Home Blog Page 3

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; 800-க்கும் மேற்பட்டோர் பலி

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; 800-க்கும் மேற்பட்டோர் பலி

Powerful earthquake in Afghanistan; Over 800 dead

  • கடந்த 2023-ம் ஆண்டுக்குப் பின்னர் ஆப்கனில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலநடுக்கமாக இது உள்ளது

  • கட்டிட இடிபாடுகள் உள்ள பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் செல்வதில் சிக்கல்

காபூல், செ. 01

ஆப்கானிஸ்தானில் இன்று (திங்கள்கிழமை) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 800-க்கும் அதிகமானோர் பலியாகினர். 2500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து அங்கு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானின் நாங்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் எனுமிடத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கங்கள் குறித்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதலில் 6.3 ரிக்டர் அளவிலும், பின்னர் 4.7 ரிக்டர் அளவிலும் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த 2023-ம் ஆண்டுக்குப் பின்னர் ஆப்கனில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலநடுக்கமாக இது உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இப்பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 4000 பேர் வரை உயிரிழந்ததாக தலிபான் அரசு தெரிவித்தது. ஆனால் ஐ.நா சபையோ 1500 பேர் உயிரிழந்தனர் எனத் தெரிவித்தது.

இந்நிலையில் இன்றைய நிலநடுக்கத்தில் இதுவரை 800-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல்கள் வருகின்றன. இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையில், தலிபான் அரசின் சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் ஷராஃபத் ஜமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “800 பேர் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. இன்னும் பலி எண்ணிக்கை அதிகமாகலாம். கட்டிட இடிபாடுகள் உள்ள பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் செல்வதில் சிக்கல் நிலவுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாடானது நிலநடுக்கங்கள் ஏற்படக் கூடிய பகுதியில் உள்ளது. அதுவும் குறிப்பாக அங்குள்ள இந்துகுஷ் மலைகளானது இந்தியா மற்று யூரேஸியா டெக்டானிக் தகடுகள் இணையும் இடத்தில் உள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, ஜெர்மனி, இங்கிலாந்தில் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணம்

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, ஜெர்மனி, இங்கிலாந்தில் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணம்

Chief Minister Stalin’s official visit to Germany and England to attract industrial investments to Tamil Nadu

  • மொத்தம் 36 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 30,037 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் ரூ.18,498 கோடிக்கான முதலீடுகள் தமிழகத்துக்கு வந்துள்ளன

  • ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 4ம் தேதி நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று, பெரியார் படத்தை திறந்து வைக்கிறேன்.

சென்னை, ஆக. 31

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, ஜெர்மனி, இங்கிலாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று புறப்பட்டுச் சென்றார்.

தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, ஜெர்மனி, இங்கிலாந்தில் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து விமானத்தில் ஜெர்மனிக்கு அவர் நேற்று புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த 2021-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை ரூ.10 லட்சத்து 62 ஆயிரத்து 752 கோடிக்கான முதலீடுகளை ஈர்த்து, 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 32.81 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதில் பெரும்பாலான திட்டங்கள் நிறைவடையும் நிலையில் உள்ளன. பல நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கிவிட்டன. இதனால் வளர்ச்சி வந்திருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு, மத்திய அரசு வெளியிடும் புள்ளி விவரங்களே ஆதாரம்வெளிநாட்டு பயணங்களால் 36 ஒப்பந்தங்கள்: எனது ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்திலும், தமிழகம் அமைதியான மாநிலமாக, திறமையான இளைஞர்கள் உள்ள மாநிலமாக, வாய்ப்புகளை ஊக்குவிக்கும் மாநிலமாக உயர்ந்துள்ளதை தரவுகளுடன் எடுத்துச் சொல்லி, முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளேன். இதுவரை. அமெரிக்க பயணத்தில் 19, ஸ்பெயினில் 3, ஜப்பானில் 7, ஐக்கிய அரபு அமீரகத்தில் 6, சிங்கப்பூரில் ஒன்று என மொத்தம் 36 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 30,037 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் ரூ.18,498 கோடிக்கான முதலீடுகள் தமிழகத்துக்கு வந்துள்ளன. இந்த 36 ஒப்பந்தங்களில் 23 திட்டங்கள் பல்வேறு செயல்பாட்டு நிலைகளில் உள்ளன.


இதன் தொடர்ச்சியாகவே ஒரு வார பயணமாக தற்போது ஜெர்மனி, இங்கிலாந்துக்கு செல்கிறேன். முதலில் ஜெர்மனிக்கு செல்கிறேன். அங்கிருந்து செப்.1-ம் தேதி இங்கிலாந்து செல்கிறேன். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 4ம் தேதி நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று, பெரியார் படத்தை திறந்து வைக்கிறேன். 8-ம் தேதி தமிழகம் திரும்புகிறேன். இவ்வாறு முதல்வர் கூறினார். பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

எனது வெளிநாட்டு பயணங்களால் தமிழகத்துக்கு பயன் உண்டா என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கேட்கிறார். அவர் தனது பயணம் போலவே இதுவும் இருக்கும் என்று கருதி பேசுகிறார். ஆனால், நான் கையெழுத்திடும் அனைத்து ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வரப்போகின்றன, வந்திருக்கின்றன.

பிஹார் போல, தமிழகத்திலும் cளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளுமா என்ற கேள்வி எழுகிறது. யார், என்ன சதி செய்தாலும், தமிழகம் முறியடிக்கும். திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு உள்ளதா என்று கேட்கிறீர்கள். புதிய கட்சிகள் வருகிறதோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் அதிகம் வருகின்றனர்.

விஜய்யின் அரசியல் வருகை மற்றும் ‘திமுகவுக்கு தவெகதான் போட்டி’ என்று அவர் சவால்விட்டுள்ளது குறித்து நான் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பேச்சை குறைத்து, செயலில் நம் திறமையை காட்ட வேண்டும். சி-வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பு வந்துள்ளது. எல்லா கருத்துக் கணிப்புகளையும் மிஞ்சி ஒரு அமோக வெற்றியை திமுக கூட்டணி பெறும். அதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு முதல்வர் கூறினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு ; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முதல்வர் கோரிக்கை 

அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு ; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முதல்வர் கோரிக்கை

Tamil Nadu’s exports severely affected by US tariffs, CM demands the central government to take action

  • தமிழ்நாட்டின், குறிப்பாகப் பின்னலாடை மையமான திருப்பூரின், ஏற்றுமதி வர்த்தகத்தினைப் பெரிதும் பாதித்துள்ளது

  • தொழிலாளர் சார்ந்த துறைகள் ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, ஆக. 28

இந்தியப் பொருட்களின் மீதான அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒன்றிய அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளை வலியுறுத்தி, உடனடி நிவாரணம் மற்றும் அமைப்புரீதியான சீர்திருத்தங்கள் மூலம் நமது தொழிற்சாலைகள் மற்றும் பணியாளர்களைக் காக்க வேண்டுகிறேன் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, கடந்த 16-ம் தேதி (ஆக.16) இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியுள்ளதால், தமிழ்நாட்டில் பின்னலாடை உள்ளிட்ட பல்வேறு தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்தை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) சமூகவலைதளப் பதிவொன்று வெளியிட்டுள்ளார்.

அதில் முதல்வர் ஸ்டாலின், “அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு தமிழ்நாட்டின், குறிப்பாகப் பின்னலாடை மையமான திருப்பூரின், ஏற்றுமதி வர்த்தகத்தினைப் பெரிதும் பாதித்துள்ளது. ஆண்டுக்கு 3000 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பதோடு, பல்லாயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பும் இதனால் பாதிப்படைந்துள்ளது.

 

இந்நிலையில், ஒன்றிய அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துகிறேன். உடனடி நிவாரணம் மற்றும் அமைப்புரீதியான சீர்திருத்தங்கள் மூலம் நமது தொழிற்சாலைகள் மற்றும் பணியாளர்களைக் காக்க வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறையும்’ – இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு புதன்கிழமை (ஆக.27) அமலுக்கு வந்தது. ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியோடு இந்த கூடுதல் 25 சதவீதமும் சேர்ந்துள்ள நிலையில், 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும். இதனால், தொழிலாளர் சார்ந்த துறைகள் ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியப் பொருட்களின் மீதான அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு மத்திய அரசின் நடவடிக்கையை கோரியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

முன்னாள் அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

முன்னாள் அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

Enforcement Directorate officials raid 13 places, including former minister Sourav Bhardwaj’s house

  • 2018 – 19 காலகட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி ரூ.5,590 கோடி மதிப்பீட்டில், 24 மருத்துவமனைகள் கட்ட, மேம்படுத்த ஒப்புதல் வழங்கியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டினார்.

  • பிரதமர் மோடியின் பட்டச் சான்றிதழ் தொடர்பாக கேள்வி எழுப்பப்படுவதால், அதிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப இந்தச் சோதனை நடத்தப்படுகிறது.”

புதுடெல்லி, ஆக. 26

டெல்லி முன்னாள் அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஆம் ஆத்மி ஆட்சியின் போது மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு வழங்கப்பட்ட ஒப்புதல் ரீதியாக சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாகக் கூறி இந்தச் சோதனையை அமலாக்கத் துறை நடத்தியுள்ளது.

இந்தச் சோதனை ஒரே நேரத்தில் 13 இடங்களில் நடைபெற்றாலும் கூட இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

சவுரவ் பரத்வாஜ் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் 3 முறை எம்எல்ஏவாக இருந்தவராவார். மேலும் அவர் டெல்லி சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு மற்றும் நீர் வளத்துறை அமைச்சராகவும், டெல்லி நீர் வாரியத் துறை தலைவராகவும் இருந்தார். ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2024 ஆகஸ்டில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்திர குப்தா, 2018 – 19 காலகட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி ரூ.5,590 கோடி மதிப்பீட்டில், 24 மருத்துவமனைகள் கட்ட, மேம்படுத்த ஒப்புதல் வழங்கியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டினார்.

 

இந்நிலையில், இந்தப் புகாரை விசாரித்த அமலாக்கத் துறை, இந்த ஒப்பந்தங்களை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. சிலவற்றில் மதிப்பீட்டை விட அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால், எந்த ஒரு பணியும் திட்டமிட்ட காலத்துக்குள் முழுமையாக முடிக்கப்படவில்லை என்று கூறுகிறது. உதாரணத்துக்கு ரூ.1,125 கோடி மதிப்பீட்டில் உருவாக்க திட்டமிடப்பட்ட ஐசியு மருத்துவமனை திட்டம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 6000 படுக்கை வசதிகளுடன் உருவாக்க திட்டமிடப்பட்ட இந்த மருத்துவமனையில் பாதியளவு கூட பணிகள் முடியவில்லை என்று அமலாக்கத் துறை கூறுகிறது.

இந்தச் சோதனை முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்பட்டது என டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி கூறியுள்ளார். “சவுரவ் வீடு, சொந்தமான இடங்களில் இன்று சோதனை நடத்தப்பட்டது ஏன் தெரியுமா?. பிரதமர் மோடியின் பட்டச் சான்றிதழ் தொடர்பாக கேள்வி எழுப்பப்படுவதால், அதிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப இந்தச் சோதனை நடத்தப்படுகிறது.” என்று கூறினார்.

இதேபோல் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, “நேற்று ஒட்டுமொத்த தேசமும் பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு பற்றி கேள்வி எழுப்பியது. அதிலிருந்து மக்களை திசை திருப்ப அடுத்த நாளே ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தப்படுகிறது. எங்களது கேள்வி மிகவும் எளிமையானதே. மோடியின் பட்டச் சான்றிதழ் போலியானதா என்பதே அது. அதற்குப் பதில் சொல்வதற்கு பதில் ரெய்டு நடத்துவது ஏன்?.” என்று வினவியுள்ளார்.

டெல்லியில் தற்போது பாஜக ஆட்சி நடைபெறுகிறது. ரேகா குப்தா முதல்வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க்து.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

தமிழக அரசு சார்பில் இதழியல் கல்வி நிறுவனம் ; முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழக அரசு சார்பில் இதழியல் கல்வி நிறுவனம் ; முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

 Chief Minister MK Stalin inaugurated the Journalism Education Institute in Chennai

  • ஓராண்டு இதழியல் கல்வி முடிக்கும் நபர்கள் அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றில் பணி
  • தமிழகத்தில் மேலும் திறமையான பத்திரிக்கையாளர்களை உருவாக்கும் வகையில் இதழியல் கல்வி நிறுவனமும் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை,  ஆக. 25

கோட்டூர்புரத்தில் தமிழக அரசு சார்பில் இதழியல் கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வி நிறுவனத்தை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 25) தொடங்கி வைத்தார். இந்த கல்வி நிறுவனத்தில் டிஜிட்டல் மீடியா காட்சி தொடர்புகள் திறன் உள்ளிட்ட படிப்புகள் கற்றுத்தரப்பட உள்ளது. இதில், சேர்வதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் மேலும் திறமையான பத்திரிக்கையாளர்களை உருவாக்கும் வகையில் இதழியல் கல்வி நிறுவனமும் தொடங்கப்பட்டுள்ளது.

இதில், ஓராண்டு இதழியல் கல்வி முடிக்கும் நபர்கள் அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றில் பணி கிடைக்கும். இதே போல பி. ஐ. பி. மத்திய அரசு துறைகளில் வேலை கிடைக்கும். தனியார் கல்வி நிறுவனங்களில் அதிக அளவு கட்டணம் செலுத்தி படிக்கும் மாணவர்கள், இதழ்கள் கல்வி நிறுவனத்தில் குறைந்த அளவில் கட்டணம் செலுத்தி படிக்கலாம்.இவர்களுக்கு மூத்த பத்திரிகையாளர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இதில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.  இதில் ஏழ்மை சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 40 பேர் பயின்று வருகின்றனர். இதைப்போல ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தற்போது, ஊடகத்துறை வளர்ந்து வரும் துறையாக உள்ளது. இதில், இதழ்கள் தொடர்பான படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் இருந்தால் தான் பி. ஐ. பி., தூர்தர்ஷன், சென்னை வானொலி மையம் ஆகியவற்றில் வேலை வாய்ப்பு கிடைக்கும். இதே போல, மெட்ராஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் இவை தொடர்பான படிப்பு இருந்தாலும், ஓராண்டு இதழியல் படிப்பு கற்றுத் தரும் நிறுவனம் சென்னையில் தற்போது தான் முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களிலும் இதழியல் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிகழ்வில் முதலாம் ஆண்டு சேர்க்கையில் பங்கேற்று உள்ள ஆண் நபர் ஒருவர் கூறுகையில், மக்கள் பணியிலும், கழகப் பணியிலும் ஆர்வமாக இருக்க வேண்டும் என்று முதல் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அப்போது, இருந்த ஆர்வம் தான் என்னை ஒரு முழு பத்திரிக்கையாளராக மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இதழியல் கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகிறேன் என்று தெரிவித்தார்.தென்காசி மாவட்டம், கீழக்கலங்களைச் சேர்ந்த மாணவி ஒருவர் பேசுகையில், நான் திமுகவின் இளம் பேச்சாளராக இருந்து வருகிறேன். ஒவ்வொரு பொதுக்கூட்டங்களில் பேசும் போது எனக்கு ஆர்வம் தோன்றியது. ஒவ்வொரு புத்தகங்களையும் வாசிக்கும் போதும் அதில் இவ்வளவு தகவல்களை உள்ளதா என்று ஆர்வம் என்னை ஆட்கொண்டது. இதில், என்னுடைய பங்கு இருக்க வேண்டும் என்பதற்காக இதழியல் துறையை தேர்ந்தெடுத்துள்ளேன். தனியார் நிறுவனங்களில் ஒரு செமஸ்டர் தேர்வுக்கு ரூ. 40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இதழியல் கல்வி நிறுவனத்தில் ரூ.10 ஆயிரத்தில் கல்வி பெற்று விடலாம் என்று தெரிவித்தார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

பிற மாநில தொழிலா​ளர்​கள் மீண்டும் தாயகம் திரும்பினால் தமிழக தொழில் துறை பாதிப்படையுமா ?

பிற மாநில தொழிலா​ளர்​கள் மீண்டும் தாயகம் திரும்பினால் தமிழக தொழில் துறை பாதிப்படையுமா ?

Will the Tamil Nadu industry be affected if workers from other states return home?

  • வேலை ​வாய்ப்​புக்​காக பிற மாநிலங்​களுக்கு சென்​றுள்ள தொழிலா​ளர்​கள் மீண்​டும் ஊர் திரும்​பி​னால், ஊக்​கத்​தொகை​யாக ரூ.5,000 மற்​றும் வேலை​வாய்ப்​புக்​கான உதவி​கள் செய்​யப்​படும் என உறுதி
  • 25 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட புலம்​பெயர் தொழிலா​ளர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர்.

கோவை, ஆக. 25

தமிழகத்​தில் உள்ள சிறு, குறு மற்​றும் நடுத்தர (எம்​எஸ்​எம்இ) தொழில் நிறு​வனங்​களில் 25 லட்​சம் பிற மாநில தொழிலா​ளர்​கள் பணி​யாற்​றிவரும் நிலை​யில், மேற்கு வங்க முதல்​வரின் சலுகை அறி​விப்​பால் தொழில் துறை​யினர் கலக்​கமடைந்துள்ளனர்.

உற்​பத்தி மற்​றும் சேவைத் துறை​களில் தேசிய அளவில் சிறந்து விளங்​கும் தமிழகத்​தில், அடிப்​படைப் பணி​களுக்கு தொழிலா​ளர்​கள் பற்​றாக்​குறை அதி​கம் உள்​ளது. இதனால், ஒடி​சா, உத்தரபிரதேசம், பிஹார் உள்​ளிட்ட பல்​வேறு மாநிலங்​களை சேர்ந்த புலம்​பெயர் தொழிலா​ளர்​கள் அதிக எண்​ணிக்​கை​யில் இப்​பணி​களில் ஈடு​படுத்​தப்​பட்டு வரு​கின்​றனர்.

தொடக்​கத்​தில் கட்​டு​மானம், நூற்​பாலை, மருத்​து​வ​மனை, ஓட்​டல் போன்ற துறை​களில் மட்​டும் பிற மாநில தொழிலா​ளர்​கள் பணி​யாற்​றிய நிலை​யில், தற்​போது சரக்கு வாக​னம் ஓட்​டு​தல், தூய்​மைப் பணி, விவ​சாயப் பணி உள்​ளிட்ட பெரும்​பாலான துறைகளில் அதிக எண்​ணிக்​கை​யில் பணிபுரி​கின்​றனர்.

அண்​மை​யில், மேற்​கு​வங்க முதல்​வர் மம்தா பானர்​ஜி, வேலை ​வாய்ப்​புக்​காக பிற மாநிலங்​களுக்கு சென்​றுள்ள தொழிலா​ளர்​கள் மீண்​டும் ஊர் திரும்​பி​னால், ஊக்​கத்​தொகை​யாக ரூ.5,000 மற்​றும் வேலை​வாய்ப்​புக்​கான உதவி​கள் செய்​யப்​படும் என உறுதி அளித்​துள்​ளார்.

இந்த அறி​விப்​பு, புலம்​பெயர் தொழிலா​ளர்​களை நம்​பி​யுள்ள தமிழக தொழில் துறை​யினரை கலக்​கமடையச் செய்​துள்​ளது. இதுகுறித்து தமிழ்​நாடு அனைத்து தொழில்​முனை​வோர் சங்க மாநிலப் பொதுச் செய​லா​ளர் ஜெய​பால் கூறிய​தாவது: தமிழகத்​தில் 50 லட்​சம் எம்​எஸ்​எம்இ நிறு​வனங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன.

இவற்​றில் 25 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட புலம்​பெயர் தொழிலா​ளர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர். தொடக்​கத்​தில் கட்​டு​மானத் தொழிலில் மட்​டுமே பலர் பணி​யாற்றி வந்த நிலை​யில், தற்​போது உற்​பத்தி மற்​றும் சேவைப் பிரிவு​களின் கீழ் உள்ள பெரும்​பாலான தொழில் நிறு​வனங்​களில் அவர்​கள் பணி​யாற்றி வரு​கின்​றனர்.

அடிப்​படைப் பணி​களில் ஈடு​பட்​டுள்ள புலம்​பெயர் தொழிலா​ளர்​களுக்கு தொழிலைக் கற்​றுக்​கொடுத்​து, தங்​குமிடம் கொடுத்​து, ஊக்​கத்​தொகை உள்​ளிட்ட சலுகைகளு​டன் தமிழகத்​தில் வேலை​வாய்ப்பு வழங்​கப்​படு​கிறது. புலம்​பெயர் தொழிலா​ளர்​கள் இல்​லாத துறையே இல்லை என்ற நிலை உள்​ளது.

இத்​தகைய சூழ்​நிலை​யில், அண்​மை​யில் மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்​ஜி, புலம்​பெயர்ந்த தொழிலா​ளர்​கள் மீண்​டும் மேற்​கு​வங்க மாநிலத்​துக்கு திரும்​பி​னால் ஒவ்​வொரு​வருக்​கும் ரூ.5,000 ஊக்​கத்​தொகை​யுடன் வேலை​வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று அறி​வித்​துள்​ளார். இந்த அறி​விப்பு தொழில்​முனை​வோர் மத்​தி​யில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

தமிழகத்​தில் உள்ள புலம்​பெயர் தொழிலா​ளர்​களை தங்​கள் கட்​டுப்​பாட்​டில் வைத்​திருப்​பது வட மாநிலங்​களை சேர்ந்த ஒப்​பந்​த​தா​ரர்​கள்​தான். இவர்​களில் புலம்​பெயர் தொழிலா​ளர்​களுக்கு உதவும் வகை​யில் ஓட்​டல் உள்​ளிட்ட பல்​வேறு வணி​கத்​தி​லும் ஈடு​பட்டு வரு​கின்​றனர். ஒரு தொழிலா​ளிக்கு ரூ.600 தினசரி ஊதி​யம் நிர்​ண​யிக்​கப்​பட்​டால், அதில் ரூ.30 வரை ஒப்​பந்​த​தா​ரர்​கள் எடுத்​துக் கொள்​வார்​கள். தொழில் துறை​யினரிட​மும் கமிஷன், தொழிலா​ளர்​களிட​மும் கமிஷன் பெற்று வரு​கின்​றனர்.

தொழில் நிறுவன உரிமை​யாளர்​கள் கூறு​வதை​விட, தங்​களை பணிக்கு சேர்த்​து​விட்ட ஒப்​பந்​த​தா​ரர்​கள் கூறு​வதைத்​தான் புலம்​பெயர் தொழிலா​ளர்​கள் கேட்டு நடப்​பார்​கள். தமிழகத்​தில் உள்ள வடமாநில ஒப்​பந்​த​தா​ரர் ஒரு​வர் மாதம் ரூ.12 லட்​சம் கமிஷன் தொகையை பெற்று வரு​கிறார். பணத்தை வழங்கி தொழிலா​ளர்​களை அழைத்து வர வேண்​டும் என்று கூறி​னால், 500, 1,000 தொழிலா​ளர்​களை பணிக்கு அனுப்​பிவைக்​கும் திறன் கொண்​டுள்​ளார்.

இத்​தகைய ஒப்​பந்​த​தா​ரர்​கள் வேறு மாநிலத்​துக்கு சென்​று​விட்​டால் தமிழ்​நாட்​டில் பல்​வேறு துறை​கள் ஸ்தம்​பிக்​கும் அபா​யம் உள்ளது. எனவே, மேற்​கு​வங்க முதல்​வர் போன்​றவர்​கள் தொடர்ந்து சலுகை அறி​விப்​பு​களை வெளி​யிட்டு வந்​தா​லும், புலம்​பெயர் தொழிலா​ளர்​களை தக்​க​வைத்​துக்​கொள்ள தேவை​யான நடவடிக்​கைகளை தமிழக முதல்​வர் உடனடி​யாக மேற்​கொள்ள வேண்டும். அதுவே இப்​பிரச்​சினைக்கு தீர்​வாகும். இவ்​வாறு அவர் கூறினார்.

இன்று முதல் 27-ம் தேதி வரை லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

இன்று முதல் 27-ம் தேதி வரை லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

Light to moderate rain is likely from today to the 27th – India Meteorological Department

  • இன்று அதிகாலை முதல் இடி மின்னலுடன் சென்னையில் மழை தொடங்கியது.

  • மழை காரணமாக நகரில் தாழ்வான பகுதிகளில் சில இடங்களில் மழைநீர் தேங்கியது.

சென்னை, ஆக. 22
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை பரவலாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பதிவானது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

இன்று அதிகாலை முதல் இடி மின்னலுடன் சென்னையில் மழை தொடங்கியது. வடபழனி, பல்லாவரம், அண்ணா நகர், மந்தைவெளி, ஆதம்பாக்கம், அசோக் நகர், தியாகராய நகர், கிண்டி, நுங்கம்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், நங்கநல்லூர், ஆலந்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பதிவானது.

இதில் பெரும்பாலான இடங்களில் சில நிமிடங்களில் 5 சென்டி மீட்டர் அவருக்கு மழை பொழிந்துள்ளது. மந்தைவெளி பகுதியில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இந்த திடீர் மழைக்கு வெப்பச் சலனமே காரணம் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
மழை காரணமாக நகரில் தாழ்வான பகுதிகளில் சில இடங்களில் மழைநீர் தேங்கியது. அதனால் வாகனங்கள் சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் மெதுவாக சென்றன. இதன் காரணமாக சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று வேலை நாள் என்பதால் பணிக்கு செல்வோர், பள்ளிக்கு செல்வோர் என மக்கள் சிரமத்தை எதிர்கொண்டனர்.

heavy rainfall in mumbai. schools colleges holiday

இந்நிலையில், தமிழகத்தில் சில பகுதிகளில் இன்று முதல் 27-ம் தேதி வரை லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் வட கடலோர பகுதிகளில் அதிகாலை நேரங்களில் மழைப் பொழிவு தொடரும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

‘மிஸ் யுனிவர்ஸ் இந்​தி​யா’ பட்​டத்தை வென்​றார் மணிகா விஸ்​வகர்மா

‘மிஸ் யுனிவர்ஸ் இந்​தி​யா’ பட்​டத்தை வென்​றார் மணிகா விஸ்​வகர்மா

Manika Vishwakarma to win ‘Miss Universe India’ title

  • சர்​வ​தேச அழகி போட்​டி​யில் பங்​கேற்க அந்​தந்த நாடு​களில் ஒவ்​வொரு ஆண்​டும் அழகி போட்டி நடத்தப்படுகிறது.

  • பல்வேறு மாநிலங்​களை சேர்ந்த 48 பேர் பங்​கேற்​றனர். தமிழகத்​தின் சார்​பில் காமாக் ஷி ஆத்​ரேயா பங்​கேற்​றார்.

ஜெய்ப்​பூர், ஆக. 20

‘மிஸ் யுனிவர்ஸ் இந்​தி​யா’ பட்​டத்தை மணிகா விஸ்​வகர்மா வென்​றுள்​ளார். வரும் நவம்​பரில் தாய்​லாந்​தில் நடை​பெற உள்ள மிஸ் யுனிவர்ஸ் சர்​வ​தேச அழகி போட்​டி​யில் இந்​தி​யா​வில் சார்​பில் அவர் பங்​கேற்க உள்​ளார். கடந்த 1926-ம் ஆண்டு முதல் சர்​வ​தேச அளவில் ‘மிஸ் யுனிவர்​ஸ்’ அழகி போட்டி நடத்​தப்​பட்டு வரு​கிறது.

இரண்​டாம் உலகப்​போரின்​போது இந்த போட்டி நிறுத்​தப்​பட்​டது. பின்​னர் கடந்த 1952 முதல் மீண்​டும் ‘மிஸ் யுனிவர்​ஸ்’ போட்டி நடை​பெற்று வரு​கிறது. இந்த சர்​வ​தேச அழகி போட்​டி​யில் பங்​கேற்க அந்​தந்த நாடு​களில் ஒவ்​வொரு ஆண்​டும் அழகி போட்டி நடத்தப்படுகிறது.

இதன்​படி ‘மிஸ் யுனிவர்ஸ் இந்​தி​யா’ பட்​டத்​துக்​கான போட்டி ராஜஸ்​தான் தலைநகர் ஜெய்ப்​பூரில் நடை​பெற்று வந்​தது. இதில் பல்வேறு மாநிலங்​களை சேர்ந்த 48 பேர் பங்​கேற்​றனர். தமிழகத்​தின் சார்​பில் காமாக் ஷி ஆத்​ரேயா பங்​கேற்​றார். பல்​வேறு சுற்றுகளுக்​குப் பிறகு இறு​திச் சுற்​றுக்கு 11 பேர் தேர்வு செய்​யப்​பட்​டனர்.

ஜெய்ப்​பூரில் நேற்று முன்​தினம் இரவு இறு​திச் சுற்று போட்டி நடை​பெற்​றது. இதில் ராஜஸ்​தானை சேர்ந்த மணிகா விஸ்​வகர்​மா, ‘மிஸ் யுனிவர்ஸ் இந்​தி​யா’ பட்​டத்தை வென்​றார்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த தான்யா சர்​மா, ஹரி​யா​னாவை சேர்ந்த மெஹக் திங்ரா ஆகியோர் 2, 3-வது இடங்​களைப் பிடித்​தனர். வரும் நவம்​பரில் தாய்​லாந்​தின் நந்​த​புரி​யில் ‘மிஸ் யுனிவர்​ஸ்’ போட்டி நடை​பெற உள்​ளது. இதில் இந்​தி​யா​வின் சார்​பில் மணிகா விஸ்​வகர்மா பங்​கேற்க உள்​ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

விவசாயிகள் பயிர் கடன் : இணைய வழியில் விண்ணப்பித்த உடனே வழங்க திட்டம்

விவசாயிகள் பயிர் கடன் : இணைய வழியில் விண்ணப்பித்த உடனே வழங்க திட்டம்

Farmers’ crop loans: Scheme to provide immediate payment after online application

  • தருமபுரி அடுத்த ஒட்டப்பட்டி அவ்வை வழி பகுதியில், ஒன்றிய முன்னாள் அமைச்சர் முரசொலி மாறன் பிறந்த நாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

  • இதழியல், திரைப்படம், அரசியல் எனக் களம்கண்ட அனைத்துத் துறைகளிலும் தனிமுத்திரை பதித்து; திராவிட இயக்க வரலாறு, ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்?

தருமபுரி, ஆக. 17

விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த உடனேயே பயிர்கடன் வழங்கும் மாநில அளவிலான திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தில் இன்று தொடங்கி வைத்தார்.

விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த உடனேயே பயிர்கடன் வழங்கும் மாநில அளவிலான திட்டத்தின் தொடக்க விழா தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் இன்று நடைபெற்றது.
கூட்டுறவுத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், இணைய வழியில் பயிர் கடன் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர், அந்த வளாகத்தில் செயல்படும் இ-சேவை மையத்தை நேரில் ஆய்வு செய்து விவரங்களை கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு, சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் சதீஸ், தருமபுரி எம்.பி மணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு, தடங்கம் ஊராட்சியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க முதல்வர் புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக, தருமபுரி அடுத்த ஒட்டப்பட்டி அவ்வை வழி பகுதியில், ஒன்றிய முன்னாள் அமைச்சர் முரசொலி மாறன் பிறந்த நாளையொட்டி அவரது உருவப் படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், முரசொலி மாறனின் பிறந்த நாளையொட்டி மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “எளிய வேளாண் குடும்பத்தில் தியாகராஜ சுந்தரமாகத் தோன்றி, கலைஞரின் தோளில் வளர்ந்து, அவரால் நெடுமாறன் எனப் பெயர்மாற்றமும் பெற்று, அவரின் மனசாட்சியாகவே திகழ்ந்து, இந்திய ஒன்றியத்தின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக ஏற்றமும் கண்ட மதிப்புக்குரிய முரசொலி மாறன் அவர்களின் பிறந்தநாள்…

இதழியல், திரைப்படம், அரசியல் எனக் களம்கண்ட அனைத்துத் துறைகளிலும் தனிமுத்திரை பதித்து; திராவிட இயக்க வரலாறு, ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்?, மாநில சுயாட்சி எனக் காலவெள்ளத்தில் கரைந்திடாக் கருத்துக் கருவூலங்களை நமக்காக வழங்கிச் சென்றிருக்கும் அவரது பணிகளை நன்றியோடு நினைவுகூர்ந்து வணங்குகிறேன்!” என தெரிவித்துள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவு – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவு – அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

Decision to implement 6 special projects for the welfare of sanitation workers – Minister Thangam Tennarasu announce

  • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவு

 

  • “தூய்மை பணியாளர்கள் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி கரிசனத்துடன் இருக்கிறார். தூய்மை பணியாளர்களின் நலனை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது.தூய்மை பணியாளர்களின் நலவாரியம் சிறப்பாக செயல்படுவதை அரசு உறுதி செய்துள்ளது.”

சென்னை, ஆக. 14

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

முன்னதாக, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் கைது செய்து, காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்துக்கு அதிமுக, சிபிஎம், தேமுதிக, தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ள நிலையில், தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக 6 முடிவுகள் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்தார்.

அப்போது அவர், “தூய்மை பணியாளர்கள் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி கரிசனத்துடன் இருக்கிறார். தூய்மை பணியாளர்களின் நலனை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது.தூய்மை பணியாளர்களின் நலவாரியம் சிறப்பாக செயல்படுவதை அரசு உறுதி செய்துள்ளது.” என்று கூறினார்.

அமைச்சர் வெளியிட்ட 6 அறிவிப்புகளின் விவரம் வருமாறு:

1. தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும் போது அவர்களுக்கு நுரையீரல் மற்றும் தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய தொழில் சார் நோய்களை கண்டறியவும், சிகிச்சை அளிக்கவும் தனித் திட்டம் ஒன்று நிறைவேற்றப்படும்.

2. தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது உயிரிழந்தால், தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. அவர்களின் குடும்பங்களின் நலனையும், வாழ்வாதாரத்தையும் முழுமையாக உறுதி செய்யும் வகையில் இந்த நிதி உதவியுடன் கூடுதலாக ரூ.5 லட்சம் காப்பீடு இலவசமாக ஏற்படுத்தித் தரப்படும். இதனால், தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கிடைக்கும்.

3. தூய்மைப் பணியாளர்கள் அவர்களின் குடும்பத்தினரின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்திட, அவர்கள் சுய தொழில் தொடங்கும்போது அத்தொழில் திட்ட மதிப்பீட்டில் 35% தொகை அதிகபட்சமாக ரூ.3,50,000 மானியமாக வழங்கப்படும். கடனை திருப்பிச் செலுத்த ஏதுவாக 6% வட்டி மானியமும் வழங்கப்படும்.

4. தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்காக புதிய உயர்கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.

5. நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு, வரும் 3 ஆண்டுகளில், தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் உதவியோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்கள் மூலம் 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டித் தரப்படும். கிராமப்புறங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டில் தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

6. நகர்ப்புற தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த நகராட்சிகளின் மூலம் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் முதலில் சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக மற்ற நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்