Home Blog Page 3

உமர் காலித்துக்கு ஜாமீன் வழங்கப்பட, சர்வதேச சட்டத்தின்படி நியாயமான விசாரணை வேண்டும் – அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய தூதருக்கு கடிதம்

உமர் காலித்துக்கு ஜாமீன் வழங்கப்பட, சர்வதேச சட்டத்தின்படி நியாயமான விசாரணை வேண்டும் – அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய தூதருக்கு கடிதம்

American lawmakers write to the Indian ambassador, demanding bail for Umar Khalid and a fair trial according to international law

  • உமர் காலித் UAPA சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளாக ஜாமீன் இன்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சமத்துவத்துக்கு முரணாக இந்த சட்டம் இருக்கலாம்

  • நியாயமான காலத்துக்குள் விசாரணையை பெறுவதற்கான அல்லது விடுவிக்கப்படுவதற்கான தனிநபர்களின் உரிமைகளை இந்தியா நிலைநாட்ட வேண்டும். குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர்கள் நிரபராதிகள் என்று கருதப்பட வேண்டும்

புதுடெல்லி, ஜன. 02

2020 டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உமர் காலித்துக்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர், அமெரிக்காவுக்கான இந்திய தூதருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், உமர் காலித்துக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச சட்டத்தின்படி நியாயமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

2020-ல் வட கிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக உமர் காலித் கைது செய்யப்பட்டார். 2020, செப்டம்பரில் கைது செய்யப்பட்ட அவர் மீது, சதி, கலவரம், சட்டவிரோதமாகக் கூடுதல் மற்றும் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் (UAPA) போன்ற குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டுள்ளன. அவரது ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், உமர் காலித்துக்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் குவாட்ராவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். டிச. 30, 2025 தேதியிட்ட அந்த கடிதத்தில், “உமர் காலித்துக்கான தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும், உமர் காலித் UAPA சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளாக ஜாமீன் இன்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சமத்துவத்துக்கு முரணாக இந்த சட்டம் இருக்கலாம்.

நியாயமான காலத்துக்குள் விசாரணையை பெறுவதற்கான அல்லது விடுவிக்கப்படுவதற்கான தனிநபர்களின் உரிமைகளை இந்தியா நிலைநாட்ட வேண்டும். குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர்கள் நிரபராதிகள் என்று கருதப்பட வேண்டும். உமர் காலித் மற்றும் அவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எதிரான நீதித்துறை நடவடிக்கைகள் சர்வதேச தரத்துடன் இருப்பதை உறுதி செய்வதோடு, எடுக்கப்படும் நடவடிக்கைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்த கடிதத்தை, டாம் லாண்டோஸ் மனித உரிமைகள் ஆணையத்தின் இணைத் தலைவரான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜிம் மெக்கவரன் பகிர்ந்துள்ளார்.

இந்த கடிதத்தில், அவர் கையெழுத்திட்டுள்ளார். மேலும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜேமி ரஸ்கின், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரமிளா ஜெயபால், ஜான் ஷாகோவ்ஸ்கி, லாயிட் டோகெட், ரஷிதா த்லைப், கிறிஸ் வான் ஹோலன், பீட்டர் வெல்ச் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.

டிசம்பர் மாத தொடக்கத்தில் உமர் காலித்தின் பெற்றோரை தாங்கள் சந்தித்ததாகவும் அவர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தை மீட்டெடுக்க ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் 

தமிழகம் முழுவதும் மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தை மீட்டெடுக்க ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Poor agricultural laborers staged a protest across Tamil Nadu to revive the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme

  • தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்

  • மத்திய அரசு மேற்கொண்டுள்ள சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறவும், மத்திய பாஜக அரசின் சதிச் செயலையும், அதற்கு ஒத்துழைத்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் அதிமுகவையும் கண்டித்தும்’ தமிழகம் முழுவதும் இன்று திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை, டிச. 24

மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தை மீட்டெடுக்க, 389 இடங்களில் ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தை (MGNREGA) மீட்டெடுக்கவும், தங்களது வாழ்வாதாரத்தைக் காத்துக்கொள்ளவும் தமிழ்நாடு முழுவதும் 389 இடங்களில் ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தனர்.

இது தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என்பதை அண்ணல் காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியாளர்கள் உணர வேண்டும். ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைக்கும் விதமாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறவும், மத்திய பாஜக அரசின் சதிச் செயலையும், அதற்கு ஒத்துழைத்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் அதிமுகவையும் கண்டித்தும்’ தமிழகம் முழுவதும் இன்று திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.

இந்தப் போராட்டத்தில் 100 நாள் வேலைவாய்ப்பால் பயன்பெறுபவர்களும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டங்களில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தின்போது தமிழக மக்களை வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசையும், அதற்கு துணைப் போகும் அதிமுகவை கண்டிப்பதாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

அமெரிக்காவின் புளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது புளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோள் – இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை

The Bluebird Block-2 satellite was successfully launched into space – a remarkable achievement by ISRO scientists.

விண்ணில் செலுத்தப்பட்ட 15 நிமிடங்களுக்குப் பிறகு செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

வணிக ஏவுதல் சேவைகளை விரிவுபடுத்துவதோடு, உலகலாவிய கூட்டாண்மைகளை ஆழப்படுத்துகிறோம்.

ஸ்ரீஹரிகோட்டா, டிச. 24

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது புளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோள் – இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை:  அமெரிக்காவின் அதிக எடை கொண்ட புளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 8.55 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இந்திய விண்வெளி துறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தின் புளூபேர்ட் பிளாக்-2 தகவல் தொடர்பு செயற்கைக்கோள், மொபைல் ஸ்மார்ட்போன்களுக்கு நேரடியாக விண்வெளி அடிப்படையிலான செல்லுலார் பிராட்பேண்ட் இணைப்பை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இது, எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை தரமான முறையில் வழங்குவதற்கானது.

இந்த செயற்கைக்கோள் இன்று காலை 8.55 மணிக்கு, ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து LVM3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 15 நிமிடங்களுக்குப் பிறகு செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் இஸ்ரோ இரண்டு முக்கிய சாதனைகளைப் படைத்துள்ளது. புவி தாழ் வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட மிகப் பெரிய வணிகத் தொடர்பு செய்கைக்கோள் இது. இரண்டாவதாக, இந்திய மண்ணில் இருந்து LVM3 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட மிக அதிக எடை கொண்ட பேலோட் இதுவாகும்.

செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘இந்தியாவின் விண்வெளித் துறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம். இந்திய மண்ணில் இருந்து ஏவப்பட்டதிலேயே மிகவும் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் இது. அமெரிக்காவின் புளூபேர்ட் பளிாக்-2 எனும் இந்த செயற்கைக்கோளை அதன் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் LVM3 ராக்கெட் மூலம் இஸ்ரோ வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.

இது இந்தியாவின் கனரக ஏவுதல் திறனை வலுப்படுத்தி உள்ளது. உலகலாவிய வணிக ஏவுதல் சந்தையில் நமது வளர்ந்து வரும் பங்கை உறுதி செய்துள்ளது. தற்சார்பு இந்தியாவை நோக்கிய நமது முயற்சியையும் இது பிரதிபலிக்கிறது. கடினமாக உழைத்து வரும் நமது விண்வெளி விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் வாழ்த்துகள்’’ என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ‘‘விண்வெளி உலகில் இந்தியா தொடர்ந்து மேலும் உயரப் பறக்கிறது. இந்திய இளைஞர்களின் ஆற்றலால் நமது விண்வெளித் திட்டம் மேலும் மேம்பட்டதாகவும், அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் மாறி வருகிறது.

LVM3 ராக்கெட் நம்பகமான கனரக ஏவுதல் செயல்திறனை நிரூபித்துள்ள நிலையில், ககன்யான் போன்ற எதிர்காலப் பணிகளுக்கான அடித்தளத்தை வலுப்படுத்தி வருகிறோம். வணிக ஏவுதல் சேவைகளை விரிவுபடுத்துவதோடு, உலகலாவிய கூட்டாண்மைகளை ஆழப்படுத்துகிறோம்.

இந்த அதிகரித்த திறனும், தற்சார்புக்குக் கிடைத்துள்ள இந்த உத்வேகமும் வரும் தலைமுறையினருக்கு ஓர் அற்புத வரப்பிரசாதமாகும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

கல்​வெட்​டியல், தொல்​லியல், அகழாய்வு ஓராண்டு டிப்ளமா – உலகத் தமிழா​ராய்ச்சி நிறு​வனம் அறி​விப்பு

கல்​வெட்​டியல், தொல்​லியல், அகழாய்வு ஓராண்டு டிப்ளமா – உலகத் தமிழா​ராய்ச்சி நிறு​வனம் அறி​விப்பு

Epigraphy, Archaeology, Excavation One-Year Diploma – Announcement from the World Tamil Research Institute

  • டிப்ளமா படிப்​பில் 2026-ம் ஆண்டு மாணவர் சேர்க்​கைக்​கான விண்​ணப்​பத்தை உலகத் தமிழா​ராய்ச்சி நிறு​வனத்​தின் இணை​யதளத்​தில் (www.ulakaththamizh.in) பதி​விறக்​கம் செய்​ய​லாம்.

  • விண்​ணப்​பக் கட்​ட​ணம், சேர்க்கை கட்​ட​ணம், அடை​யாள அட்​டை, தேர்​வுக் கட்​ட​ணம் என மொத்​தம் ரூ.4 ஆயிரம் செலுத்த வேண்​டும்.

சென்னை, டிச. 23

கல்​வெட்​டியல், தொல்​லியல், அகழாய்வு தொடர்​பான ஓராண்டு கால டிப்ளமா படிப்​புக்​கு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்​றவர்​கள் விண்​ணப்​பிக்​கலாம் என உலகத் தமிழா​ராய்ச்சி நிறு​வனம் அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக தமிழக அரசின் உலகத் தமிழா​ராய்ச்சி நிறு​வனம் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை தரமணி​யில் உள்ள உலகத் தமிழா​ராய்ச்சி நிறு​வனம் கல்​வெட்​டியல், தொல்​லியல், அகழாய்வு தொடர்​பான ஓராண்டு கால டிப்ளமா படிப்பை வழங்கி வரு​கிறது. 10-ம் வகுப்பு முடித்​தவர்​கள் இதில் சேரலாம். வயது வரம்பு கிடை​யாது.

இந்த படிப்​பில் கல்​வெட்டு படி​யெடுத்​தல், ஆவணப்​படுத்​துதல் குறித்த பயிற்​சி​யும் அளிக்​கப்​படும். இதன்​மூலம் தமிழக வரலாறு, மொழி, பண்​பாடு, கலை, இலக்​கி​யம் குறித்து அறிந்து கொள்​ளலாம்.

இந்த டிப்ளமா படிப்​பில் 2026-ம் ஆண்டு மாணவர் சேர்க்​கைக்​கான விண்​ணப்​பத்தை உலகத் தமிழா​ராய்ச்சி நிறு​வனத்​தின் இணை​யதளத்​தில் (www.ulakaththamizh.in) பதி​விறக்​கம் செய்​ய​லாம். விண்​ணப்​பக் கட்​ட​ணம், சேர்க்கை கட்​ட​ணம், அடை​யாள அட்​டை, தேர்​வுக் கட்​ட​ணம் என மொத்​தம் ரூ.4 ஆயிரம் செலுத்த வேண்​டும்.

பூர்த்தி செய்​யப்​பட்ட விண்​ணப்​பத்​துடன் கட்​ட​ணத்​துக்​கான கேட்​புக் காசோலையை (டி​மாண்ட் டிராஃப்ட்) இணைத்​து, ‘இயக்​குநர், உலகத் தமிழா​ராய்ச்சி நிறு​வனம், 2-ம் முதன்​மைச் சாலை, மைய தொழில்​நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்​னை-600113’ என்ற முகவரிக்கு ஜனவரி 20-ம் தேதிக்​குள் அனுப்ப வேண்​டும். கட்​ட​ணத்தை ரொக்​க​மாக செலுத்தி விண்​ணப்​பத்தை நேரிலும் சமர்ப்​பிக்​கலாம்.

வார விடு​முறை நாளான ஞாயிறு​தோறும் முழுநேர​ வகுப்​பு​கள் நடை​பெறும். வகுப்பு தொடங்​கும் நாள் பின்​னர் தெரிவிக்​கப்​படும். மேலும் விவரம் அறிய 9500012272 என்ற எண்​ணில் தொடர்பு கொள்​ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

மி​யான்​மர் ராணுவம் வான்​வழி தாக்​குதல்; பொது மருத்​து​வ​மனை தரைமட்​டம் – நோயாளி​கள், மருத்​துவ ஊழியர்​கள் உயி​ரிழப்பு

மி​யான்​மர் ராணுவம் வான்​வழி தாக்​குதல்; பொது மருத்​து​வ​மனை தரைமட்​டம் – நோயாளி​கள், மருத்​துவ ஊழியர்​கள் உயி​ரிழப்பு

Myanmar military launches airstrike; public hospital razed to the ground – patients and medical staff killed

  • மியான்​மரில் ராணுவ ஆட்சி நடை​பெறுகிறது. ராணுவ ஆட்​சிக்கு எதி​ராக உள்​நாட்​டுப் போரில் பல்​வேறு கிளர்ச்​சிக் குழுக்​கள் ஈடுபாடு

  • மியான்​மர் ராணுவ வீரர்​களால் தரைவழி​யாக முன்​னேற முடிய​வில்​லை. இதன்​காரண​மாக மிராக் யூ நகர் மீது அடிக்​கடி வான்​வழி தாக்​குதல் நடத்​தப்​படு​கிறது

யாங்கூன், டிச. 13

மி​யான்​மர் ராணுவம் நடத்​திய வான்​வழி தாக்​குதலில் பொது மருத்​து​வ​மனை தரைமட்​ட​மானது. இதில் 34 நோயாளி​கள், மருத்​துவ ஊழியர்​கள் உயி​ரிழந்​தனர். 80-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர்.

மியான்​மரில் ராணுவ ஆட்சி நடை​பெறுகிறது. அந்த நாட்​டின் ராணுவ ஆட்​சிக்கு எதி​ராக பல்​வேறு கிளர்ச்​சிக் குழுக்​கள் உள்​நாட்​டுப் போரில் ஈடு​பட்டு வரு​கின்​றன. குறிப்​பாக அராக்​கன் படை, எம்​என்​டிஏஏ, டிஎன்​எல்ஏ ஆகிய 3 கிளர்ச்​சிக் குழுக்​கள் ஓரணி​யாக ஆயுத போராட்​டம் நடத்தி வரு​கின்​றன.

தற்​போதைய சூழலில் மியான்​மர் ராணுவத்​தின் கட்​டுப்​பாட்​டில் 21 சதவீத பகு​தி​களும் கிளர்ச்​சிக் குழுக்​களின் கட்​டுப்​பாட்​டில் 79 சதவீத பகு​தி​களும் உள்​ளன.

இந்த சூழலில் அராக்​கன் படை கட்​டுப்​பாட்​டில் உள்ள ரகைன் மாகாணம், மிராக்​-யூ நகரில் உள்ள பொது மருத்​து​வ​மனையை குறி​வைத்து மியான்​மர் ராணுவத்​தின் போர் விமானம் புதன்​கிழமை இரவு குண்​டு​களை வீசி​யது. இதில் மருத்​து​வ​மனை தரைமட்​ட​மானது. 34 நோயாளி​கள், மருத்​துவ ஊழியர்​கள் உயி​ரிழந்​தனர். 80-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர்.

இதுகுறித்து மியான்​மர் அரசி​யல் நோக்​கர்​கள் கூறும்​போது, “இந்த நகரை மீண்​டும் தங்​கள் கட்​டுப்​பாட்​டின் கீழ் கொண்டு வர மியான்​மர் ராணுவம் அதிதீ​விர முயற்​சிகளை மேற்​கொண்டு வரு​கிறது. மியான்​மர் ராணுவ வீரர்​களால் தரைவழி​யாக முன்​னேற முடிய​வில்​லை. இதன்​காரண​மாக மிராக் யூ நகர் மீது அடிக்​கடி வான்​வழி தாக்​குதல் நடத்​தப்​படு​கிறது’’ என்று தெரி​வித்​தனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

ராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் புது கட்சி தொடக்கம்

ராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் புது கட்சி தொடக்கம்

Ramanathapuram Naam Tamilar Party Executives Launch New Party

  • நாம் தமிழர் கட்சியிலிருந்து ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு விலகுவது என முடிவு

  • கட்சியின் தலைமை, ஒரு போலி தலைமையாக உள்ளது. இயற்கை வளங்கள் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் எல்லாம் போலி யான போராட்டங்களாக உள்ளன

ராமேசுவரம், டிச. 09

நாம் தமிழர் கட்சியின் ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி நிர்வாகிகள், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். மேதகு நாம் தமிழர் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கண்.இளங்கோ தலைமையில் ராமேசுவரத்தில் நேற்று கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் சத்யா, மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் தீன், நம்பு குமார், மாநில மாணவர் பாசறை செயலாளர்கள் சங்கீதா, பாலு, மாநில மகளிர் பாசறை செயலாளர் ஜெயா, மாநில வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர் செல்வம், நகரத் தலைவர் செந்தில், நகர் செயலாளர் மாரிமுத்து, நகர் செய்தித் தொடர்பாளர் பாலராசு, நகர் இளைஞர் பாசறை செயலாளர் குட்டிமணி, ஆட்டோ ஓட்டுநர் சங்க செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு விலகுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், ‘மேதகு நாம் தமிழர் கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினர்.

மேதகு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக கண்.இளங்கோ, பொதுச் செயலாளராக மாரியம்மாள், பொருளாளராக காதர், செய்தித் தொடர்பாளராக நியூமன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

புதிய கட்சியை தொடங்கியது குறித்து கண்.இளங்கோ கூறிய தாவது: திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி செயல்படும் என்று எதிர்பார்த் தோம். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. கட்சியில் ஜனநாயகம் இல்லை.

கட்சியின் தலைமை, ஒரு போலி தலைமையாக உள்ளது. இயற்கை வளங்கள் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் எல்லாம் போலி யான போராட்டங்களாக உள்ளன
அவை வெறுமனே செய்திகளுக்காக நடைபெறும் போராட்டங்கள். வெறுமனே பேசினால் மட்டுமே ஆட்சியை பிடித்து விடலாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை நம்புகிறது. அதிகாரத்தை கைப்பற்ற தேவையான அரசியல் போராட்டங்களை நடத்த முன் வரவில்லை.

வேட்பாளர்களாக கட்சியில் சிறப்பாக வேலை செய்பவர்களை தேர்ந்தெடுப்பது இல்லை. வேட்பாளராக தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவரை தேர்வு செய்கின்றனர்.

அல்லது, வெளிநாட்டில் இருப்பவரை தேர்வு செய்கின்றனர். இதுபோன்ற பல காரணங்களால் நாம் தமிழர் கட்சியி லிருந்து விலகி, புதிய கட்சியை தொடங்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

மதுரையில் முதலீட்டாளர் மாநாடு : 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் ஸ்டாலின் 

மதுரையில் முதலீட்டாளர் மாநாடு : 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் ஸ்டாலின்

Investors’ conference in Madurai: Employment for 56,766 people – Chief Minister Stalin

  • புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 80 சதவீதத்துக்கு மேல் திட்டங்கள் நிறைவேற்றம்

  • மதுரை மேலூரில் 278.26 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இங்கு முதலாவதாக தைவான் நாட்டை சேர்ந்த ‘பே ஹை’ குழுமம் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தியை தொடங்க உள்ளது. இதன்மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மதுரை, டிச. 08

மதுரையில் நடைபெற்ற ‘தமிழ்நாடு வளர்கிறது’ என்ற முதலீட்டாளர் மாநாட்டில் கப்பல் கட்டுமானம், தோல் அல்லாத காலணி, மின்னணுவியல், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக ரூ.36,660 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரை ரிங் ரோட்டில் உள்ள தனியார் கூட்டரங்கில் ‘தமிழ்நாடு வளர்கிறது’ என்ற தலைப்பிலான முதலீட்டாளர் மாநாடு நேற்று காலை நடைபெற்றது. மாநாட்டுக்கு தலைமை வகித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள முதலீட்டாளர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய வைத்துள்ளோம். ‘மாநிலம் முழுவதும் சீரான வளர்ச்சி – மாவட்டம்தோறும் பரவலான வளர்ச்சி’ என்ற அடிப்படையில், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை ரூ.11.83 லட்சம்கோடி முதலீடுகள் மூலம் 34 லட்சம்பேருக்கு தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 80 சதவீதத்துக்கு மேல் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக அரசின் கொள்கைகள், மனிதவளத் திறன், உள்கட்டமைப்புகள், சட்டம் – ஒழுங்கு, நிர்வாகத் திறன், நீண்டகால நிலைத்தன்மை போன்றவை நன்றாக இருப்பதால், முதலீட்டாளர்களின் மனதில் தமிழகம் நிறைந்துள்ளது. மதுரைக்கு ‘தூங்கா நகரம்’ என்ற பெயர் உண்டு. அதை அப்படி சொல்வதைவிட எப்போதும் விழிப்புடன் இருக்கும் நகரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம், கோயில் நகரம் என்ற பெயருடன் தொழில்நகரமாகவும் மதுரை புகழ்பெற வேண்டும். டிவிஎஸ் ஸ்ரீசக்ரா, தியாகராஜர் மில்ஸ், மதுரா கோட்ஸ், ஹெச்சிஎல் என பல்வேறு நிறுவனங்கள் தங்களது தொழில் திட்டங்களை இங்கு நிறுவி உள்ளன. மருத்துவத் துறையில் வேலம்மாள், மீனாட்சி மிஷன், அப்போலோ போன்ற நிறுவனங்கள் சாதனை புரிவதுடன் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.

தற்போது மதுரை மேலூரில் 278.26 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இங்கு முதலாவதாக தைவான் நாட்டை சேர்ந்த ‘பே ஹை’ குழுமம் தோல் அல்லாத காலணிகள் உற்பத்தியை தொடங்க உள்ளது. இதன்மூலம் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக, அதிக பெண்கள் இதில் பயன்பெறுவார்கள்.

‘தமிழ்நாடு வளர்கிறது’ மாநாட்டில் கப்பல் கட்டுமானம், தோல் அல்லாத காலணி, மின்னணுவியல், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் முதலீடுகள் பெற ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹுண்டாய் நிறுவனம் கப்பல்கட்டுமானத் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. கப்பல் கட்டுமானத் துறையில் தமிழகத்தை முன்னிலைப்படுத்தும் இந்த முதலீடு, மற்ற நிறுவனங்களை ஊக்குவிப்பதோடு, உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனங்களையும் ஈர்க்கக் கூடியதாக இருக்கும்.

பொறியியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப தீர்வுகளில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான எஸ்எஃப்ஓ டெக்னாலஜிஸ் நிறுவனம், மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான விரிவாக்கத் திட்டத்தை தேனியில் மேற்கொள்ள உள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் ‘பயோ எனர்ஜி’ துறையில் ரூ.11 ஆயிரம் கோடி முதலீடுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்த மாநாட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக ரூ.36,660 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.இவ்வாறு முதல்வர் பேசினார்.

மாநாட்டில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன், ராஜகண்ணப்பன், டிஆர்பி. ராஜா, சு.வெங்கடேசன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், மதுரை உத்தங்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.2,630.88 கோடியில் 63 முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.17.18 கோடியில் 7 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 1.78 லட்சம் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

போலி மருந்து விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஊர்வலம், சட்டமன்ற முற்றுகை போராட்டம்; நூற்றுக்கணக்கானோர் கைது

போலி மருந்து விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஊர்வலம், சட்டமன்ற முற்றுகை போராட்டம்; நூற்றுக்கணக்கானோர் கைது

Protests, blockade of the Legislative Assembly demanding the arrest of those involved in the fake medicine issue; hundreds arrested

  • புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்த மூன்று தொழிற்சாலைகள் மற்றும் 10 குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக உரிமையாளர் ராஜா என்ற வள்ளியப்பன் உள்ளிட்ட 10 பேரை சிபிசிஐடி போலீஸார் தேடி வருகின்றனர்.

  • சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி இதுவரை ஆய்வுக் கூட்டம் கூட நடத்தவில்லை. முதல்வர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர்கள் என தனித்தனி பாதையில் பயணிக்கின்றனர்.

புதுச்சேரி, டிச.8

போலி மருந்து தயாரித்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி புதுச்சேரி சட்டப் பேரவையை முற்றுகையிட முயன்ற 4 திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்த மூன்று தொழிற்சாலைகள் மற்றும் 10 குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக உரிமையாளர் ராஜா என்ற வள்ளியப்பன் உள்ளிட்ட 10 பேரை சிபிசிஐடி போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் போலி மருந்துகளின் கேந்திரமாக புதுவையை மாற்றியதாக பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் அரசை கண்டித்தும், மக்களின் உயிரோடு விடியாடிய குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊர்வலம் – சட்டமன்ற முற்றுகை போராட்டம் இன்று (டிச.8) நடத்துவதாக திமுக அறிவித்தது.

அதன்படி புதுவை காமராஜர் சதுக்கத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்துக்கு திமுக மாநில அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்கினார். அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் நேரு வீதி வழியாக சட்டப்பேரவை நோக்கி சென்றது.

ஊர்வலத்தில் வந்தவர்கள் போலி மருந்து விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி கையில் பதாகைகள் ஏந்தியும், கோஷம் எழுப்பியும் சென்றனர். அவர்களை சம்பா கோயில் எதிரில் போலீஸார் தடுப்புகள் அமைத்து தடுத்தனர். தொடர்ந்து போலீஸாரின் தடுப்புகளை மீறி சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோரை போலீஸார் கைது செய்தனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக மாநில அமைப்பாளர் சிவா கூறியதாவது: புதுச்சேரி அரசு போலி மருந்து தயாரிப்பாளர்களை, பதுக்கியவர்களை, ஏஜெண்டாக இருந்தவர்களையும் காப்பாற்றி வருகிறது என மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ரூ.1000 கோடி-க்கும் மேல் போலி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அரசு பெயர் அளவுக்கு கைது நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில் முக்கியக் குற்றவாளிக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பெரிய அளவில் பணம் கைமாறியுள்ளது. பல அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது. இந்த மருந்து இந்தியாவில் எந்தக் கடைகளுக்கு சென்றுள்ளது, இதனை பயன்படுத்தி யாரேனும் உயிரிழந்துள்ளார்களா என்பது தெரியவில்லை?. இதுகுறித்து ஆய்வு நடத்த அரசு மருத்துவ நிபுணர்கள் குழுவை அமைக்கவில்லை

அதனால் சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டும். போலி மருந்து தயாரிப்பில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த தொழிலதிபர்கள், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளது. மருந்து குடோன்கள் இருந்த இடம் இக்கட்சியை சேர்ந்தவர்களுக்கு உரிமையானது. இதற்கு பல மடங்கு வாடகை அளித்துள்ளனர்.

பல அரசியல்வாதிகளுக்கு வீடு உட்பட பல சலுகைகள் வழங்கியுள்ளனர். இதுவரை 10 ஆண்டுகளாக நிறுவனம் எப்படி நடந்தது? யாருக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது? மருந்துகளை சாப்பிட்டு இறந்தவர்கள் எத்தனை பேர்?. என அரசு அறிக்கை வெளியிட வேண்டும். புதுச்சேரியில் போலி மருந்துகள் விற்கப்பட்டு ஏழை மக்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி இதுவரை ஆய்வுக் கூட்டம் கூட நடத்தவில்லை. முதல்வர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர்கள் என தனித்தனி பாதையில் பயணிக்கின்றனர்.

புதுச்சேரி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். அரசு சரியான நடவடிக்கை எடுக்காததால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என்று திமுக மாநில அமைப்பாளர் சிவா தெரிவித்தார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : சிபிஐ விசாரணையை நேரில் ஆய்வு செய்தது நீதிபதி அஜய் ரஸ்தோகி குழு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : சிபிஐ விசாரணையை நேரில் ஆய்வு செய்தது நீதிபதி அஜய் ரஸ்தோகி குழு

Karur stampede case: Justice Ajay Rastogi’s panel personally inspects CBI investigation

  • சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இதர பொது மக்கள்/ அமைப்புகள் ஆகியோர் மனுக்கள் எதும் அளிக்க விரும்பினால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மேற்படி குழுவினரிடம் நேரடியாக 02.12.2025 அன்று காலை 10:30 மணி முதல் மனுக்கள் அளிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் தெரிவித்திருந்தார்.

  • தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை (தனியரசு) மாவட்டச் செயலாளர் அருள் குமார் கரூர் சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்து நடந்த துயர‌ சம்பவத்துக்கு விஜய்‌தான் காரணம்‌ எனப் புகார் அளித்தனர்.

கரூர்,டிச. 02

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், கரூர் சுற்றுலா மாளிகைக்கு உச்ச‌ நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் ஏடிஜிபிக்கள் சோனல் மிஸ்ரா,‌சுமித் சரண் ஆகியோர் வந்தடைந்தனர்.

கரூர் மாவட்டத்தில் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 நபர்கள் இறந்தது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறையினரின் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணையை மேற்பார்வை செய்திட உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவினர் நீதிபதி அஜய் ரஸ்தோகி, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் 02.12.2025 அன்று கரூர் மாவட்டத்துக்கு வருகை தருகின்றனர்.

இதையும் படியுங்கள்: https://puthiyaparimaanam.com/cyclone-ditwah-devastated-sri-lanka-390-dead-in-landslides-500-missing-india-pakistan-provide-relief-assistance/

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இதர பொது மக்கள்/ அமைப்புகள் ஆகியோர் மனுக்கள் எதும் அளிக்க விரும்பினால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மேற்படி குழுவினரிடம் நேரடியாக 02.12.2025 அன்று காலை 10:30 மணி முதல் மனுக்கள் அளிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கரூர் சுற்றுலா மாளிகைக்கு உச்ச‌ நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, ஏடிஜிபிக்கள் சோனல் மிஸ்ரா,‌ சுமித் சரண் ஆகியோர் வந்தடைந்தனர். இவர்களை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இதனிடையே, கூட்ட நெரிசலில் உயிரிழந்த பழநியம்மாள், கோகிலாவின் பெற்றோர் பெருமாள், செல்வராணி ஆகியோர் மனு அளிக்க கரூர் சுற்றுலா மாளிகைக்கு வந்தனர்.

அதேபோல், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை (தனியரசு) மாவட்டச் செயலாளர் அருள் குமார் கரூர் சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்து நடந்த துயர‌ சம்பவத்துக்கு விஜய்‌தான் காரணம்‌ எனப் புகார் அளித்தனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

இலங்கையை சிதைத்த டித்வா புயல் : நிலச்சரிவு வெள்ளத்தில் 390 பேர் பலி – 500 பேர் காணவில்லை, இந்தியா, பாகிஸ்தான் நிவாரண உதவி

இலங்கையை சிதைத்த டித்வா புயல் : நிலச்சரிவு வெள்ளத்தில் 390 பேர் பலி – 500 பேர் காணவில்லை, இந்தியா, பாகிஸ்தான் நிவாரண உதவி

Cyclone DITWAH devastated Sri Lanka: 390 dead in landslides, 500 missing, India, Pakistan provide relief assistance

  • இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பல் மற்றும் ஐஎன்எஸ் உதய்கிரி போர்க்கப்பல் ஆகியவை நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு நவம்பர் 28-ஆம் தேதி கொழும்பு சென்றன

  • இந்தியாவிலிருந்து 9 டன் நிவாரணப் பொருட்கள், மீட்புப் பணிக்கான உபகரணங்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் 80 என்.டி.ஆர்.எஃப் வீரர்கள் அடங்கிய குழு விமானப்படை விமானத்தில் நவம்பர் 29-ஆம் தேதி இலங்கை சென்றது

கொழும்பு, டிச. 02

“இலங்கையில் திட்வா புயல் எதிரொலியாக பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் இதுவரை 390 பேர் உயிரிழந்துள்ளனர். 352 பேர் காணாமல் போயுள்ளனர். 432 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. சுமார் 13 லட்சத்து 74 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்று அந்நாட்டு அனார்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

புயல் மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இலங்கையுடன் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் மீட்புப் பணிகளில் உதவி வருகின்றன.

இலங்கைக்கு உதவ இந்தியா ஆபரேஷன் ‘சாகர் பந்துவை’ அறிவித்தது.

அதன் கீழ் இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பல் மற்றும் ஐஎன்எஸ் உதய்கிரி போர்க்கப்பல் ஆகியவை நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு நவம்பர் 28-ஆம் தேதி கொழும்பு சென்றன.

இந்தியாவிலிருந்து 9 டன் நிவாரணப் பொருட்கள், மீட்புப் பணிக்கான உபகரணங்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் 80 என்.டி.ஆர்.எஃப் வீரர்கள் அடங்கிய குழு விமானப்படை விமானத்தில் நவம்பர் 29-ஆம் தேதி இலங்கை சென்றது. அவர்கள் படகில் சென்று வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் இருந்து மூன்றாவதாக ஐஎன்எஸ் சுகன்யா கப்பல் டிசம்பர் ஒன்றாம் தேதி 12 டன் நிவாரணப் பொருட்களுடன் இலங்கை சென்றது.

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் இருந்து சென்ற சேத்தக் ஹெலிகாப்டர்கள் மற்றும் இந்திய விமானப் படையின் எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் இலங்கையில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்திய விமானப்படையின் 2 எம்ஐ-16 ஹெலிகாப்டர்கள் இலங்கையில் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கோட்மாலே போன்ற பகுதிகளில் சிக்கித் தவித்தவர்களை இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் மீட்டு கொழும்பு அழைத்துச் சென்றன.

தியாதலவா ராணுவ முகாமிலிருந்து நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கோட்மாலே பகுதிக்கு 40 வீரர்கள் அடங்கிய இலங்கை ராணுவத்தின் 5 குழுக்கள் இந்தியா விமானப் படை ஹெலிகாப்டர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டன.

“இந்த மீட்புப் பணிகளில் பெண்கள், குழந்தைகள், காயமடைந்தவர்கள் உள்ளிட்ட சிக்கியவர்கள் என 150-க்கும் அதிகமானோர் வான் வழியாக மீட்கப்பட்டனர். இவர்களில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.” என வெளியுறவு அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் விமான சேவை பாதிக்கப்பட்டதால் வெவ்வேறு நாடுகளிலிருந்து கொழும்பு வழியாக இந்தியா வர திட்டமிட்டிருந்த பயணிகள் சிக்கித் தவித்தனர்.

இது தொடர்பான செய்திகள் வெளியான நிலையில் அவர்களுக்கு உதவுவதற்காக சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டு, உதவி எண்களும் அறிவிக்கப்பட்டு இருந்தன.

இலங்கையில் சிக்கித் தவித்த இந்தியர்கள் சிறப்பு இந்திய விமானப் படை விமானங்கள் மற்றும் வர்த்தக விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டதாக கூறும் வெளியுறவு அமைச்சகம், தற்போது வரை 2000-க்கும் மேற்பட்டோர் டெல்லி மற்றும் திருவனந்தபுரத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களுடன் இந்தியா உறுதுணையாக நிற்பதாக இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பாகிஸ்தான் கடற்படையின் பிஎன்எஸ் சைஃப் போர்க்கப்பல் மீட்புப் பணிகளில் உதவியதாக பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளின் மக்கள் தொடர்பு பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கடற்படையின் தரப்பிலிருந்து உணவு பொருட்கள், அத்தியாவசிய முதலுதவி உபகரணங்கள், அவசர கால மருந்துகள் வழக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவைபோக நடமாடும் மருத்துவமனை அமைப்பு, படகுகள், கூடாரங்கள், போர்வைகள், உணவு பொட்டலங்கள் மற்றும் மருந்துகள் உடன் 45 பேர் அடங்கிய மீட்புக் குழு இலங்கைக்கு அனுப்பப்படும் என பாகிஸ்தான் பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்திருந்தது.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு சீன செஞ்சிலுவை சங்கம் அவசர உதவியாக 1 லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவி அளித்ததாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன வர்த்தக சபை மற்றும் இலங்கையில் உள்ள வெளிநாடுவாழ் சீனர்களின் அமைப்பு 10 மில்லியன் இலங்கை ரூபாய் மதிப்புள்ள நன்கொடைகளை வழங்கியுள்ளதாக சீன தூதரகம் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து அவசர நிவாரணப் பொருட்களுடன் 4 பேர் கொண்ட மதிப்பீட்டு குழுவை ஜப்பான் அரசு அனுப்பியிருந்தது. மருத்துவ நிபுணர்கள் அடங்கிய இந்தக் குழு மேற்கொள்ளும் மதிப்பீட்டின் அடிப்படையில் ஜப்பான் பேரிடர் மீட்புக் குழு அனுப்பப்படும் என ஜப்பான் அரசு தெரிவித்திருந்தது.

இலங்கை அமைச்சர் ருவான் ரணசிங்கே இந்தியாவின் என்.டி.ஆர்.எஃப் குழுவினருக்கு நன்றி தெரிவித்திருந்தார். “இலங்கையில் பதுளை மாவட்டம் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்று. இங்கே இன்னும் பல இடங்களில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. குறைந்தது 53 பேர் மண்ணில் புதைந்துவிட்டனர். அங்கே மீட்புப் பணியில் என்.டி.ஆர்.எஃப் குழுவினர் மிகவும் உதவியாக உள்ளனர்.” என அவர் தெரிவித்தார்.

இதேபோல், பாகிஸ்தான் உதவிக்கு இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “இலங்கைக்கு உதவுவதற்கான பாகிஸ்தானின் தயார் நிலை இரு நாடுகளுக்கும் இடையிலான வலிமையான பிணைப்பை காட்டுகிறது. இந்த நட்பையும், ஒத்துழைப்பையும் மதிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்