Home செய்திகள் சூறாவளிக் காற்று : மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சூறாவளிக் காற்று : மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

0
சூறாவளிக் காற்று : மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Cyclone: ​​Fishermen prohibited from going to sea - Chennai Meteorological Department warns

சூறாவளிக் காற்று : மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Cyclone: ​​Fishermen prohibited from going to sea – Chennai Meteorological Department warns

  • செப்.22 முதல் 26-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

  • இன்றுமுதல் 24-ம்தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

சென்னை, செப். 21

சூறாவளிக் காற்று : மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செப்.22 முதல் 26-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்றுமுதல் 24-ம்தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்