Home Blog Page 115

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து மிட்செல் விலகல்

டெல்லி, ஜன. 31

இந்திய சுற்றுப் பயணத்துக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி நல்ல நிலையில் உள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் நிறைய நல்ல கிரிக்கெட்டை பார்க்கலாம் என மிட்செல் ஸ்டார்க் கூறினார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது.

இந்த நிலையில் கைவிரல் காயம் காரணமாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து விலகி உள்ளார். விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வருவதால் இந்தியாவுக்கு எதிரான தொடக்க டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும் போது இந்திய சுற்றுப் பயணத்துக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி நல்ல நிலையில் உள்ளது. இந்தியாவில் நீண்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறோம். அடுத்த இரண்டு மாதங்களில் நிறைய நல்ல கிரிக்கெட்டை பார்க்கலாம் என்றார்.

ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தல் மன்னன் போட்டி

 

ஈரோடு, ஜன. 31

முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன். முதலில் விழிப்புணர்வுக்காக தேர்தலில் போட்டியிட்டேன். பின்னர் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டதால் எனது நண்பர்கள் உறவினர்கள் கிண்டலடித்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று தேர்தல் மன்னன் மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் (65) என்பவர் 233-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டம் மேட்டூர் எனக்கு சொந்த ஊர் ஆகும். டயர் பஞ்சர் கடை வைத்துள்ளேன். முதல் முதலாக 1988-ம் ஆண்டு மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டேன். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன்.

இதுவரை 32 எம்.பி. தேர்தல், 6 ஜனாதிபதி தேர்தல்கள், 6 துணை ஜனாதிபதி தேர்தல்கள், 72 சட்டமன்ற தேர்தல்கள், கர்நாடகாவில் 3 தேர்தல்கள், கவுன்சிலர் தேர்தல்கள் பஞ்சாயத்து யூனியன் தேர்தல்கள், பஞ்சாயத்து தலைவர் தேர்தல், வார்டு உறுப்பினர் தேர்தல், கூட்டுறவு தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு உள்ளேன்.

இலங்கை விமானங்களுக்கு சென்னையில் இருந்து எரிபொருள்

ஆலந்தூர், ஜன.31

சென்னை விமான நிலையத்தில் இலங்கை விமானத்தின் பெரிய ரக ஏ330 விமானத்தில் எரிபொருள் நிரப்பப்படுகிறது. கடந்த ஆண்டு இலங்கை விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஒப்பந்தம் செய்தது போல இந்த முறையும் செய்யப்பட்டு இருக்கிறது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் இலங்கையில் விமானங்களுக்கான எரி பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டு விமானங்களில் நிரப்புவதற்கு போதுமான எரிபொருள் கையிருப்பு இல்லை. இதனால் இலங்கையில் இருந்து மெல்பேர்ன், சிட்னி, டோக்கியோ போன்ற தொலைதூர நாடுகளுக்கு செல்ல விமானங்களுக்கு போதுமான எரிபொருள் இல்லாத நிலை உள்ளது.

இதனால் மீண்டும் சென்னை, திருவனந்தபுரம், கொச்சின் ஆகிய விமான நிலையங்களில் இலங்கை விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலையத்தில் இலங்கை விமானத்தின் பெரிய ரக ஏ330 விமானத்தில் எரிபொருள் நிரப்பப்படுகிறது.

ஆளில்லாத இந்த பெரிய ரக விமானத்தில் பெட்ரோல் மட்டும் சென்னை விமான நிலையத்தில் நிரப்பப்பட்டு மீண்டும் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த பெரிய ரக விமானத்தில் இருந்து மற்ற இலங்கை விமானங்களுக்கு அது பயன்படுத்தப்படுகிறது.

இதற்காக கடந்த ஆண்டு இலங்கை விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஒப்பந்தம் செய்தது போல இந்த முறையும் செய்யப்பட்டு இருக்கிறது. இலங்கையில் இருந்து அருகில் உள்ள திருவனந்தபுரம், கொச்சி ஆகிய விமான நிலையங்களில் இருந்தும் இலங்கை பெரிய ரக விமானங்கள் எரிபொருள் நிரப்பி தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்கின்றன.

பச்சை வால் நட்சத்திரத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் – விஞ்ஞானி எபினேசர் செல்லசாமி

கொடைக்கானல், ஜன. 31

50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பூமி சுற்று வட்ட பாதைக்கு வரும் பச்சை வால் நட்சத்திரத்தை பிப்.1  முதல் 4 மாதங்களுக்கு வெறும் கண்களால் பார்க்கலாம் என கொடைக்கானல் சூரிய ஆராய்ச்சிக்கூட விஞ்ஞானி எபினேசர் செல்லசாமி தெரிவித்தார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், கூறியதாவது: “பரந்த வான்வெளியில் சிறிய மாற்றங்களைக்கூட கண்டறியும் ஜூவிகி தொலைநோக்கி மூலம் இந்த பச்சை வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டது.

இந்த வால் நட்சத்திரம் ஜன.12-ம் தேதி சூரியனை கடந்து பிப்.1  பூமிக்கு மிக அண்மையில் வரும். அதாவது, கடந்த 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிகழ்வு நடக்கிறது. இதை தொலைநோக்கியின் உதவி இல்லாமல் வெறும் கண்களால் பார்க்க முடியும்.

இந்திய வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் இந்த வால் நட்சத்திரத்தை நிறநிரல்மானி (ஸ்பெக்ட்ரோஸ்கோப்) மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.  பிப்.1-ம் தேதி காலை 4 மணி வரை இந்த நட்சத்திரத்தை பார்க்க முடியும். தொடர்ந்து, அடுத்து 4 மாதங்களும் வெவ்வேறு கால நிலைகளில் இந்த நட்சத்திரத்தை பார்க்கலாம்” என்றார்.

அண்மைச்செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ செய்தி சேனலை தவறாது பாருங்கள்.

திருப்பதி அருகே தனியார் பேட்டரி தொழிற்சாலையில் தீ விபத்து

திருப்பதி,  ஜன. 31

தொழிற்சாலையில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், சித்தூர் புறநகர் பகுதியான சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி யாதமரி என்ற இடத்தில் தனியார் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான கல்லா அருணகுமாரிக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில் 3000-த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 3 ஷிப்ட் முறையில் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் டியூப்ளர் பேட்டரி தயாரிக்கும் பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட தொழிலாளர்கள் அங்கிருந்த தீயணைப்பான்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களது முயற்சி பலனளிக்காததால் தீ வேகமாக பற்றி எரிய தொடங்கியது.

தொழிற்சாலையில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து சித்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் பெத்தி ரெட்டி தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுப்படுத்த முயன்றனர்.

சித்தூர் டிஎஸ்பி சீனிவாச மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்குள் தொழிற்சாலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்த பேட்டரிகள் வெடித்து சிதறின. விண்ணை தொடும் அளவிற்கு புகை கிளம்பியதால் நள்ளிரவு வரை தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.

பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் யாருக்கும் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை. பல கோடி மதிப்பிலான எந்திரங்கள் மற்றும் பேட்டரிகள் எரிந்து நாசமானதாக தெரிவித்தார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தொழிற்சாலையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்தது தெரிய வந்துள்ளது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அன்மை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ செய்தி சேனலை தவறாது பாருங்கள்.

ஜி-20 நாடுகளின் மாநாடு: புதுச்சேரியில் அறிவியல் 20 அமைப்பின் ஆரம்ப நிலை கூட்டம்

புதுச்சேரி, ஜன.30

எதிர்கால தலைமுறையினர் பிரச்சினைக்கு அறிவியல் தொழில்நுட்பத்தால் தீர்வு காண்பது அவசியம் என ஜி-20 மாநாட்டில் அறிவியல் 20 அமைப்பின் தலைமை பொறுப்பு அதிகாரி அசுதோஷ் ஷர்மா கூறியுள்ளார்.

புதுச்சேரியில் ஜி20 அறிவியல் 20 ஆரம்ப நிலை கூட்டம் இன்று தொடங்கியது. பெங்களூரு இந்திய அறிவியல் கழக இயக்குனர் ரங்கராஜன் வரவேற்றார்.

இந்நிகழ்வை அறிவியல் 20 இந்திய தலைமை பொறுப்பு பேராசிரியர் அசுதோஷ் சர்மா தொடங்கி வைத்து பேசியது: “உலகளவில் வளர்ச்சிக்கு இன்றியமையாத கூறுகளாக அறிவியலையும், தொழில் நுட்பத்தையும் மதிக்கும் பல நாட்டு விஞ்ஞானிகள் கூட்டத்தை இந்தியா நடத்துவது பெருமைக்குரியது. அறிவியல் என்பது நமது பொருளாதார வளர்ச்சிக்கு மட்டும் பங்காற்றவில்லை.

சமூக சீர்திருத்தங்களுக்கும் அறவியல் உதவியுள்ளது. அறிவியலின் வளர்ச்சியல்தான் உலகில் வறுமை விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. அறிவியல், தொழில்நுட்பம் தேசிய தடைகளை நீக்குகின்றன. உலகை ஒருங்கிணைத்து அமைதியை முன்னெடுக்கின்றன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தக் கூற்று உலகின் எதிர்கால நம்பிக்கைக்கு வழிவகுக்கிறது. பலதரப்பு ஒத்துழைப்பு, நட்புறவுடன் புத்தாக்கங்களை உலகளவில் முன்னெடுக்க நாம் கூடியுள்ளோம். நமது எதிர்காலம் குறித்து விவாதிக்க உள்ளோம். இன்றைய தலைமுறை அறிவியல் வளர்ச்சி வசதிகளை பெற்று வளர்கிறது. இளைஞர்களின் எண்ணிக்கை மக்கள்தொகையில் பெரும்பங்கு வகிக்கிறது.

பிறக்கும் குழந்தைகள் நம்பிக்கையின் காலகட்டத்தில் பிறக்கின்றன. எதிர்கால தலைமுறைக்கு பல பிரச்சினைகள் உள்ளது. நமது வீடுகள், வாழ்க்கை டிஜிட்டல் மயமாகிவிட்டது. ஆனால் சமூகத்தில் இதற்கு இணையான மாற்றங்கள் மெதுவாகவே ஏற்படுகிறது. பெருமளவு மாற்றத்தை அறிவியல் தொழில்நுட்ப தீர்வுகள் மூலம் காண வேண்டும்.

இங்கு நடைபெறும் கூட்டம் இனி நடைபெறும் கூட்டங்களுக்கு கருத்து வரைவை உருவாக்கும். அறிவியல் உச்சநிலை கூட்டம் கோவையில் நடத்தப்படும்” என்று குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து பல அமர்வுகளாக கருத்தரங்குகள் நடந்து வருகிறது. இக்கூட்டத்தினுள் பார்வையாளர்கள், பத்திரிக்கையாளர் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அரங்கு சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

அன்மை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள https://puthiyaparimaanam.com செய்தி சேனலை தவறாது பாருங்கள்.

சர்வதேச ஒரு நாள் போட்டி : தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா

தென் ஆப்பிரிக்கா கேப்டன் தெம்பா பவுமா
தென் ஆப்ரிக்கா வெற்றி
புளூம்ஃபாண்டெய்ன், ஜன.30

புளூம்ஃபாண்டெய்னில் நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 343 ரன்கள் இலக்கை அனாயசமாக விரட்டி 5 பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியது.

தென் ஆப்பிரிக்கா கேப்டன் தெம்பா பவுமா 102 பந்துகளில் 109 ரன்களையும், அய்டன் மார்க்ரம் 49 ரன்களையும் பின்னால் இறங்கிய மில்லர் 37 பந்துகளில் 58 ரன்களையும் விளாச தென் ஆப்பிரிக்கா அணி இலக்கை விரட்டத் தொடங்கியது முதலே வெற்றி பெறுவோம் என்ற உத்வேகத்துடன் விரட்டியது.

South Africa won series

இந்த புளூம்ஃபாண்டெய்ன் மைதானத்தில் அதிகபட்ச இலக்கை விரட்டி வெற்றி பெறுவது இதுதான் முதல் முறை, இதற்கு முன்னர் 274 ரன்களைத்தான் இங்கு விரட்டியுள்ளனர்.

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவின் 3வது அதிக ரன் இலக்கை விரட்டலுமாகும் இது. இதன் மூலம் 10 உலகக்கோப்பை சூப்பர் லீக் புள்ளிகளாக 10 புள்ளிகளைப் பெற்ற தென் ஆப்பிரிக்கா 9வது இடத்தில் உள்ளது,

தானாகவே தகுதி பெறுவதற்கு சற்று வெளியே உள்ளது, தென் ஆப்பிரிக்காவுக்கு இன்னும் 4 ஒருநாள் போட்டிகளே உள்ளன. நெதர்லாந்துக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா வென்றுவிட்டால் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்று விடும்.

இந்த நிலையில்தான் பவுமாவின் சதம் முக்கியமான தருணத்தில் வந்துள்ளது. இது இவரது 3வது சதம். 33 சர்வதேச இன்னிங்ஸ்களுக்குப் பிறகு பவுமா சதமெடுத்துள்ளார்.

இங்கிலாந்து நேற்று 28/2 என்ற நிலையிலிருந்து கேப்டன் ஜாஸ் பட்லர் (94), ஹாரி புரூக் (80) மொயீன் அலி (51) ஆகியோரது

அதிரடி மூலம் 50 ஓவர்களில் 342/7 என்ற அதிகபட்ச ஸ்கோரை எட்டியது. இங்கிலாந்து அணி இதற்கு முன்னர் 5 ஒருநாள் போட்டிகளில் வரிசையாக உதை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய பிட்ச் வேகப்பந்துக்கு ஆரம்பத்தில் சாதகமாக இருந்தது. அதில் பார்னெல் (1/54), லுங்கி இங்கிடி (1/66) தொடக்கத்தில் அட்டகாசமாக வீசி இங்கிலாந்தை 28/2 என்று குறைத்தனர். முதல் போட்டியில் அதிரடி சதம் விளாசிய ஜேசன் ராய் இந்த முறை ஒற்றை இலக்க ஸ்கோரில் இங்கிடி இன்ஸ்விங்கரில் கிளீன் பவுல்டு ஆனார். டேவிட் மலான், பார்னெல் பந்தில் பிளம்ப் எல்.பி.ஆனார்.

பென் டக்கெட், ஹாரி புரூக் பயங்கரமான பந்து வீச்சைச் சந்தித்தனர், திணறினர். ஆனால் இதில் பென் டக்கெட் தாக்குப் பிடிக்கவில்லை கேசவ் மகராஜ் பந்தை தூக்கி அடித்து லாங் ஆஃபில் கேட்ச் ஆனார். இங்கிலாந்து 82/3 என்று தடுமாறியது. ஆனால் ஹாரி புரூக் சில அட்டகாசமான கிளாஸ் ஷாட்களை ஆடி 46 பந்துகளில் அரைசதம் விளாசினார். 75 பந்துகளில் 80 ரன்களை விளாசி, இவரும் பட்லரும் ஸ்கோரை 300க்கும் மேல் கொண்டு செல்வார்கள் என்று ஆட்டம் மாறிப்போனது. ஆனால் பவுமா அப்போது ஒரு ஸ்மார்ட் கேப்டன்சி செய்தார் பார்ட் டைம் ஸ்பின்னர் அய்டன் மார்க்ரமை வீச அழைக்க புரூக் கேட்ச் ஆகி வெளியேறினார்.

புரூக் ஆட்டமிழந்தவுடன் அதனால் என்ன அதான் நான் இருக்கேனே என்று பட்லர் தன் பங்குக்கு சிக்சர், பவுண்டரிகளை விளாசி 49 பந்துகளில் அரைசதம் கண்டார். மொயீன் அலியும் அட்டகாசமாக அடித்து ஆடினார்,

அதுவும் ஆன்ரிச் நார்க்கியாவை ஒரு ஓவரில் சாத்து சாத்தென்று சாத்தி அரைசதம் பூர்த்தி செய்தார். 36 ஓவர்களில் இங்கிலாந்து 200 ரன்களை எட்டியது. ஆனால் 45 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து நார்க்கியா பந்தை மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டார் மொயின் அலி.

கிறிஸ் வோக்ஸ் இறங்கி பேட்டிங் மறந்தது போல் ஆடி 16 பந்துகளில் 14 ரன்களை எடுத்து பட்லரை வெறுப்பேற்றினார். ஆனால் சாம் கரண் இறங்கி சிக்சர்களை விளாச 17 பந்துகளில் 28 ரன்கள் நொறுக்கினார், அதில் நேராக அடித்த ஒரு சிக்ஸ் பின் காலில் சென்று அடித்த அற்புதமான சிக்ஸ். இருவரும் சேர்ந்து கடைசி 4 ஓவர்களில் 60 ரன்களை விளாசித்தள்ளினர். பட்லர் 94 ரன்களில் வெளியேறினார் அடித்திருந்தால் இது இவரது 11வது சதமாகியிருக்கும்.

குவிண்டன் டி காக், பவுமா தொடக்கத்தில் இறங்கினர். இங்கிலாந்தின் இடது கை பவுலர் ரெலி டாப்லி, வோக்ஸ் பந்துகளை பவுமா பவுண்டரிகளாக விளாசித்தள்ளினார். எடுத்த எடுப்பிலேயே 36 ரன்களுக்கு வந்தார் பவுமா, அப்போது டி காக் 4 ரன்களில்தான் இருந்தார். ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் டி காக் தன் வேலையைக் காட்டினார், ஒரு சிக்ஸ், 2 பவுண்டரிகளை ஒரே ஓவரில் விளாசினார். தென் ஆப்பிரிக்கா 7 ஓவர்களில் 54/0 என்று அதிமேல் தொடக்கம் கண்டது. ஆலி ஸ்டோன் என்ற வேகப்புயல் வந்தவுடன் ரன் ரேட் குறைந்தது, டி காக் 31 ரன்களில் இவர் பந்தை டக்கெட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கடந்த போட்டியில் அருமையான சதம் எடுத்த வான் டெர் டசன் பவுமாவுடன் இணைந்தார். இவர் 38 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு டவரிங் சிக்சருடன் 38 ரன்கள் எடுத்து ஆதில் ரஷீத் பந்தில் காலியானார்.

தெம்பா பவுமா தன் போக்கில் நன்றாக ஆடினார், ஒன்று, இரண்டு ரன்களை பயங்கரமாக ஓடி 90களில் வந்து தசைப்பிடிப்பினால் அவதியுற்றார், ஆனாலும் ஆதில் ரஷீத்தை பவுண்டரி விளாசி சதமெடுத்தார்.

பவுமா 109 பந்துகளில் ஆட்டமிழந்த போது தென் ஆப்பிரிக்கா 27.1 ஓவர்களில் 174/2 என்று இருந்தது. வான் டெர் டசனும் உடனேயே ஆட்டமிழக்க இங்கிலாந்து வெற்றி வாய்ப்பை ருசிக்கத் தயாரானது.

ஆனால், கிளாசன் 19 பந்துகளில் 3 பவுண்டரிகள் உட்பட 27 ரன்கள் எடுக்க மார்க்ரம் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 42 பந்துகளில் 49 ரன்களை விளாசி ஆட்டத்தை தொய்ய விடாமல் 7 ஓவர்களில் 55 ரன்களைச் சேர்த்தனர்.

கிளாசன் ஸ்டோனின் அதிவேக அவுட் ஸ்விங்கரை துரத்தி விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் ஆக, மார்க்ரம் விக்கெட்டை ஆதில் ரஷீத் கூக்ளியில் பவுல்டு முறையில் கைப்பற்ற 282/5 என்று ஆனது தென் ஆப்பிரிக்கா.

ஆனால், வெற்றி பெறுவதற்கு மில்லர், யான்சென் நிலைத்து ஆட வேண்டியிருந்தது, இருவரும் அதைச் செய்தனர், மில்லர், 37 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 58 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தனர். மார்க்கோ யான்சென் 29 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 32 நாட் அவுட். 49.1 ஓவர்களில் 347/5 என்று மிக முக்கியமான வெற்றியுடன் தொடரையும் கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா. ஆட்ட நாயகன் கேப்டன் தெம்பா பவுமா. 3வது மற்றும் இறுதி போட்டி புதன் கிழமை நடைபெறுகிறது.

துபாயில் திருக்குறள் ஒப்பித்தலில் உலக சாதனை

0

திருக்குறள் திருவிழா: துபாயில் திருக்குறள் ஒப்பித்தலில் உலக சாதனை

 

திருக்குறள் திருவிழா

 

ஷார்ஜா, ஜன.30

ஷார்ஜா, துபாய் ஜெபல் அலி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் துபாய் யாழ் கல்வியகம் மற்றும் அமெரிக்க சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா நடைபெற்றது.

இந்த விழாவில் சுமார் 250 மாணவர்கள் கலந்து கொண்டு 1330 குறள்களையும் ஒப்புவித்தனர். இது, உலக அளவில் திருக்குறள் ஒப்பித்தலில் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஐன்ஸ்டீன் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தின் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் சார்பில் சதீஷ், கார்த்திக் மற்றும் மோனிகா கலந்து கொண்டு உலக சாதனையை பதிவு செய்தனர். அமீரகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மாலை 3 மணிக்கு தொடங்கி மாலை 7 மணிவரை திருக்குறள் ஒப்புவித்தல் நடைபெற்றது.

அதிகபட்சமாக 125 குறளை மாணவர் ஜேடன் பிரிஸ் ஒப்புவித்தார். நிகழ்ச்சியை யாழ் கல்வியகத்தின் ஆலோசகர் திரு. நாகப்பன், முதல்வர் திருமதி. ரம்யா, ஒருங்கிணைப்பாளர்கள் தவச்செல்வம், நரேஷ், விக்னேஷ், ஆசிரியர்கள் மற்றும் திருக்குறள் திருவிழா குழுவினர் கார்த்திக், ஹசீனா, கமால் பாட்சா, ஜசீலா, விஐயகுமார், சரண்யா, பிரியதர்ஷினி, ஹீமா நான்சி,
மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.

அதிகபட்சமாக 125 குறளை மாணவர் ஜேடன் பிரிஸ் ஒப்புவித்தார். நிகழ்ச்சியை யாழ் கல்வியகத்தின் ஆலோசகர் திரு. நாகப்பன், முதல்வர் திருமதி. ரம்யா, ஒருங்கிணைப்பாளர்கள் தவச்செல்வம், நரேஷ், விக்னேஷ், ஆசிரியர்கள் மற்றும் திருக்குறள் திருவிழா குழுவினர் கார்த்திக், ஹசீனா, கமால் பாட்சா, ஜசீலா, விஐயகுமார், சரண்யா, பிரியதர்ஷினி, ஹீமா நான்சி,
மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.

அமெரிக்காவிலிருந்து சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நிறுவனர் ராமன் வேலு, ஒருங்கிணைப்பாளர் ராதிகா ஆகியோர் இணையவழி தொடர்பில் ஒத்துழைப்பு நல்கினர். உலக பொதுமறை என போற்றப்படும் திருக்குறள் உலகெங்கும் அறியப்படுவது பெருமையளிக்கிறது என நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.

 

பாரத் ஜடோ யாத்திரை நிறைவு விழா : காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு

காஷ்மீர், ஜன .30

கடந்த செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கிய பாரத் ஜடோ யாத்திரை எனும் ஒற்றுமை நடைப்பயணம் இன்று ஜம்மு காஷ்மீரில் முடிவடைகிறது. ஸ்ரீநகரில் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 23 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராகவும், எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியை வலுப்படுத்தவும் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் ‘பாரத் ஜடோ யாத்திரையை’ தொடங்கினார். கடந்த 2

நாடாளுமன்ற தேர்தல்களில் தோல்வி, கட்சிக்கு புதிய தலைமை வேண்டும் என்று அதன் மூத்த தலைவர்களே கடிதம் எழுதியது, ஒவ்வொரு தலைவர்களாக பாஜகவுக்கு தாவியது, பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை இழந்தது போன்றவை காங்கிரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்த நெருடிக்கடியிலிருந்து கட்சியை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டார். எனவேதான் இந்த நடைப்பயணத்தை அவர் தொடங்கினார். கன்னியாகுமரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வைத்து யாத்திரையை தொடங்கிய நிலையல், இந்த யாத்திரையானது கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா என ராஜஸ்தானில் வந்து தனது 100வது நாளை நிறைவு செய்தது.

அதன் பின்னர் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் யாத்திரை டெல்லியில் நுழைந்தது. யாத்திரையின் தொடக்கத்தில் ராகுல் காந்தி அணிந்திருந்த டீ-சர்ட் காஸ்ட்லியானது என பாஜக ஆதரவாளர்கள் ராகுலை ட்ரோல் செய்ய தொடங்கினர். ஆனால் டெல்லியில் கடும் குளிரிலும் ராகுல் காந்தி வெறும் டீ-சர்ட்டுடன் பயணித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மறுபுறம் பாதுகாப்பு சார்ந்த பிரச்னைகள் மேலெழுந்தன. இந்த யாத்திரையை வரவேற்க ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்ததில், ராகுல் காந்தியின் பாதுகாப்பு வளையத்தை தாண்டி சிலர் உள்நுழைந்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இதனையடுத்து கட்சி தொண்டர்களே ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அளித்ததாகவும், இது மிகப்பெரும் பாதுகாப்பு குறைப்பாடு என்றும் கட்சி குற்றம்சாட்டி உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியது. ஆனால், நாங்கள் சரியாகதான் பாதுகாப்பு கொடுத்தோம் என்றும், ராகுல் காந்திதான் பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபட்டுள்ளார் என்றும் ராகுலுக்கு பாதுகாப்பு அளித்திருந்த துணை ராணுவப்படை விளக்கம் கொடுத்தது. இந்த சர்ச்சை ஒருபுறும் இருந்தாலும் ராகுல் காந்தி எங்கும் யாத்திரையை நிறுத்தவில்லை. டெல்லியை அடுத்து உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் என யாத்திரை காஷ்மீரை வந்தடைந்தது. ராகுல் காந்தி தான் அணிந்திருந்த டீ-சர்ட்டுக்கு மேலே முதல் முறையாக ஜெர்க்கின் ஒன்றை அணியத் தொடங்கினார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டதிலிருந்து அம்மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எனவே ராகுலுக்கும் அவருடன் யாத்திரையில் பங்கேற்பவர்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. ராகுலுடன் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள், ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முக்தி ஆகியோர் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று (ஜன.29) இந்த யாத்திரை 3,500 கி.மீ பயணத்தை ஜம்முவில் நிறைவு செய்தது. இதனையடுத்து இன்று நிறைவு விழா பொதுக்கூட்டம் ஸ்ரீநகரில் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட 23 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து திமுக, விசிக, மநீம உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்கள். இதன் காரணமாக பொதுக்கூட்டம் நடைபெறும இடத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கத்தை விட ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றி முள்வேளிகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுவதற்கு முன்னர் அவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து யாத்திரையை நிறைவு செய்கிறார்.

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தமிழகத்தில் 1-ந்தேதி ஓரிரு இடங்களில் கனமழை

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : தமிழகத்தில் 1-ந்தேதி ஓரிரு இடங்களில் கனமழை

கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜன .30

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் 1-ந்தேதி ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும். 2-ந்தேதி தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும்.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கிறது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வலுவடைந்து 1-ந்தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடைய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி தீவிர காற்றழுத்த தாழ்வு மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில்  காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாக வலுவடையக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் 1-ந்தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 2-ந்தேதி தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும். தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்யும். இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றனர். அதன்படி இன்று காலையில் சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது.