Home செய்திகள் தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பிற்கு தமிழ்நாடு அரசு சான்றோர் சிறப்பு விருது

தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பிற்கு தமிழ்நாடு அரசு சான்றோர் சிறப்பு விருது

0
தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பிற்கு தமிழ்நாடு அரசு சான்றோர் சிறப்பு விருது

தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பிற்கு தமிழ்நாடு அரசு சான்றோர் சிறப்பு விருது

Tamil Nadu Government’s Special Award for Scholars presented to South Korea Tamil Research Association

  • இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் தமிழ் மொழிக்கு சேவையாற்றிய அறிஞர்களுக்கு சிறப்பு விருதுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தார்.

  • கொரிய தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் இந்த சேவையை பாராட்டி, அந்த அமைப்பின் துணைத் தலைவர் கவிஞர் சகாய டர்சியூஸ் பீ -க்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பாராட்டு

மதுரை, ஜன. 7

உலகம் முழுவதும் தமிழ் மொழிக்கு சேவையாற்றும் சான்றோர் பெருமக்களை கவுரவிக்கும் வகையில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் நடத்திய சான்றோர் பெருவிழாவில், தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்புக்கு (SKTRA) சிறப்பு விருதும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டன.

மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் கடந்த 5 மற்றும் 6-ந் தேதிகளில் நடைபெற்ற விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று, இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் தமிழ் மொழிக்கு சேவையாற்றிய அறிஞர்களுக்கு சிறப்பு விருதுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தார்.

இதில் கடந்த நவம்பர் மாதம் 8 -ந் தேதி, தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள செஜோங் பல்கலைக்கழகத்தில், கொரிய தமிழ் ஆராய்ச்சி அமைப்பு நடத்திய ‘கொரிய முதல் பன்னாட்டு திருக்குள் ஆய்வு மாநாட்டில், ‘திருக்குறளுக்கும், சமூக தொடர்புகளின் ஒப்பீடு’ குறித்து தென் கொரியா உள்பட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு தலைப்பில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, பரிசளித்து கவுரவிக்கப்பட்டனர்.

கொரிய தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் இந்த சேவையை பாராட்டி, அந்த அமைப்பின் துணைத் தலைவர் கவிஞர் சகாய டர்சியூஸ் பீ -க்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார் .
நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சுகி.சிவம், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர்/இயக்குனர் முனைவர் இ.சா. பர்வீன் சுல்தானா மற்றும் தமிழறிஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்