Home செய்திகள் ​நாடாளு​மன்றத்தில் ராகுல் காந்தி சீனா பேச்சு ; நடவடிக்கை குறித்து சபாநாயகர் ஆலோசனை

​நாடாளு​மன்றத்தில் ராகுல் காந்தி சீனா பேச்சு ; நடவடிக்கை குறித்து சபாநாயகர் ஆலோசனை

0
​நாடாளு​மன்றத்தில் ராகுல் காந்தி சீனா பேச்சு ; நடவடிக்கை குறித்து சபாநாயகர் ஆலோசனை

​நாடாளு​மன்றத்தில் ராகுல் காந்தி சீனா பேச்சு ; நடவடிக்கை குறித்து சபாநாயகர் ஆலோசனை

Rahul Gandhi’s China remarks in Parliament; Speaker consults on action

  • ராகுலின் சீனா பேச்சு மீது நடவடிக்கை எடுப்​பது குறித்து சபா​நாயகர் தனது சட்ட நிபுணர்களிடம் ஆலோ​சனை

  • எம்​பி, தனது உரைக்கு முன்​பாக சபா​நாயகரின் அனு​மதி பெற வேண்டும். ஏனெனில், மக்​களவை விதி 349(I) விதியை மீறும் எம்​.பி. தனது பதவியை இழக்க நேரிடும்”

புதுடெல்லி, , பிப். 03

​நாடாளு​மன்றத்தில் ராகுல் காந்தி சீனா பேச்சு ; நடவடிக்கை குறித்து சபாநாயகர் ஆலோசனை: நாடாளு​மன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின்போது, விதி​களை ராகுல் காந்தி மீறி​யிருப்​ப​தாகத் தகவல்​கள் வெளி​யாகி உள்​ளது.

இவரது நடவடிக்கை மீது நாடாளுமன்ற விதி​களின்​படி சபாநாயகர் ஓம் பிர்லா நடவடிக்கை எடுத்​தால், ராகுலின் எம்பி பதவி பறிபோகும் எனக் கருதப்​படு​கிறது.

இது குறித்து நாடாளு​மன்ற அலு​வலக வட்​டாரம் கூறுகை​யில், ‘மக்களவை எம்​.பி. தனது பேச்​சில் ஒரு புத்​தகம், செய்​தித்​தாள் அல்​லது கடிதத்​தில் இருந்து மேற்​கோள் காட்​டு​வது, அவை​யின் நடவடிக்​கைகளுக்​குத் தொடர்​புடைய​தாக இருந்​தாலன்​றி, தடை செய்​யப்​பட்​டுள்​ளது. இதை மக்​களவை விதி 349(I) குறிப்​பிடு​கிறது.

இதையும் படியுங்கள் : தமிழகத்தின் வளர்ச்சியை மீண்டும் படுகுழியில் தள்ள நினைக்கும் சதியை முறியடிப்போம் – திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

எனவே அவ்​வாறு செய்​வதற்கு முன்பு சில விதி​களை அந்த எம்​.பி. பின்​பற்​று​வது மிக​வும் முக்​கி​யம். இந்த விதி​யின்​படி அந்த எம்​பி, தனது உரைக்கு முன்​பாக சபா​நாயகரின் அனு​மதி பெற வேண்டும். ஏனெனில், இந்த விதியை மீறும் எம்​.பி. தனது பதவியை இழக்க நேரிடும்” என்று தெரிவிக்​கின்​றனர்.

சபா​நாயகரின் அனு​மதி பெறாதது மட்​டுமின்​றி, ராகுல் காந்தி குறிப்​பிட்ட நூலானது இன்​னும் வெளி​யிடப்​பட​வில்​லை. ராகுலின் இந்த நடவடிக்கை நாடாளு​மன்​றக் குழு​வின் விசா​ரணைக்கு உகந்​த​தாக கருதப்​படு​கிறது. எனவே, ராகுலின் சீனா பேச்சு மீது நடவடிக்கை எடுப்​பது குறித்து சபா​நாயகர் தனது சட்ட நிபுணர்களிடம் ஆலோ​சனை செய்து வரு​வ​தாக​வும் தெரி​கிறது.

மேலும், இது​போன்ற தகவல்​களை சரி​ பார்க்​கு​மாறு ஆளும் கட்சி உறுப்​பினர்​கள் கோரலாம். இதன் அடிப்​படை​யில் அந்த விவ​காரம் நாடாளு​மன்ற சிறப்​புரிமைக் குழு​வுக்கு பரிந்​துரைக்​கப்பட வாய்ப்புள்​ளது. இதில் குற்​றம் நிரூபிக்​கப்​பட்​டால் சம்​பந்​தப்​பட்ட உறுப்​பினர் தனது எம்​.பி. பத​வியை இழக்​க நேரிடும்​ எனவும்​ கருத்துகள்​ எழுந்​துள்​ளன.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்