Sunday, March 22, 2026
Google search engine
Homeகல்வி / கலைடி.என்.பி.எஸ்.சி. தேர்வு

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு : தமிழகத்தில் 126 மையங்களில் 35, 286 பேர் தேர்வில் பங்கேற்பு

சென்னை, ஜன .29

சென்னையில் அமைக்கப்பட்ட 18 மையங்களில் 4608 பேர் தேர்வு எழுதினார்கள்.ஹால்டிக்கெட், அடையாள அட்டை கொண்டு வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-3 ஏ பதவிக்கான எழுத்து தேர்வு தமிழகத்தில் நேற்று நடந்தது. தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலை பணிகளில் புள்ளியியல் உதவி ஆய்வாளர் பதவியில் 211 பேர், கணக்காளர்- 5, புள்ளியியல் தொகுப்பாளர் ஒருவர் என மொத்தம் 217 காலி பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் நடைபெற்றது. இதற்கான தேர்வு மையங்கள் கல்லூரிகள், பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்தன.

தேர்வு எழுதுவதற்காக தேர்வர்கள் காலை 8 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வர தொடங்கினர். பின்னர் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு எழுதும் அறைக்கு சென்றனர். முன்னதாக அவர்களது நுழைவு சீட்டை அதிகாரிகள் சரி பார்த்தனர். இதில் ஹால்டிக்கெட், அடையாள அட்டை கொண்டு வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையங்களுக்கு வராதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையத்தில் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் தேர்வு மையங்களில் வீடியோ மூலமும் தேர்வு கண்காணிக்கப்பட்டது.

இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து 35 ஆயிரத்து 286 பேர் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த தேர்வு காலை, பிற்பகல் என 2 கட்டமாக நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை தேர்வு நடந்தது. பிற்பகலில் 2.30 மணி முதல் 5.30 மணி வரை தேர்வு நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 126 மையங்களில், 35 ஆயிரத்து 286 பேர் தேர்வு எழுதினார்கள். சென்னையில் மட்டும் 18 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு 4608 பேர் தேர்வு எழுதினார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments