Friday, April 3, 2026
Google search engine
Homeசினிமா"நடிகை த்ரிஷா குறித்து வாய் தவறி பேசிவிட்டேன், அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்" -மன்னிப்பு கோரிய நைனார்...

“நடிகை த்ரிஷா குறித்து வாய் தவறி பேசிவிட்டேன், அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்” -மன்னிப்பு கோரிய நைனார் நாகேந்திரன்

“நடிகை த்ரிஷா குறித்து வாய் தவறி பேசிவிட்டேன், அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்” -மன்னிப்பு கோரிய நைனார் நாகேந்திரன்

“I made a mistake in my speech about actress Trisha, I apologize for that” – Nainar Nagendran apologizes

  • மாநில அரசியலில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்தை பொதுவெளியில் வெளியிடுவார் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை -நடிகை த்ரிஷா
  • “எந்தவொரு தனிநபர் விமர்சனத்தையும் நான் அனுமதிப்பதில்லை, அன்றைக்கு திரிஷா பற்றி வாய் தவறி வந்த ஒரு வார்த்தை” – நயினார் நாகேந்திரன் மன்னிப்பு

சென்னை, பிப். 16
“நடிகை த்ரிஷா குறித்து வாய் தவறி பேசிவிட்டேன், அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்” என்று பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் மன்னிப்புக் கோரி உள்ளார்.

இது குறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “என்னுடைய அரசியல் வாழ்க்கையில் எந்தவொரு தனிநபர் விமர்சனத்தையும் நான் அனுமதிப்பதில்லை. நானும் அவ்வாறு பேசியதில்லை. அன்றைக்கு அது வாய் தவறி வந்த ஒரு வார்த்தை. அது குறித்து எங்கள் கட்சியின் அகில இந்திய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் என்னிடம் பேசினார். நேற்று முன்னாள் தலைவர் அண்ணாமலையின் வீட்டுக்குச் சென்றபோது அவரும் இந்த விவகாரம் குறித்து பேசினார்.

உண்மையில் யாரேனும் இதில் வருத்தப்படுவார்களேயானால், என்னுடைய வருத்தத்தை நான் மனப்பூர்மாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்

முன்னதாக இன்று நயினார் நாகேந்திரனின் பேச்சு குறித்து நடிகை த்ரிஷாவின் தரப்பில் வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கையில், ‘ மாநில அரசியலில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்தை பொதுவெளியில் வெளியிடுவார் என்று எனது கட்சிக்காரர் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

Nainar Nagendran Apologizes
Nainar Nagendran Apologizes

எனது கட்சிக்காரர், எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்திருக்கவில்லை என்பதையும், அவ்வாறு இருக்கவும் விரும்பவில்லை என்பதையும் மிகத் தெளிவாகக் கூறுகிறார். மேலும், எனது கட்சிக்காரர் கடந்த காலங்களில் இருந்தது போலவே, அரசியலில் எப்போதும் நடுநிலையான நிலைப்பாட்டையே எடுத்துள்ளார்’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் – திரிஷா குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவதூறாக பேசியது பெரும் சலசலப்பை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள https://youtube.com/@puthiyaparimaanamtv?si=SolekPVP0AW0JHum மற்றும் https://puthiyaparimaanam.com/ தவறாமல் பாருங்கள்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments