ஜனாதிபதி கன்னியாகுமரி வருகை ; சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஜனாதிபதி கன்னியாகுமரி வருகை

  • ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாளை (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார்.

  • நாளை கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு வர சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது (President’s visit to Kanyakumari)

கன்னியாகுமரி, மார்ச். 17

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் நாளை (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார்.

ஜனாதிபதி கன்னியாகுமரி வருகை

அங்கிருந்து கார் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு செல்லும் அவர், தனி படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்று பார்வையிடுகிறார். அங்கிருந்தபடி திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட உள்ளார்.

இதையும் படியுங்கள்: சீட்டா ஹெலிகாப்டர் விபத்து : லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டி, உதவி விமானி மேஜர் ஜெயந்த் கருகி உயிரிழப்பு

பின்னர் விவேகானந்த கேந்திரா சென்று பாரத மாதா கோயிலில் வழிபடுகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்புகிறார்.

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு குமரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும், நாளை கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு வர சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

Related Articles

Stay Connected

0FansLike
3,849FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles