
-
சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
-
நாடுமுழுவதும் 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யவும், முடக்கவும் மத்திய அரசு நடவடிக்கை.
டெல்லி, பிப் .05
ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகள் மூலம் பலர் பாதிக்கப்பட்டும், சிலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். இதனால் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
சிறுவர்கள் , இளைஞர்கள் , பெண்கள் இவர்களை குறி வைத்து ஆன்லைன் சூதாட்ட செயலிகள் இயங்குகின்றன .இவை பெரும்பாலும் சீன செயலிகள். இதில் சிக்குபவர்கள் பணம் மரியாதை எல்லாவற்றையும் இழந்து தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் . சமூகத்தின் சீர்கேடான இந்த செயலிகளில் இருந்து விடுவிக்க , தவிர்க்க மத்திய அரசு இவற்றை தடை செய்துள்ளது .
சாமானிய மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை ஏதொ ஒரு பண தேவைக்காக லோன் கிடைக்குமா என தேடுகிறார்கள். இவர்கள் எளிதில் சிக்கி தவிப்பது இந்த ஆன்லைன் லோன் செயலிகளில், இருப்பதையும் இழந்து தவித்து வருகிறார்கள்.
மேலும், லோன் தேவைபடாதவரையும் தொடர்ந்து தொல்லை செய்து லோனை தந்து, திருப்பி செலுத்த தாமதமாயின் மிக கொடூரமாக வசூல் செய்யும் இந்த ஆன்லைன் செயலிகள் பல உயிர்களை காவு வாங்கும் இந்த செயலியையும், நடை பிணமாக்கும் ஆன்லைன் சூதாட்ட செயலிகளையும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் நாடுமுழுவதும் 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யவும், முடக்கவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. உடனடி மற்றும் அவசர நடவடிக்கையாக சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடங்கியுள்ளது
அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.