Sunday, March 22, 2026
Google search engine
Homeஇந்தியாரஷ்யா உக்ரைன் பிரச்சனையில் நாட்டாமை செய்யும் மோடி, மணிப்பூர் கலவரத்தை வேடிக்கை பார்ப்பதா? -வைகோ கண்டனம்

ரஷ்யா உக்ரைன் பிரச்சனையில் நாட்டாமை செய்யும் மோடி, மணிப்பூர் கலவரத்தை வேடிக்கை பார்ப்பதா? -வைகோ கண்டனம்

 

ரஷ்யா உக்ரைன் பிரச்சனையில் நாட்டாமை செய்யும் மோடி, மணிப்பூர் கலவரத்தை வேடிக்கை பார்ப்பதா -வைகோ கண்டனம்

pm modi takes care of russia ukraine issue but having fun in manipur riot  – vaiko condemns

மணிப்பூர், மே .27

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இட ஒதுக்கீடு சம்மந்தமான நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக மலை பழங்குடியினர் மற்றும் பழங்குடி அல்லாதவர்களுக்கு இடையே வன்முறை வெடித்திருக்கிறது.

மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது..

பத்தாயிரம் ராணுவ வீரர்களைக் குவித்தும் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து, பொது அமைதி கெட்டு கடந்த 22 நாட்களாக சின்னஞ் சிறிய மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது..

இதையும் படியுங்கள் : குடியுரிமை பெறுவதற்கு முன்பே குடும்பதினரை அழைத்து வரலாம் – கனடா அரசு அனுமதி

ரஷ்யா-உக்ரைன் பிரச்சினை

ரஷ்யா-உக்ரைன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாட்டாண்மை செய்யும் பிரதமர் மோடி, மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட முயற்சி எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது கவலை அளிக்கிறது. அசாம் சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் சென்று அமைதியை உருவாக்க முயற்சிக்காதது ஏன்? உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டிருந்த மணிப்பூர், சில ஆண்டுகளுக்கு முன்பு அமைதி வழிக்குத் திரும்பி, வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

ஊரடங்கு உத்தரவு

தற்போது மீண்டும் அமைதி சீர்குலைக்கப்பட்டு, இணையதளம் முடக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவந்து, அம்மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments