
திருச்சியில் மர்ம காய்ச்சலால் இளம் பெண் பலி
Young woman dies of mysterious fever in Trichy
-
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை
-
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 113 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளாக மாநில அரசு தகவல்
திருச்சி, செப். 15
திருச்சியில் மர்ம காய்ச்சலால் இளம் பெண் பலி: மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி எதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
டெங்கு காய்ச்சல்
தற்போது தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி, திருவானைக்காவல், நரியன் தெருவை சேர்ந்த ராஜ சுகுமார் என்பவரது மனைவி கனகவல்லி வயது 38 மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்து உள்ளார்.
இதையும் படியுங்கள் : மதுரையில் இன்று ம.தி.மு.க. மாநில மாநாடு | பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு
மருத்துவமனையில் சிகிச்சை
இவர் சில தினங்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
மர்ம காய்ச்சல்
அவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி ஏதும் இல்லை என ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்துள்ளது. மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 113 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளாக மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.