்கள் என வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்துடன் (AIBEA) இணைந்த வங்காள மாகாண வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “AIBEA, AIBOA மற்றும் BEFI உள்ளிட்ட வங்கித் துறை தொழிற்சங்கங்கள் புதன்கிழமை நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் இணைய முடிவு செய்துள்ளது. காப்பீட்டுத் துறையும் வேலைநிறுத்தத்தில் இணைய முடிவு செய்துள்ளது. வங்கி மற்றும் பிற நிதித் துறைகளில் வேலைநிறுத்தம் முழுமையாக இருக்கும்
மத்திய அரசின் கார்ப்பரேட் சார்பு பொருளாதார சீர்திருத்தங்கள், தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்து அனைத்துத் தொழில்களிலும் உள்ள 15 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: சாலை, மேம்பால பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசாணை வெளியீடு

”வேலைவாய்ப்பு உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9 ல் நடக்கும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் முழுமையாக பங்கேற்கும்,” என, சிவகங்கையில் சங்க பொதுச்செயலாளர் சங்கர் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: நாடு முழுவதும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும். 8 வது ஊதியக்குழு பலன்களை விரைந்து அரசு ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
தொழிலாளர் நலச்சட்டங்களை பாதுகாத்திட வேண்டும். தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர வேலை நேரம் என்பதை உறுதி செய்திட வேண்டும். தனியார்மயமாக்கல் கொள்கைகளை எதிர்த்திட, பொதுத்துறை நிறுவனங்களை காத்திட வேண்டும். அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திட வேண்டும்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

Related Articles

Stay Connected

0FansLike
3,849FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles