Home Blog Page 4

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் : 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை தாக்கல்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் : 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை தாக்கல்

Budget Session of Parliament: Union Budget for 2025-26 to be presented tomorrow 

  • நாடாளுமன்ற பட்ஜெட் முதல்கட்ட கூட்டத்தொடர் பிப்ரவரி 13-ம்தேதி வரை நடைபெறும். 2-ம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் 10-ல் தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதியுடன் நிறைவடையும்

  • மாத சம்பளதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு இந்த பட்ஜெட்டில் ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படலாம்

புதுடெல்லி, ஜன. 31

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் : 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை தாக்கல்:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதல்கட்ட கூட்டத்தொடர் பிப்ரவரி 13-ம்தேதி வரை நடைபெறும். 2-ம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் 10-ல் தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதியுடன் நிறைவடையும். இன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.

பட்ஜெட்டின் முன்னோட்டமாக கருதப்படும் பொருளாதார ஆய்வறிக்கையும் இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்.1) தாக்கல் செய்ய உள்ளார். இதன்மூலம், தொடர்ச்சியாக 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதி அமைச்சர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் பிப்ரவரி 3, 4, 5-ம் தேதி களில் நடைபெறும். அனைத்து கட்சி கூட்டம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில், மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ, ஜே.பி.நட்டா, அர்ஜுன் ராம் மேக்வால், எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சிகள் தரப்பில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சுரேஷ், கவுரவ் கோகோய், திரிணமூல் காங்கிரஸின் சுதிப் பந்தோபாத்யாய் மற்றும் டெரிக் ஓ பிரயன், திமுக சார்பில் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு இந்த கூட்டத்தில் அரசுத் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரில், நிதி மசோதா2025, வக்பு மசோதா, வங்கி ஒழுங்கு முறை சட்ட திருத்த மசோதா, இந்தியன் ரயில்வே மற்றும் இந்தியன் ரயில்வே வாரிய சட்ட ஒருங்கிணைப்பு மசோதா உள்ளிட்ட 16 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.

Budget Session of Parliament: Union Budget for 2025-26 to be presented tomorrow 
Budget Session of Parliament: Union Budget for 2025-26 to be presented tomorrow

விமான போக்குவரத்து துறை தொடர்பான நிதி நலன்களை பாதுகாக்கும் மசோதாக்கள், குடியேற்றம், வெளிநாட்டினர் நுழைவு தொடர்பான தற்போதைய விதிமுறைகளை மாற்றும் மசோதாக்கள், கோவா மாநில சட்டப்பேரவை தொகுதிகளில் பட்டியல் பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைப்பு செய்வதற்கான மசோதா ஆகியவையும் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தற்போதுள்ள குழப்பமான வரி முறைகளை எளிமைப்படுத்தும் விதமாக வருமான வரி தொடர்பான புதிய நேரடிவரி சட்ட (Direct Tax Code) மசோதாவும் அறிமுகமாகும் என தெரிகிறது.

மாத சம்பளதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு இந்த பட்ஜெட்டில் ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படலாம். புதிதாக 2 வரிப் பிரிவுகள் சேர்க்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட்டில் பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிடும் வகையில் மூலதன செலவினத்துக்கான ஒதுக்கீட்டை 20 சதவீதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் மக்களின் செலவிடும் வருவாய் அதிகரிக்கும் என்பதுடன், அது பொருளாதார சுழற்சிக்கு வித்திடும் என்பது அரசின் மதிப்பீடாக உள்ளது. 2026 மார்ச் இறுதிக்குள் நிதி பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக கட்டுக்குள் வைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்படலாம் என்று யர்னஸ்ட் யங் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் கல்வி கடன் திட்டம் அறிமுகம் – அரசு அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் கல்வி கடன் திட்டம் அறிமுகம் – அரசு அறிவிப்பு

Tamil Nadu Minorities Economic Development Corporation Education Loan Scheme Launched – Government Announcement

  • சிறுபான்மையின மாணவ / மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி / வேலை வாய்ப்பு / பட்டப் படிப்பு பயில்பவர்களுக்கு கல்விக் கடனுதவி

  • தொழிற்கல்வி/ வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகளுக்கு ஆண்டுக்கு 4 லட்சம் விதம் அதிகபட்சம் 20 லட்சம் ரூபாய் வரை கடன்

சென்னை, ஜன. 30

தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத் துறை சார்பில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயில்பவர்களுக்கு கல்வி கடன் உதவி வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்(TAMCO) கல்வி கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்லது.

சிறுபான்மையின மாணவ / மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி / வேலை வாய்ப்பு / பட்டப் படிப்பு பயில்பவர்களுக்கு கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது.

சேர்க்கைக் கட்டணம் / பயிற்றுவிப்புக் கட்டணம், புத்தகம், எழுதுபொருள் மற்றும் படிப்புக்குத் தேவையான உபகரணங்கள், தேர்வுக் கட்டணம், விடுதி மற்றும் உணவுக் கட்டணம் (விடுதியில் தங்கி பயில்பவர்களுக்கு மட்டும்) ஆகியவை விண்ணப்பிக்க தகுதியான கட்டணங்கள்.

Tamil Nadu Legislative Assembly: Central Government's Citizenship Amendment Act was never allowed in Tamil Nadu - Governor's speech

சாதிச் சான்றிதழ் /பள்ளி மாற்றுச் சான்றிதழ் / சிறுபான்மையினர் மதம் குறித்து வழிப்பாட்டு ஸ்தலத்தால் அளிக்கப்பட்ட சான்று இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், வருமானச் சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்றிதழ் நகல் , ஆதார் சான்றிதழ் நகல், உண்மைச் சான்றிதழ் (Bonafide Cerificate) நகல், கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது/ செலான் (Original), மதிப்பெண் சான்றிதழ் நகல்.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரகம் / மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் / நகர கூட்டுறவு வங்கி / தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் வங்கி கோரும் இதர ஆவணங்கள் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள் : வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

அரசின் இந்த கல்விக் கடனை சிறுபான்மை மாணவ, மாணவிகள் பெறுவதற்கு தமிழக அரசின் சார்பில் இரண்டு திட்டம்   அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முதல் திட்டத்தின்படி, பெற்றோர் பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 3 லட்சம் வரை இருந்தால், தொழிற்கல்வி/ வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகளுக்கு ஆண்டுக்கு 4 லட்சம் விதம் அதிகபட்சம் 20 லட்சம் ரூபாய் வரை கடன் அளிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் தொழிற்கல்வி வேலைவாய்ப்பு பட்டப்படிப்புகள் படிப்பவர்களுக்கு ஆண்டிற்கு ஆறு லட்சம் வீதம் அதிகபட்சம் 30 லட்சம் வரை ஆண்டிற்கு மூன்று சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.

இரண்டாவது திட்டத்தின் கீழ் பெற்றோர் பாதுகாவலர் ஆண்டு வருமானம் 8 லட்சம் வரைக்கும் மிகாமல் இருந்தால், தொழிற் கல்வி வேலைவாய்ப்பு/ பட்டப் படிப்புகள் ( அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ) ஆண்டுக்கு நான்கு லட்சம் விதம் அதிக பட்சம் 20 லட்சம் வரை வழங்கப்படும். வெளிநாடுகளில் தொழிற்கல்வி/வேலைவாய்ப்பு படிப்புகள் படிப்பவர்களுக்கு ( அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ) ஆண்டிற்கு ஆறு லட்சம் வீதம் அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். மாணவர்களுக்கு ஆண்டிற்கு 8 சதவீதமும் மாணவிகளுக்கு ஆண்டிற்கு 5 சதவீதமும் வட்டி விகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தென்தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Atmospheric low pressure circulation: Chance of heavy rain in South Tamil Nadu – Chennai Meteorological Department announcement

  • வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்

  • பிப்.3 முதல் பிப்.5ம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்

சென்னை, ஜன.30

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, வெள்ளிக்கிழமை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன்காரணமாக, இன்று (ஜன.30) தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

rainfall
rainfall

ஜன.31ம் தேதி, தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள் : திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் பள்ளி வளாகத்தில் சாதி அலுவலகம்: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பிப்.1ம் தேதி, தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பிப்.2ம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பிப்.3 முதல் பிப்.5ம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும், என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நாளை (ஜன.31) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும், என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் பள்ளி வளாகத்தில் சாதி அலுவலகம்: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் பள்ளி வளாகத்தில் சாதி அலுவலகம்: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Caste office in Trichy K.A.P. Viswanathan school premises: High Court orders to respond

  • திருச்சி கி.ஆ.பெ விஸ்வநாதன் உயர்நிலைப்பள்ளி, 40 ஆண்டுகளுக்கு மேலாக அரசு உதவி பெறும் பள்ளியாக இயங்கி வருகிறது
  • சாதிக் கூட்டமைப்பு தலைவர்கள் தொடர்பான போஸ்டர்கள், பேனர்கள் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளதால், இது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சாதிய மனோபாவத்தை உருவாக்கி வருகிறது

மதுரை, ஜன. 30
திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் பள்ளி வளாகத்தில் சாதி அலுவலகம்: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு : திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் பள்ளிவளாகத்தில் சாதி கூட்டமைப்பு அலுவலகம் செயல்படுவது தொடர்பான மனுவுக்கு பள்ளி நிர்வாகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி அரியாவூரைச் சேர்ந்த கணேசன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்துள்ள மனு விவரம் :

kap visvanathan school trichy
kap visvanathan school trichy

திருச்சி தில்லை நகரில் கி.ஆ.பெ விஸ்வநாதன் உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கி வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள் இங்கு கல்வி பயின்றனர். 40 ஆண்டுகளுக்கு மேலாக அரசு உதவி பெறும் பள்ளியாக இயங்கி வருகிறது.

இதையும் படியுங்கள் : ரூ.16300 கோடியில் தேசிய முக்கிய கனிம திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

தற்போதைய பள்ளி நிர்வாகம் பள்ளி வளாகத்தில் சாதி கூட்டமைப்பு அலுவலகத்தை தொடங்கி நடத்தி வருகிறது. குறிப்பிட்ட சமூகத்தின் கொடி பள்ளி வளாகத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சமூகத்திற்கான திருமண தகவல் மையமும் பள்ளி வளாகத்தினுள் இயங்கி வருகிறது.

சாதிக் கூட்டமைப்பு தலைவர்கள் தொடர்பான போஸ்டர்கள், பேனர்கள் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சாதிய மனோபாவத்தை உருவாக்கி வருகிறது. பள்ளியில் சாதி மனோபாவத்தை உருவாக்கும் வகையில் செயல்படும் திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் உயர்நிலைப் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ. டி.மரிய கிளாட் அமர்வு, “மனு தொடர்பாக திருச்சி கி.ஆ.ப.விஸ்வநாதன் உயர்நிலைப்பள்ளி நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

ரூ.16300 கோடியில் தேசிய முக்கிய கனிம திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

ரூ.16300 கோடியில் தேசிய முக்கிய கனிம திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

Central government approves Rs 16,300 crore National Key Minerals Project

  • தேசிய முக்கிய கனிம திட்டம் உள்நாட்டிலும், கடற்பகுதியிலும் உள்ள முக்கிய கனிமங்களை கண்டறிவதை ஊக்குவிக்கும்

  • கனிம ஆய்வு, சுரங்கம், மூலப்பொருளை மேம்படுத்தும் செயலாக்கம் என மதிப்பு சங்கிலியின் அனைத்து நிலைகளையும் இந்த என்சிஎம்எம் திட்டம் உள்ளடக்கும்

புதுடெல்லி, ஜன.30

ரூ.16300 கோடியில் தேசிய முக்கிய கனிம திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்: ரூ.16,300 கோடி மதிப்பிலான தேசிய முக்கிய கனிம திட்டத்துக்கு (என்சிஎம்எம்) மத்திய அரசு, நேற்று ஒப்புதல் அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், என்சிஎம்எம் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

என்சிஎம்எம் திட்டம் ரூ.16,300 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் உள்நாட்டிலும், கடற்பகுதியிலும் உள்ள முக்கிய கனிமங்களை கண்டறிவதை ஊக்குவிக்கும். மேலும், முக்கிய கனிமங்களின் தேவைக்காக வெளிநாடுகளின் இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்கவும், சுயசார்பு உற்பத்தியை அதிகரிக்கவும் இந்த திட்டம் பெரிதும் உதவும்.

இதையும் படியுங்கள் : தியாகிகள் தினம் : மகாத்மா காந்தி படத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

National Key Minerals Project
National Key Minerals Project

கனிம ஆய்வு, சுரங்கம், மூலப்பொருளை மேம்படுத்தும் செயலாக்கம் என மதிப்பு சங்கிலியின் அனைத்து நிலைகளையும் இந்த என்சிஎம்எம் திட்டம் உள்ளடக்கும். முக்கிய கனிம சுரங்கத் திட்டங்களுக்கு விரைவான ஒழுங்குமுறை ஒப்புதல் செயல்முறையை உருவாக்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, கனிம ஆய்வுகளுக்கான நிதி ஊக்குவிப்பை வழங்குவதுடன், கடினமான பாறை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கனிம வளங்களை மீட்டெடுப்பதை இந்த திட்டம் உறுதிசெய்யும்.

இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

தியாகிகள் தினம் : மகாத்மா காந்தி படத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

 

Martyrs’ Day : Chief Minister Stalin pays tribute to Gandhi

  • எழும்பூர் அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச்செயலக அதிகாரிகள், ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்பு

சென்னை, ஜன. 30

தியாகிகள் தினம் : மகாத்மா காந்தி படத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை: தேசத்தந்தை மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜன.30-ந்தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக பாடுபட்டவர்களை போற்றும் வகையில் தியாகிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

Chief Minister Stalin pays tribute to Gandhi
Chief Minister Stalin pays tribute to Gandhi

இந்நிலையில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையும் படியுங்கள் : அமெரிக்காவில் பயணிகள் ஜெட் விமானம் – ராணுவ ஹெலிஹாப்டர் மோதல் : 67 பேர் பலியா ?

இதைத்தொடர்ந்து தலைமைச்செயலகத்தில் ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்கமாட்டேன்.அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமை ஆகும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச்செயலக அதிகாரிகள், ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

அமெரிக்காவில் பயணிகள் ஜெட் விமானம் – ராணுவ ஹெலிஹாப்டர் மோதல் : 67 பேர் பலியா ?

Passenger jet and military helicopter collide in the United States: 67 people killed?

  • விமான நிலையத்தின் வடக்கில் உள்ள ஒரு பகுதியில் இருந்து ஜார்ஜ் வாஷிங்டன் பார்க்-வே வரையில் தேடுதல் நடவடிக்கை

  • விமானம், ஹெலிகாப்டர் மோதிக்கொண்ட காட்சி விமான நிலையத்துக்கு அருகில் உள்ள கென்னடி மையத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதில் மோதல் சம்பவம் வானில் ஒரு மிகப்பெரிய தீப்பந்து உருவானது போல காட்சிகள் பதிவாகி உள்ளதாக தகவல்.

வாஷிங்டன், ஜன.30

அமெரிக்காவில் வாஷிங்டன் அருகே பயணிகள் விமானமும் ராணுவ ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில், அவற்றில் பயணம் செய்த 67 பேரை தேடி வருகின்றனர்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு அருகிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்கும் போது பயணிகள் விமானம் ஒன்று, ராணுவ ஹெலிகாப்டருடன் மோதியது. இந்த விமானத்தில் 60 பயணிகள் மற்றும் 4 விமான பணியாளர்கள் பயணித்துள்ளனர். இந்நிலையில் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள போடோமாக் ஆற்றில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குதல் மற்றும் புறப்பாடு சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்க நேரப்படி புதன்கிழமை (ஜன.29) இரவு 9 மணி அளவில் நடந்துள்ளது. இது இந்திய நேரப்படி வியாழக்கிழமை (ஜன.30) காலை 7.30 மணி ஆகும்.

விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு படகுகள் மற்றும் ராணுவம், காவல் துறை, தீயணைப்பு துறை உட்பட பல்வேறு முகமைகளின் ஹெலிகாப்டர்கள் உயிர் பிழைத்தவர்களை தேடி வருகிறது. விமான நிலையத்துக்கு வடக்கு பகுதியில் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலையத்தின் வடக்கில் உள்ள ஒரு பகுதியில் இருந்து ஜார்ஜ் வாஷிங்டன் பார்க்-வே வரையில் தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள் : ‘ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை, நடத்தை விதிகளை உருவாக்க வேண்டும்’ –  திமுக எம்.பி.க்கள் குழு கூட்டத்தில் தீர்மானம்

இந்த விபத்து குறித்து அமெரிக்க ஃபெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் “கன்சாஸ் மாகாணத்தில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட விமானம், ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலைய ஓடுபாதையை நெருங்கும் போது ராணுவத்தின் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் மீது நடுவானில் மோதியது.” எனத் தெரிவித்துள்ளது.

Passenger jet and military helicopter collide in the United States: 67 people killed?
Passenger jet and military helicopter collide in the United States: 67 people killed?

விபத்தில் சிக்கிய விமானம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமானது. இதை அந்த நிறுவனம் சமூக வலைதளத்தில் உறுதி செய்துள்ளது. தங்களுக்கு கூடுதல் தகவல்கள் கிடைத்ததும் விவரங்களை பகிர்வதாக கூறியுள்ளது.

விமானம், ஹெலிகாப்டர் மோதிக்கொண்ட காட்சி விமான நிலையத்துக்கு அருகில் உள்ள கென்னடி மையத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதில் மோதல் சம்பவம் வானில் ஒரு மிகப்பெரிய தீப்பந்து உருவானது போல காட்சிகள் பதிவாகி உள்ளதாக தகவல்.

இந்த விபத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 5342 என்ற பயணிகள் ஜெட் விமானம் சிக்கியது. விமான நிலையத்துக்கு அருகே விபத்தில் சிக்கிய விமானம் சுமார் 400 அடி உயரத்திலும் மணிக்கு 140 மைல் வேகத்திலும் வந்து கொண்டிருந்தது. கடைசியாக அந்த விமானத்தில் இருந்து கிடைத்த தரவுகள் இது.

விபத்தில் சிக்கிய இந்த விமானம் கனடாவில் கடந்த 2004-ல் தயாரிக்கப்பட்டது. இரட்டை எஞ்சின் கொண்ட இந்த விமானத்தில் 70 பயணிகள் பயணிக்க முடியும். இந்த விபத்து குறித்து அதிபர் ட்ரம்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே ஜனவரி மாதத்தில் கடந்த 1982-ம் ஆண்டு ஏர் புளோரிடா விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் போடோமாக் ஆற்றில் விபத்தில் சிக்கியது. அதில் 78 பேர் உயிரிழந்தனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

‘ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை, நடத்தை விதிகளை உருவாக்க வேண்டும்’ –  திமுக எம்.பி.க்கள் குழு கூட்டத்தில் தீர்மானம்

ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை, நடத்தை விதிகளை உருவாக்க வேண்டும்’ –  திமுக எம்.பி.க்கள் குழு கூட்டத்தில் தீர்மானம்

‘Until the Governor is removed, a code of conduct should be formulated’ – Resolution passed at DMK MPs’ group meeting

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன

  • ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு புதிய ரயில் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை, ஜன. 29

ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை, நடத்தை விதிகளை உருவாக்க வேண்டும்’ –  திமுக எம்.பி.க்கள் குழு கூட்டத்தில் தீர்மானம்: திமுக எம்.பிக்கள் ஆலோசனைம் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. மாநில அரசின் கோப்புகள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திட கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2025-26 நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை எம்.பிக்களுக்கு வழங்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். தமிழக நிதி விவகாரம் பற்றி விவாதங்களை எழுப்புவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு, 3வது முறையாக ஆட்சிக்கு வந்தபிறகு தற்போது, முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது.

இதையும் படியுங்கள் : வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது இஸ்ரோவின் 100-வது ராக்கெட் 

பிப்ரவரி 1 ஆம் தேதி 2025-26 மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக, ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரையும், 2 ஆம் கட்டமாக மார்ச் 2வது வாரம் முதல், ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை, நடத்தை விதிகளை உருவாக்க வேண்டும் என திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், மாநில அரசின் கோப்புகள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திட கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், யுஜிசியின் வரைவு விதிகளை திரும்பப் பெற நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும். இரும்பு 5,870 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலத்தில் அறிமுகமாகி உள்ளது. அதன் ஆய்வுகளை ஒன்றிய அரசும், பிரதமரும் முன்னெடுக்க வேண்டும். ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு புதிய ரயில் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது இஸ்ரோவின் 100-வது ராக்கெட் 

வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது இஸ்ரோவின் 100-வது ராக்கெட் 

ISRO’s 100th rocket successfully launched

  • செயற்கைக் கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை இது கண்காணிக்கும். மேலும், பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களைத் தெரிவிக்கும் – இஸ்ரோ விஞ்ஞானிகள்

  • இந்தியாவுக்கு பிரத்யேக வழிகாட்டியாக நாவிக் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த நாவிக் மூலம்தான் நமது நாட்டின் கண்காணிப்பு பணிகள் இப்போது சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன.

ஸ்ரீஹரிகோட்டா, ஜன.29

வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது இஸ்ரோவின் 100-வது ராக்கெட் : என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது இஸ்ரோவின் 100-வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி எஃப்-15. இன்று காலை 6.23 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட 19-வது நிமிடத்தில் செயற்கைக்கோளை புவியின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

அமெரிக்காவுக்கு ‘ஜிபிஎஸ்’ போல, நம்நாட்டில் தரை, கடல் மற்றும் வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு’ (ஐஆர்என்எஸ்எஸ்) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது.

இதற்காக ஐஆர்என்எஸ்எஸ் வரிசையில் 2013 முதல் 2018-ம் ஆண்டு வரையான காலகட்டங்களில் 8 வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இதன்மூலம் இந்தியாவுக்கு பிரத்யேக வழிகாட்டியாக நாவிக் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த நாவிக் மூலம்தான் நமது நாட்டின் கண்காணிப்பு பணிகள் இப்போது சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன.

ISRO's 100th rocket successfully launched
ISRO’s 100th rocket successfully launched

இதையடுத்து ஐஆர்என்எஸ்எஸ் திட்டத்தில் தற்போதைய காலத்துக்கேற்ப மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டது. அந்தவகையில் ஐஆர்என்எஸ்எஸ் 1ஜி-க்கு மாற்றாக என்விஎஸ்-01 செயற்கைக்கோள் 2023 மே 29-ல் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. தொடர்ந்து தற்போது ஐஆர்என்எஸ்எஸ் 1இ செயற்கைக்கோளுக்கு மாற்றாக அதிநவீன என்விஎஸ்-02 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இதையும் படியுங்கள் : நம்பர் ஒன் முதல்வர் என்பதைவிட நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே இலக்கு – முதல்வர் மு.க ஸ்டாலின்

இந்த செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எஃப்-15 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகேட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை (ஜன.29) 6.23 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

என்விஎஸ் செயற்கைக்கோள் 2,250 கிலோ எடை உடையது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இதில் எல் 1, எல் 5, மற்றும் எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டர்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அணு கடிகாரம் உட்பட்ட பல்வேறு மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இடம் பெற்றுள்ளன. செயற்கைக் கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை இது கண்காணிக்கும். மேலும், பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களைத் தெரிவிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

நம்பர் ஒன் முதல்வர் என்பதைவிட நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே இலக்கு – முதல்வர் மு.க ஸ்டாலின்

நம்பர் ஒன் முதல்வர் என்பதைவிட நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே இலக்கு – முதல்வர் மு.க ஸ்டாலின்

The goal is number one Tamil Nadu rather than the number one chief minister – Chief Minister M. K. Stalin

  • 2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றம்

  • வன்னியர் பொது சொத்து வாரியம் அமைத்தது திமுக ஆட்சியில்தான். தற்போது சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் 

விழுப்புரம், ஜன. 28

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி. திராவிடம்தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தையும் பெற்று கொடுத்தது. இன்றைய நவீன தமிழ்நாடு திராவிடத்தால் உருவானதுதான், என்று விழுப்புரம் அருகே வழுதரெட்டியில் நடந்த 21 சமூகநீதிப் போராளிகளுக்கான மணிமண்டபம், ஏ.கோவிந்தசாமியின் நினைவரங்க திறப்பு விழாவில் பேசிய முதல் அமைச்சர் கூறியுள்ளார்.

இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூக நீதிப்போராளிகளை போற்றும் வகையில், விழுப்புரம் அருகே வழுதரெட்டியில் ரூ.5.70 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தையும், ரூ.4 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கத்தை இன்று (ஜன.28) முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: என் வாழ்நாள் முழுக்க எண்ணி பெருமைப்படும் வகையில் ஏ.கோவிந்தசாமியின் நினைவு மண்டபம் திறந்து வைக்கும் நிகழ்வு அமைந்துள்ளது. 2019 விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. மாற்றார்கூட குறை சொல்ல முடியாதவர் ஏ.கோவிந்தசாமி என்று பெரியார் தெரிவித்தார்.

21 சமூகநீதி போராளிகள் 1987-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அதன்பின் ஆட்சிக்கு வந்த திமுக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை உருவாக்கி 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மேலும் உயிர் தியாகம் செய்த குடும்பத்தாருக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. ராமசாமி படையாச்சிக்கு சென்னையில் சிலை அமைக்கப்பட்டது.

வன்னியர் பொது சொத்து வாரியம் அமைத்தது திமுக ஆட்சியில்தான். தற்போது சமூகநீதி போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. திராவிட இயக்கம் தோன்றியதே சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகத்தான். நேற்று நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மாவட்டத்துக்கான தேவைகளை கண்டறியப்பட்டது.

இதையும் படியுங்கள் : வக்பு திருத்த சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் : எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் அனைத்தும் நிராகரிப்பு

அதன்படி நந்தன்கால்வாய் ரூ.304 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு, ரூ.84 கோடியில் தளவானூர் தடுப்பணை, காணையில் ரூ.35 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம், திருவாமாத்தூரில் ரூ.4 கோடி மதிப்பில் திருமண மண்டபம், விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகம் ரூ.2 கோடி மதிப்பில் டவுன் ஹால் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்களை அறிவிக்கிறேன். என்னை பொறுத்தவரை நம்பர் ஒன் முதல்வர் என்பதைவிட நம்பர் ஒன் தமிழ்நாடு என்பதே இலக்கு.

Chief Minister M. K. Stalin inaugurated Dravidian movement pioneer A. Govindasamy memorial hall at Villupuram.
Chief Minister M. K. Stalin inaugurated Dravidian movement pioneer A. Govindasamy memorial hall at Villupuram.

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சி. திராவிடம்தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று கொடுத்தது. இன்றைய நவீன தமிழ்நாடு திராவிடத்தால் உருவானதுதான். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.