
ஒரு கோடி குடும்பத்தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
1 crore family female heads benefits by magalir urimai thogai
-
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும் என்று அமைச்சர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்
-
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூக நீதி திட்டங்களிலேயே மாபெரும் முன்னெடுப்பாக வரலாற்றில் விளங்க மகத்தான மகளிர் உரிமை தொகை வழங்கக் கூடிய திட்டம் ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அமைந்திடும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
சென்னை, மார்ச்.27
நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமான தொழிலில் பணிபுரியும் மகளிர், சொற்ப ஊதியங்களில் வேலை செய்திடும் மகளிர், இல்லங்களில் பணியாற்றும் மகளிர் என ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் பயன்பெறுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.


நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலை கடற்கரை விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமான தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகளில் சொற்ப ஊதியங்களில் வேலை செய்திடும் மகளிர், ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் பணியாற்றும் மகளிர் என பலரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் பயன்பெறுவார்கள். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்
இந்த திட்டத்திற்கான முதல் நோக்கம் பெண்களுக்கு அங்கீகாரம் கொடுப்பது தான். இரண்டாவது நோக்கம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாகும். இதனை செய்ய முடியுமா, நிதி இருக்குமா என்று கேள்வி எழுப்பி, அச்சத்தை வெளிப்படுத்தி வந்தவர்களுக்கு பதிலளிக்கும் வகையில், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூக நீதி திட்டங்களிலேயே மாபெரும் முன்னெடுப்பாக வரலாற்றில் விளங்க மகத்தான மகளிர் உரிமை தொகை வழங்கக் கூடிய திட்டம் ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அமைந்திடும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்