கேரளாவின் நிலச்சரிவில் 43 பேர் பலியான கோரம் : பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் இரங்கல் அறிக்கை

கேரளாவின் நிலச்சரிவில் 43 பேர் பலியான கோரம் : பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் இரங்கல் அறிக்கை

43 killed in Kerala landslide: Prof. MH Jawahirullah condolence report

  • சாலைகள், பாலங்கள் என வழித்தடங்கள் புதைந்து இப்பகுதிகள் தனித்தீவில் 500 வீடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளனர்.

  • மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கல் குவாரிகள் வரம்பு மீறி ஏற்படுத்தியதும் மண்ணின் தன்மையை பலவீனப்படுத்தும்  வகையில் கட்டுமானங்களை நிறுவியதும் தான் என சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஜூலை. 30

கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பலியான துயர சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருப்பதாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லாஹ் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :கேரளாவில் வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் துயரத்தை ஏற்படுத்துகின்றது.

இன்று அதிகாலை 2 மணி தொடங்கித் தொடர் நிலச்சரிவு ஏற்பட்டு வயநாடு மாவட்டத்தில் பல பகுதிகளில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதனால் சாலைகள், பாலங்கள் என வழித்தடங்கள் புதைந்து இப்பகுதிகள் தனித்தீவில் 500 வீடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி இதுவரை  பலியானோர் எண்ணிக்கை 43 ஆக உயரந்துள்ளது.

இந்த சம்பவத்தால் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளும் வாழ்வாதார இழப்புகளும் பெரும்கவலை அளிக்கிறது.
மாநில அரசு உரிய மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெரும்துயரிலிருந்து அந்த பகுதி மக்கள் மீண்டு வருவதற்கு இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.

இந்த நிலைக்குக் காரணமாக மிகவும் கடினமான பாறைகள் உள்ளடக்கிய மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கல் குவாரிகள் வரம்பு மீறி ஏற்படுத்தியதும் மண்ணின் தன்மையை பலவீனப்படுத்தும்  வகையில் கட்டுமானங்களை நிறுவியதும் தான் என சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதையும் படியுங்கள் : மூளையை திண்ணும் அமீபா வைரஸ் தாக்கி உயிர் பிழைத்த கேரளா சிறுவன் : தடுப்பது எப்படி? -மருத்துவர் அறிவுரை

தமிழ்நாட்டிலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி ,கோவை மற்றும் இன்ன பிற மாவட்டங்களில் கல்குவாரிகள் எண்ணிலடங்கா வகையில் உருவாக்கப்பட்டு இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கேரளாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தமிழ்நாட்டிற்கும் எதிர்காலத்தில் ஏற்படாத வகையில் இயற்கை சுரண்டலைத் தடுத்து நிறுத்த முனைப்புக் காட்ட வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு மனிதநேய மக்கள் கட்சியின்

 எம். எச். ஜவாஹிருல்லாஹ்  தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்