‘ஏற்றமிகு ஏழு திட்டங்கள்’ தொடக்க விழா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

 

 

  • சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘ஏற்றமிகு ஏழு திட்டங்கள்’ தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். 

  • தி.மு.க. அரசு ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளை ஈர்த்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கான செயல் திட்டத்தை ஆட்சிக்கு வருவதற்கு முன்பே சொன்னேன்.  சுமார் 52 ஆண்டு அரசியலுக்காக னது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

 

சென்னை,பிப். 28

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘ஏற்றமிகு ஏழு திட்டங்கள்’ தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர், உயர்தர கல்வி, உயர்தர மருத்துவம் என்ற இலக்கை நோக்கிய பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

முதல்வராக பதவி ஏற்றவுடன் முதலில் கையெழுத்திட்ட கோப்பு ‘இலவச பேருந்து பயணம்’. மகளிர் மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது.

தூய்மை பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற தனியாருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம். மாநிலத்தின் பல்வேறு பகுதியில் படிப்படியாக இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.

குழந்தைகள் நலனை காக்க சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்.  இளைஞர்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் வகையில் உள்ள ‘நான் முதல்வர் திட்டம்’, தமிழக மாணவர்கள், இளைஞர்கள், கல்வி, சிந்தனை திறனில் முன்னேற்றவே நான் முதல்வர் திட்டம்.

தி.மு.க. அரசு ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான புதிய முதலீடுகளை ஈர்த்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கான செயல் திட்டத்தை ஆட்சிக்கு வருவதற்கு முன்பே சொன்னேன்.  சுமார் 52 ஆண்டு அரசியலுக்காக னது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன்.  இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இதைத்தொடர்ந்து ‘ஏற்றமிகு ஏழு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

 

 

 

Related Articles

Stay Connected

0FansLike
3,849FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles