Home Blog Page 4

பேரிடர் பாதுகாப்பு ஆலோசனை : கனமழை பெய்யும் இடங்களில் மீட்பு, உணவு பொருட்கள் தயார் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு – முதல்வர் ஸ்டாலின்

பேரிடர் பாதுகாப்பு ஆலோசனை : கனமழை பெய்யும் இடங்களில் மீட்பு, உணவு பொருட்கள் தயார் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு – முதல்வர் ஸ்டாலின்

Disaster preparedness advisory: CM Stalin orders to prepare rescue and food supplies in areas prone to heavy rains – CM Stalin

  • சென்னையிலும் அதிக மழைப் பொழிவு இருக்கும் என்று சொல்கின்றனர். எல்லா இடங்களிலும் முகாம்கள், உணவுப் பொருட்களுக்கு ஏற்பாடு

  • அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை”

சென்னை, நவ. 28

பேரிடர் பாதுகாப்பு ஆலோசனை : கனமழை பெய்யும் இடங்களில் மீட்பு, உணவு பொருட்கள் தயார் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு – முதல்வர் ஸ்டாலின்

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘டித்வா’ புயலாக வலுப்பெற்று, சென்னைக்கு 540 கி.மீ தூரத்திலும், புதுச்சேரிக்கு 440 கி.மீ தெற்கு தென்கிழக்கு திசையிலும் தற்போது நிலைகொண்டு இருக்கிறது. இது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.

இதன் காரணமாக தஞ்சை, நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களிடம் காணொலி மூலம் தொடர்பு கொண்டு பேசிவருகிறோம்.

நேற்று என்னுடைய தலைமையில் இது தொடர்பாக கூட்டத்தை கூட்டி எச்சரிக்கை விடுத்துள்ளோம். அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளோம். ஏற்கெனவே பாதிக்கப்பட்ட பகுதிகளை உஷாராக கவனிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறோம். சென்னையிலும் அதிக மழைப் பொழிவு இருக்கும் என்று சொல்கின்றனர். எல்லா இடங்களிலும் முகாம்கள், உணவுப் பொருட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் நிலைமையை கவனமாக கண்காணித்து வருகின்றனர். டெல்டா மாவட்ட மக்கள் வஞ்சிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சொல்கிறார். அவர் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார். அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. அவருக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை”. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Chief Minister M.K. Stalin orders reading of the Preamble of the Constitution in government offices, schools, and colleges

  • தமிழக அரசு, அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றி மாநிலத்தின் வளர்ச்சி நோக்கி தொடர்ந்து செயல்படும் அரசாக இயங்கி வருகிறது.
  • பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்டுபாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப்போட்டிகள், கருத்தரங்குகள், விநாடி-வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு

சென்னை, நவ.26

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76-ம் ஆண்டையொட்டி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பை உள்ளடக்கி இந்தியாவை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த அரசியலமைப்புச் சட்டமாகும்.
தமிழக அரசு, அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றி மாநிலத்தின் வளர்ச்சி நோக்கி தொடர்ந்து செயல்படும் அரசாக இயங்கி வருகிறது.

விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை வகுத்து சிறப்பான முறையில் செயல்படுத்தி, அரசியலமைப் பின்படி மகளிர் மற்றும் சிறார்களின் அடிப்படை உரிமைகளை மேலோங்கச் செய்வதில் இவ்வரசு பெருமை கொள்கிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 76-வது ஆண்டை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் இன்று (நவ.26)காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்டுபாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப்போட்டிகள், கருத்தரங்குகள், விநாடி-வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

எஸ்​ஐஆர் : மறை​முக​ குடி​யுரிமை திருத்த சட்​டம் ; விடுதலை சிறுத்தை கட்சி தலை​வர் திரு​மாவளவன் கண்டன ஆர்ப்​பாட்​டம்

எஸ்​ஐஆர் : மறை​முக​ குடி​யுரிமை திருத்த சட்​டம் ; விடுதலை சிறுத்தை கட்சி தலை​வர் திரு​மாவளவன் கண்டன ஆர்ப்​பாட்​டம்

SIR: Secret Citizenship Amendment Act; VCK leader Thirumavalavan condemns the move

  • எதிர்க்​கட்​சிகளைபலவீனப்​படுத்​து​வது, காங்​கிரஸ், இடது​சா​ரி​கள், திரா​விட கட்​சிகள் இல்​லாத நிலையை உரு​வாக்​கு​வது​தான் பாஜக செயல் திட்​டம்.

  • மறை​முக​மாக குடி​யுரிமை திருத்த சட்​டத்தை கொண்டு வந்து தேசிய குடிமக்​கள் பெயரேட்டை உரு​வாக்​கவே எஸ்​ஐஆர் தற்​போது அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது

சென்னை, நவ. 25

எஸ்​ஐஆர் என்​பது மறை​முக​மாக குடி​யுரிமை திருத்​தச் சட்​டத்தை கொண்டு வரும் முயற்சி என்​றும், அரசி​யலமைப்பை சிதைப்​பது தான் பாஜக​வின் எண்​ணம் என்​றும் விடுதலை சிறுத்தை கட்சி தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​துள்​ளார்.

எஸ்​ஐஆர்-ஐ கண்​டித்து விசிக சார்​பில் சென்​னை,​எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று கண்டன ஆர்ப்​பாட்​டம் நடைபெற்றது. அப்போது விசிக தலைவர் திரு​மாவளவன் பேசி​ய​தாவது: பாஜக உள்​நோக்​கத்​துடன் தான் எஸ்​ஐஆரை கையாள்​கிறது.

பாஜக அரசு அரசி​யல் கட்​சிகளுக்கு நெருக்​கடியை ஏற்​படுத்தி உள்​ளது. விமர்​சனங்​களை செய்து கொண்டே எதிர்க்​கட்​சிகள் இதை நடை​முறைப்​படுத்தி தான் ஆக வேண்​டும் என்​கிற நெருக்​கடியை திட்​ட​மிட்டு ஏற்​படுத்​துகின்​றனர்.

மோடி, அமித் ஷா சராசரி அரசி​யல்​வா​தி​கள் அல்ல. இந்த அதி​காரத்தை பயன்​படுத்தி இந்​தி​யாவை அடியோடு புரட்​டப் பார்க்​கிறார்​கள். எதிர்க்​கட்​சிகளைபலவீனப்​படுத்​து​வது, காங்​கிரஸ், இடது​சா​ரி​கள், திரா​விட கட்​சிகள் இல்​லாத நிலையை உரு​வாக்​கு​வது​தான் பாஜக செயல் திட்​டம். ஜெயலலிதா இருந்​த​போது அதி​முக​வில் பாஜக தலை​யிட முடிய​வில்​லை. இன்று பழனி​சாமி பாஜக​விடம் கைபிசைந்து நிற்​கிறார்.
முதலில் நீ இந்​திய குடிமகனா என்று உறுதி செய், பிறகு நீ வாக்​காளரா என்று நாங்​கள் உறுதி செய்​கிறோம் என்​பது​தான் எஸ்​ஐஆர் நடவடிக்​கை. குடி​யுரிமை திருத்த சட்​டத்தை தமிழகம் தீவிர​மாக எதிர்த்​தது.

எனவே, மறை​முக​மாக குடி​யுரிமை திருத்த சட்​டத்தை கொண்டு வந்து தேசிய குடிமக்​கள் பெயரேட்டை உரு​வாக்​கவே எஸ்​ஐஆர் தற்​போது அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது. தேர்​தல் தில்லு முல்​லுகளை தேர்​தல் ஆணை​யத்​தின் மூலம் செய்து காண்​பிக்​கிறது.

தேர்​தல் ஆணை​ய​மும், பாஜக​வும் ஒரே நிறு​வன​மாக மாறி​யுள்​ளன. இவ்​வாறு அவர் பேசி​னார். ஆர்ப்​பாட்​டத்​தில், ரவிக்​கு​மார் எம்​.பி., எம்​எல்​ஏக்​கள் எஸ்​.எஸ்​.​பாலாஜி, ஆளூர் ஷாந​வாஸ், பனையூர் பாபு, துணை பொது செய​லா​ளர் வன்னி அரசு மற்​றும் 500-க்​கும்​ மேற்​பட்​டோர்​ பங்கேற்றனர்​.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

 தமிழக கடலோர மாவட்டங்களில் 30-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

 தமிழக கடலோர மாவட்டங்களில் 30-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Heavy rain likely in coastal districts of Tamil Nadu till 30th – Indian Meteorological Department announcement

  • வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (நவ.25) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

  • தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35-55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்

சென்னை, நவ.25

அந்தமான் பகுதியில் இருந்து தமிழகம் நோக்கி நகரும் காற்று சுழற்சி 27-ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் 30-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா கூறியதாவது: மலாக்கா ஜலசந்தி மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மலேசியா மற்றும் அதை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (நவ.25) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இது மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.

குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ.25) குமரிக்கடல், இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இதுதவிர, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த 3 சுழற்சிகளும் ஒன்றாக இணைந்து நகர வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் 30-ம் தேதி வரை கனமழை நீடிக்கும். குறிப்பாக, நவ.25 (இன்று) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 26, 27-ம் தேதிகளில் தூத்துக்குடி,ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

28-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

29-ம் தேதி மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

30-ம் தேதி திருவள்ளூரில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், புதுச்சேரியில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35-55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

23 செ.மீ. மழை கொட்டியது: தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 23 செ.மீ., நாலுமுக்கில் 22 செ.மீ., காக்காச்சி, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் 21 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் 19 செ.மீ., கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, சிதம்பரம், புவனகிரி, நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை, தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா கூறினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

தென்கொரியாவில் முதல் உலகளாவிய திருக்குறள் மாநாடு : 10 நாடுகளில் இருந்து 100 அறிஞர்கள் பங்கேற்பு – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு

தென்கொரியாவில் முதல் உலகளாவிய திருக்குறள் மாநாடு :

10 நாடுகளில் இருந்து 100 அறிஞர்கள் பங்கேற்பு – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு

First Global Thirukkural Conference in South Korea
100 scholars from 10 countries participate – CM Stalin commends 

  • மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டுப் பட்டயமும், கேடயமும் வழங்கப்பட்டது

  • சிறந்த மூன்று ஆய்வுக்கட்டுரைகளுக்கு தலா ரூ.6,000 பரிசுத் தொகை, 12 கட்டுரைகளுக்கு தலா ரூ.1,000 பரிசுத்தொகை

சியோல், நவ. 12 –
தென்கொரியா வரலாற்றில் முதல் முறையாக “உலகளாவிய திருக்குறள் மாநாடு” (ITCSK 2025) சியோலில் உள்ள சேஜோங் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்த வீரமாமுனிவரின் பிறந்தநாளையொட்டி இம்மாநாடு நடைபெற்றது.

தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் (SKTRA) சார்பில் “காலத்தை கடந்த உண்மைகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில், இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். திருக்குறளின் அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களை சமகால சவால்களுக்கான தீர்வுகளாக ஆராய்ந்து எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாராட்டுப் பட்டயமும், கேடயமும் வழங்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரிய மொழியை அறிமுகப்படுத்தியதற்காகவும், “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் ஆறு இந்திய மாணவர்களுக்கு தென்கொரியாவில் ஆராய்ச்சி படிப்பிற்கு வாய்ப்பு வழங்கியதற்காகவும் இப்பாராட்டு அளிக்கப்பட்டது. மாநாட்டில் தமிழ் இலக்கிய சேவையாளர்கள் கெளரவிக்கப்பட்டனர். உலகம் முழுவதும் 156 திருவள்ளுவர் சிலைகளை நிறுவிய டாக்டர் வி.ஜி. சந்தோஷத்திற்கு “திருவள்ளுவர் உலகத் தூதர் வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது.

37 நூல்கள் படைத்த புதுமைத்தேனீ மா. அன்பழகனுக்கு “உலகளாவிய தமிழ் இலக்கிய சேவையாளர் விருது” வழங்கப்பட்டது. Rev. Dr. அல்போன்ஸ் மாணிக்கம், ஜங்கனம் கிம், யாங் கீ மூன், பேராசிரியர் ப. அருளி ஆகியோருக்கும் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த மூன்று ஆய்வுக்கட்டுரைகளுக்கு தலா ரூ.6,000 பரிசுத் தொகையும், 12 கட்டுரைகளுக்கு தலா ரூ.1,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

THIRUKURAL MAANADU

Rev. Dr. அல்போன்ஸ் மாணிக்கம் “திருக்குறள் மற்றும் சமூக நீதி” என்ற தலைப்பில் முதன்மை உரை நிகழ்த்தினார். புதுமைத்தேனீ மா. அன்பழகன், முனைவர் பாலசுந்தரம் இளையதம்பி (கனடா), Dr. Alexis Devaraj (பிரான்ஸ்), தென்கொரியா ஹன்யங் பல்கலைக்கழக பேராசிரியர் ஹரிபாலன், கவிஞர் சகாய டர்சியூஸ் பீ, முனைவர் D. ஞானராஜ் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரை ஆற்றினர்.

தென்கொரியாவில் “தமிழ் பண்பாட்டு மையம்” நிறுவுதல், இந்திய மாணவர்களுக்கு வழிகாட்டுதல் திட்டம், இரு நாடுகளின் பல்கலைக்கழகங்களுக்கிடையே கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தங்களை உருவாக்குதல் (MoU) ஆகிய மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்-கொரிய கலாச்சார பரிமாற்றம், தமிழ் மொழி வகுப்புகள், திருக்குறள் ஆய்வுகள், ஆண்டுதோறும் மாநாடுகள் நடத்துதல் போன்ற செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன.

மாநாட்டு அமைப்பாளர்கள் பேராசிரியர் S. ஆரோக்கியராஜ் (தலைவர்), கவிஞர் சகாய டர்சியூஸ் பீ (துணைத் தலைவர்), முனைவர் D. ஞானராஜ் (செயலாளர்), சாந்தி பிரின்ஸ் (மக்கள் தொடர்பு) ஆகியோர் மாநாட்டு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். பேராசிரியர் சந்திரசேகரன், ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள், தமிழ், கலை-அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ச. திருநாவுக்கரசு, முனைவர் ஜான்சி ராணி ஆகியோர் அறிவியல் குழு உறுப்பினர்களாக பணியாற்றினர். அருட் தந்தை இன்பராஜ் மைகேல், பேராசிரியர் பலமுரளிகிருஷ்ணன், ஹேமநாதன், ஸ்வாமிநாதன், பிரான்சிஸ் ஜெவெல்சன், விபின் ஜியோ, ருவன் ஸ்ரீநாத், முனைவர் மகேந்திரன், ஆரோக்கியராஜ், சாருமதி, சுமத்திரா விக்னேஷ் ராம், ஆனந்த் மற்றும் துரை ஆகியோர் மாநாட்டு சிறப்பு குழுவினராக செயல்பட்டனர்.

மாநாட்டிற்கு பாண்டிச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி, மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆகியவை வாழ்த்துச் செய்திகளை அனுப்பி இருந்தன.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள். 

பைக் மீது கார் மோதிய விவகாரம் : விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்

0

பைக் மீது கார் மோதிய விவகாரம் : விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்

VCK  leader Thirumavalavan explains the incident of a car hitting a bike

  • திருமாவளவன் பேசுகையில், வழக்கறிஞர் வேண்டுமென்றே பைக்கை நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்

  • எடப்பாடி பழனிசாமி முன்பு ஒருவர் சென்று பைக்கை நிறுத்தினால், இப்படி கேள்வி எழுப்புவார்களா?ஒரு நிமிடம் கூட இல்லை. என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

சென்னை, அக். 11

சாலையில் சென்ற பைக் மீது தனது கார் மோதியதாக எழுந்த விவகாரம் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் கொடுத்துள்ளார். டூ வீலரில் வந்த வழக்கறிஞர் ஒருவர், காவலர்கள் சொன்னதை கேட்காமல் ஆணவத்துடன் முறைத்ததால் , நான்கு தட்டுத் தட்டினார்கள் என்று தெரிவித்துள்ளார்.

2 நாட்களுக்கு முன்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து விசிக வழக்கறிஞர் அணி சார்பாக கண்டன போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்றிருந்தார். இந்த போராட்டத்தை முடித்து புறப்படும் போது, திருமாவளவன் சென்ற கார் வழக்கறிஞர் ஒருவரின் பைக் மீது உரசியதாக கூறப்படுகிறது.

இதனால் கார் ஓட்டுநருடன் வாக்குவாதம் ஏற்பட, திருமாவளவனின் ஆதரவாளர்கள் மற்றும் வழக்கறிஞர் இடையில் மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக திருமாவளவன் பேசுகையில், வழக்கறிஞர் வேண்டுமென்றே பைக்கை நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை உள்ளிட்டோர் பேசியதால், பலரின் கவனம் திரும்பியது. இந்த நிலையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அதில் திருமாவளவன் பேசுகையில், ஒரு கட்சித் தலைவர்.. அவரின் காரின் முன்பு சென்று ஒருவர் பைக்கை நிறுத்துகிறார். அவரின் பாதுகாப்பு தொடர்பாக எவனும் கேள்வி கேட்கவில்லை. திருமாவளவன் ஏன் இறங்கி சென்று தடுக்கவில்லை என்று கேட்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி முன்பு ஒருவர் சென்று பைக்கை நிறுத்தினால், இப்படி கேள்வி எழுப்புவார்களா?ஒரு நிமிடம் கூட இல்லை. என்ன நடந்தது என்றே தெரியவில்லை.. அவன் வந்து நின்று முறைத்தான். யாராக இருந்தால் என்ன என்று கேட்டான்.. அவர்களிடம் முறைத்ததால் அவர்கள் அடித்தார்கள்.. அவன் என்ன சாதி, என்ன மதம் என்று கூட தெரியாது. ஓரமா நில்லுங்க என்று போலீசார் கேட்கிறார்கள்.

அவர்களிடமும் முறைக்கிறான்.. யாராக இருந்தால் என்ன என்று முறைத்தான்.. முறைத்து பார்த்ததால் தான் அடி வாங்கினான்.. அவ்வளவு திமிராடா உனக்கு.. ஆணவமாடா உனக்கு.. என்றுதான் அடித்தார்கள்.. வெறும் 4 அடிதான்.. ஒழுங்காக கூட அடிக்கவில்லை.. உடனே அவன் மயக்கம் போட்டு நெஞ்சு வலிக்கிறது என்று நாடகமாடுகிறான்.. என்ன நாடகம் பாருங்க.. போலீசாரிடம் நானே தெரியாமல் பண்ணிவிட்டான் என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.. நமது ஆட்களையும் அமைதிப்படுத்தினேன்.. உடனே திருமாவளவன் தான் அடிக்க சொன்னாரு என்கிறார்கள். அடங்க மறு என்று தான் சொல்லி இருக்கிறேன். எந்த இடத்திலும் வன்முறையை தூண்டியதில்லை.. அடங்க மறு என்பது ஒரு அரசியல் என்று தெரிவித்துள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு

IT companies decide to lay off thousands of employees

  • (டிசிஎஸ்), 2025-26 நிதியாண்டில் சுமார் 12,000 ஊழியர்களை, அதாவது உலகளாவிய ஊழியர்களில் சுமார் 2% பேரை பணிநீக்கம் செய்யவுள்ளது.

  • நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஹெச்.சி.எல் டெக் 2024 இல் 8,000 க்கும் மேற்பட்ட வேலைகளைக் குறைத்துள்ளது.

சென்னை, அக். 08

டிசிஎஸ், ஆக்சென்ச்சர், மைக்ரோசாஃப்ட், சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் திறன் மேம்பாடு மற்றும் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்துடன் தங்கள் நிறுவனங்களில் மறுசீரமைப்புகளை மேற்கொண்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக அந்த நிறுவனம் பல ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளன

 டிசிஎஸ் பணிநீக்கங்கள்: இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), 2025-26 நிதியாண்டில் சுமார் 12,000 ஊழியர்களை, அதாவது உலகளாவிய ஊழியர்களில் சுமார் 2% பேரை பணிநீக்கம் செய்யவுள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கான தேவையின் அதிகரிப்பால், நிறுவனம் தற்போது மறுசீரமைப்பு திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

பணிநீக்கங்களைத் தவிர, 2025-26 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டிற்கான டிசிஎஸ்-இன் பணிவிலகல் விகிதம் முந்தைய காலாண்டின் 13.3% ஐ விட, கடந்த பன்னிரண்டு மாதங்களில் 13.8% ஆக சற்று அதிகரித்துள்ளது. கூகுள் பணிநீக்கங்கள்: உலகளாவிய சர்ச் எஞ்சின் நிறுவனமான கூகுள், அதன் செயற்கை நுண்ணறிவு அமைப்பை விரைவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, வடிவமைப்பு தொடர்பான பணிகளில் இருந்த 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பில் தனது பலத்தை அதிகரிக்கவும், மற்ற துறைகளில் செலவுகளைக் குறைக்கவும் முயன்றபோது இந்த பணிநீக்கங்கள் நிகழ்ந்துள்ளன.

 விப்ரோ பணிநீக்கங்கள்: விப்ரோவில் அதிகாரப்பூர்வ பணிநீக்கங்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், செலவுத் திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த 24,516 வேலைகளை நிறுவனம் குறைத்துள்ளது. 2024-25 நிதியாண்டில், விப்ரோவின் பணிவிலகல் விகிதம் தொடர்ந்து 15% ஆகக் குறைந்துள்ளது, அதே நேரத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை 614 அதிகரித்து 2,33,346 ஆக உயர்ந்துள்ளது என்று முந்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஹெச்.சி.எல் டெக் பணிநீக்கங்கள்:  நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஹெச்.சி.எல் டெக் 2024 இல் 8,000 க்கும் மேற்பட்ட வேலைகளைக் குறைத்துள்ளது. இது பெரும்பாலும் அதன் நிறுவனப் பங்குகளை விற்றதாலும், துறையில் நடந்த மறுசீரமைப்புகளாலும் நிகழ்ந்துள்ளது.

2025-26 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஹெச்.சி.எல் டெக்கின் பணிவிலகல் விகிதம் 20 அடிப்படைப் புள்ளிகள் குறைந்து 12.8% ஆக இருந்தது, இது 2024-25 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில் குறைவு. பணிநீக்கங்கள் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.

ஆக்சென்ச்சர் பணிநீக்கங்கள்: உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஆக்சென்ச்சர், அதன் உலகளாவிய பணியாளர்களில் 11,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக கடந்த வாரம் அறிவித்தது. செயற்கை நுண்ணறிவுக்கான தேவையின் அதிகரிப்பால் நிறுவனம் பெரிய மறுசீரமைப்புகளை மேற்கொள்வதால், வரவிருக்கும் மாதங்களில் மேலும் பணிநீக்கங்கள் ஏற்படலாம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

மைக்ரோசாஃப்ட் பணிநீக்கங்கள்: ‘ப்ளூம்பெர்க்’ அறிக்கையின்படி, மைக்ரோசாஃப்ட் அதன் மென்பொருள் பொறியியல் பிரிவில் 40% க்கும் அதிகமாகவோ அல்லது கிட்டத்தட்ட 4,000 வேலைகளையோ குறைத்துள்ளது. இப்படி தொடர்ச்சியாக டிசிஎஸ், இன்டெல், மைக்ரோசாஃப்ட் போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிய அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருகின்றன. இதனால் ஊழியர்கள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

கோவை அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடுவின் பெயர் – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கோவை அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடுவின் பெயர் – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Tamil Nadu Chief Minister M.K. Stalin announces the name of the Avinashi Road flyover in Coimbatore after G.D. Naidu

  • திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.

  • புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன், தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் ஜி.டி.நாயுடுவின் பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்கிறேன்’

சென்னை, அக். 07

கோவையில் அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை அக்டோபர் 9ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். இந்த மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடுவின் பெயரை சூட்டியுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ 2020-ல் அறிவிக்கப்பட்டு, 2021 மே மாதம் வரையில் 5% பணிகள் மட்டுமே நடைபெற்றிருந்த அவிநாசி சாலை மேம்பாலம், நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று, ரூ.1,791 கோடி செலவில் 10.10 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தின் மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளது.

கோவை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை நாளை மறுநாள் (09.10.2025) மக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்க இருக்கிறேன்.
கோவை என்றாலே புதுமை என்பதற்கேற்ப, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த இந்தியாவின் எடிசன் தந்தை பெரியாரின் உற்ற கொள்கைத் தோழர் ஜி.டி.நாயுடுவின் பெயரை இந்த மேம்பாலத்துக்குச் சூட்டி மகிழ்கிறேன்’ எனத்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

தென்னிந்தியாவில் பிற்போக்குச் சக்திகளைப் பிடரிபிடித்துத் தடுத்து நிறுத்தியதைப்போல வடஇந்தியாவில் செய்யத் தவறிவிட்டார்கள் – வைரமுத்து கண்டனம்

தென்னிந்தியாவில் பிற்போக்குச் சக்திகளைப் பிடரிபிடித்துத் தடுத்து நிறுத்தியதைப்போல வடஇந்தியாவில் செய்யத் தவறிவிட்டார்கள் – வைரமுத்து கண்டனம்

North India failed to curb and stop the reactionary forces as in South India – Vairamuthu condemns

  • நீதித்துறையைக் கறைசெய்யும் களங்கமாகும் வரம்புமீறிய வழக்கறிஞரை வன்மையாகக் கண்டிக்கிறேன் பிற்போக்குத்தனம்தான் இந்த அவமானச் செயலுக்கு அடிப்படை

  • நாட்டின் பெரும்பான்மை மக்களைக் காலங்காலமாய்க் கழுத்தில் மிதித்து அழுத்திக் கொண்டிருக்கும் பழைய பொருளாகும் பழையன கழிய வேண்டாமா?

சென்னை, அக். 07

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்றார். மேலும், ‘சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது’ என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.ஆனால் இதுபற்றி கவலைப்படாத தலைமை நீதிபதி, வக்கீல்களை பார்த்து, ”இதையெல்லாம் பார்த்து கவனத்தை சிதற விடாதீர்கள். நாங்கள் கவனத்தை சிதறவிட மாட்டோம். இந்த விஷயங்கள் என்னை பாதிக்காது” என்று கூறினார். பின்னர், விசாரணையை தொடர்ந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

உச்சநீதிமன்றத் தலைமை நீதியரசர் @JusticeBRGavai மீது அநாகரிகத்தை வீசமுயன்றது கண்டு அதிர்ந்துபோனேன் இது முறைசெய்யும் நீதித்துறையைக் கறைசெய்யும் களங்கமாகும் வரம்புமீறிய வழக்கறிஞரை வன்மையாகக் கண்டிக்கிறேன் பிற்போக்குத்தனம்தான் இந்த அவமானச் செயலுக்கு அடிப்படை என்று அறிகிறேன் தென்னிந்தியாவில் பிற்போக்குச் சக்திகளைப் பிடரிபிடித்துத் தடுத்து நிறுத்தியதைப்போல வடஇந்தியாவில் செய்யத் தவறிவிட்டார்கள் அந்தச் சாத்திரத்தின் ஆத்திரம்தான் இது காலில் அணியவேண்டியதைக் கையில் அணிந்தபோதே அவர் அறிவழிந்துபோனார் என்று அறிய முடிகிறது அதை மென்மையாகக் கையாண்ட நீதியரசரின் சான்றாண்மையைப் பெரிதும் போற்றிப் பெருமிதம் கொள்கிறோம் நீதியரசரின் மாண்பு அவரை மன்னித்துவிட்டது வீச முயன்ற பொருளும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டு விட்டது வீசிய பொருளைக்கூட மறந்துவிடலாம் அவர் பேசியபொருளை மறந்துவிட முடியாது அது நாட்டின் பெரும்பான்மை மக்களைக் காலங்காலமாய்க் கழுத்தில் மிதித்து அழுத்திக் கொண்டிருக்கும் பழைய பொருளாகும் பழையன கழிய வேண்டாமா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

சிஐடியு கோரிக்கைகளை அரசு தீர்வு காண வலியுறுத்தி, அக்.9ம் தேதி கோட்டை முற்றுகைப் போராட்டம் – தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு

சிஐடியு கோரிக்கைகளை அரசு தீர்வு காண வலியுறுத்தி, அக்.9ம் தேதி கோட்டை முற்றுகைப் போராட்டம் – தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு

Tamil Nadu Government Transport Employees Federation announces Fort blockade protest on October 9th, urging the government to resolve CITU demands

  • தமிழகம் முழுவதும் 22 மையங்களில் நடைபெறும் இக்காத்திருப்பு போராட்டத்தில் தினமும் சுமார் 2,000 பேர் அளவிற்கு ஓய்வுப் பெற்ற மற்றும் பணிபுரியும் தொழிலாளர்கள் பங்கேற்று வருகின்றனர். தொடர் காத்திருப்பு போராட்டம் இன்றுடன் (அக்.6ம் தேதி) 50ம் நாள் நிறைவு

  • கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறும் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண அரசு எவ்வித முயற்சியும் செய்யவில்லை. அரசின் இந்நடவடிக்கை கண்டனத்திற்கு உரியதாகும்.

சென்னை, அக். 06

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் வியாழக்கிழமை (அக்.9) கோட்டை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இது குறித்து சம்மேளன துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன் மற்றும் பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 17 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும், தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் பணம் உரிய கணக்கில் சேர்க்கப்பட வேண்டும், பணிபுரியும் ஊழியர்களுக்கான ஒப்பந்த நிலுவைத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சிஐடியு சார்பில் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் 22 மையங்களில் நடைபெறும் இக்காத்திருப்பு போராட்டத்தில் தினமும் சுமார் 2,000 பேர் அளவிற்கு ஓய்வுப் பெற்ற மற்றும் பணிபுரியும் தொழிலாளர்கள் பங்கேற்று வருகின்றனர். தொடர் காத்திருப்பு போராட்டம் இன்றுடன் (அக்.6ம் தேதி) 50ம் நாள் நிறைவு பெற்றுள்ளது. அமைதியான முறையில் பொதுமக்கள் சேவையும் பாதிக்கப்படாமல் கடந்த 50 நாட்களாக நடைபெறும் தொடர் போராட்டத்தின் கோரிக்கைகளைப் பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. கடந்த செப்டம்பர் 1ம் தேதி போக்குவரத்து அமைச்சர் அழைத்து பேசினார். சங்கம் முன்வைத்த கோரிக்கைகளை அமைச்சர் ஏற்றுக்கொண்டார். நிதித் துறையுடன் பேசிவிட்டு பதில் அளிப்பதாக கூறிய அமைச்சர் இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.

நடைபெறும் போராட்டம் புதிய கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறவில்லை. தொழிலாளர்களின் பணம் ரூ.15 ஆயிரம் கோடியை கழக நிர்வாகங்கள் செலவு செய்துவிட்டன. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறும் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண அரசு எவ்வித முயற்சியும் செய்யவில்லை. அரசின் இந்நடவடிக்கை கண்டனத்திற்கு உரியதாகும்.
சிஐடியு முன்வைத்துள்ள கோரிக்கைகளில் அரசு நடவடிக்கை எடுத்து உரிய தீர்வு காணும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் தொடரும். கோரிக்கைகளை அரசு தீர்வு காண வலியுறுத்தி, அக்.9ம் தேதி வியாழக்கிழமை அன்று கோட்டை முற்றுகைப் போராட்டம் நடைபெறும். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அனைத்துப் பகுதி மக்களும் பேராதரவு தர வேண்டும் என சம்மேளனத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என்று அறிக்கையில் கூறியுள்ளனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்