Home Blog Page 6

தீபா தாக்கல் செய்த வருமான வரி எதிரான வழக்கு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் 

தீபா தாக்கல் செய்த வருமான வரி எதிரான வழக்கு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம்

Income tax case filed by Deepa dismissed by Madras High Court


வருமான வரி வழக்கில், 36 கோடி ரூபாயை செலுத்தக் கூறி, அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ்

36 கோடி ரூபாய் செலுத்தக் கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்த இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல

சென்னை, செப். 19

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில், 36 கோடி ரூபாய் செலுத்தக் கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து, அவரது சட்டப்பூர்வ வாரிசான தீபா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில், 36 கோடி ரூபாயை செலுத்தக் கூறி, அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து, தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் வருமான வரித் தொகை 36 கோடி ரூபாயில் இருந்து 13 கோடி ரூபாயாக குறைத்து, திருத்தியமைக்கப்பட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 36 கோடி ரூபாய் செலுத்தக் கூறி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்த இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறி, தீபாவின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், தீபா சட்டப்படி மாற்று நிவாரணம் கோரலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இனிமேல் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இடம்பெறும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இனிமேல் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இடம்பெறும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Electronic voting machines will now feature colour photographs of candidates – Election Commission announces

  • வாக்களித்த சின்னம் அச்சிடப்பட்ட சீட்டை பார்க்க முடியும். ஆனால், அந்த சீட்டை வாக்காளர் எடுத்துச் செல்ல முடியாது.

  • நோட்டா மற்றும் வேட்பாளர்களின் வரிசை எண் மற்றும் வேட்பாளரின் பெயர் ஆகியவை ஒரே வகை எழுத்தில் (ஃபான்ட்) எளிதாக படிக்கும் வகையில் பெரிய எழுத்துகளில் (30) இடம்பெற வேண்டும்

புதுடெல்லி, செப். 18

வாக்காளர்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இனிமேல் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இடம்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாக இம்முறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப தேர்தல் நடைமுறைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வாக்குச் சீட்டில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (இவிஏம்) பயன்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம் வாக்குப்பதிவு நேரம், வாக்கு எண்ணும் நேரம் கணிசமாக குறைந்தது. எனினும், எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர நடைமுறை மீது பல்வேறு குறைகளைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் ஒரே சின்னத்தில் வாக்குகள் பதிவாகும் வகையில் இவிஎம் இயந்திரத்தில் மாற்றம் செய்ய முடியும் என்று குறைகூறினர். இதை தேர்தல் ஆணையம் மறுத்தது.
அதன் பிறகு, யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ளும் விவிபாட் கருவி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டது. அதில் வாக்களித்த சின்னம் அச்சிடப்பட்ட சீட்டை பார்க்க முடியும். ஆனால், அந்த சீட்டை வாக்காளர் எடுத்துச் செல்ல முடியாது.

இந்த சூழ்நிலையில், பிஹாரில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

குறிப்பாக, பாஜகவும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எஸ்ஐஆர் பணியின்போது 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். பக்கத்து நாட்டில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள், வெளியூரில் சென்று நிரந்தரமாக தங்கியவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் இதை ஏற்கவில்லை.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த சூழ்நிலையில், இவிஎம் மீது ஒட்டப்படும் வேட்பாளர் விவரம் பற்றிய திருத்தப்பட்ட விதிமுறைகளை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

அதில் கூறியிருப்பதாவது: தேர்தல் செயல்முறைகளை எளிதாக்கவும், மேம்படுத்தவும், வாக்காளர்களுக்கான வசதிகளை அதிகரிக்கவும் கடந்த 6 மாதங்களில் தேர்தல் ஆணையம் 28 முயற்சிகளை மேற்கொண்டது. அந்த வரிசையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் (இவிஎம்) மீது ஒட்டப்படும் வாக்குச் சீட்டுகளை வடிவமைத்து அச்சிடுவது தொடர்பான தேர்தல் நடத்தை விதிகள், 1961-ன் 49-பி பிரிவின் கீழ் இப்போதுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் திருத்தி உள்ளது.

அதன்படி, இவிஎம் மீது ஒட்டப்படும் தாள் இளஞ்சிவப்பு வண்ணத்தில், 70 ஜிஎஸ்எம் தடிமன் கொண்டதாக இருக்க வேண்டும். அதில் இடம்பெறும் வேட்பாளர்களின் புகைப்படம் வாக்காளர்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில் வண்ணத்தில் இருக்க வேண்டும். புகைப்படத்தின் மொத்த அளவில் 4-ல் 3 பங்கு அளவுக்கு முகம் தெரிய வேண்டும்.

இதேபோல, நோட்டா மற்றும் வேட்பாளர்களின் வரிசை எண் மற்றும் வேட்பாளரின் பெயர் ஆகியவை ஒரே வகை எழுத்தில் (ஃபான்ட்) எளிதாக படிக்கும் வகையில் பெரிய எழுத்துகளில் (30) இடம்பெற வேண்டும். இந்த புதிய நடைமுறை வரும் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் அமல்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

என்​ எஸ் ​எஸ் சிறப்பு முகாம் விதிமுறைகள் – பள்​ளிக்​கல்​வித் துறை வெளியீடு

மாணவர்​களுக்கு என்​எஸ்​எஸ் சிறப்பு முகாம் விதிமுறைகள் – பள்​ளிக்​கல்​வித் துறை வெளியீடு

NSS Special Camp Regulations -School Education Department Release

  • முகாமில் பங்​கேற்​கும் மாணவர்​களின் பெற்​றோரிடம் இருந்து மறுப்​பின்மை சான்​றிதழ் பெற்ற பின்​னரே சிறப்பு முகாமில் பங்​கேற்​கச் செய்ய வேண்​டும்.

  • மதம் சார்ந்த பரப்​புரைகளை மேற்​கொள்ள எவருக்​கும் அனு​மதி அளிக்​கக் கூடாது. குறைந்​தது 1,000 மரக்​கன்​றுகள் மற்​றும் விதைகள் நட வேண்​டும்.

சென்னை, செப். 17​

அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு என்​எஸ்​எஸ் சிறப்பு முகாம் நடத்​து​வதற்​கான வழி​காட்​டு​தல் விதிமுறைகளை பள்​ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்​டுள்​ளது.

அரசுப் பள்​ளி​களில் பயிலும் மாணவர்​களுக்கு தன்​னார்​வலர் பணி​களை​யும், தனித்​திறன்​களை வளர்ப்​பதுடன், சமூக வளர்ச்​சிக்​கான பங்​களிப்​புகளை அளிப்​ப​தற்​கும் நாட்டு நலப்​பணித் திட்​டம் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. அந்​தவகை​யில் 2025-26-ம் கல்​வி​யாண்​டுக்​கான என்​எஸ்​எஸ் சிறப்பு முகாம் நடை​பெற உள்​ளது. அதற்​கான வழி​காட்டு நெறி​முறை​கள் வெளி​யிடப்​பட்​டு உள்​ளன.

அதன்​படி என்​எஸ்​எஸ் சிறப்பு முகாம் 7 நாட்​களுக்கு நடத்​தப்பட வேண்​டும். இந்த முகாமில் பங்​கேற்​கும் மாணவர்​களின் பெற்​றோரிடம் இருந்து மறுப்​பின்மை சான்​றிதழ் பெற்ற பின்​னரே சிறப்பு முகாமில் பங்​கேற்​கச் செய்ய வேண்​டும். முகாம் அழைப்​பிதழில் இடம்​பெறும் பெயர்​கள் மற்​றும் விவரங்​கள் தமிழில்​தான் இருக்க வேண்​டும். மாணவர்​கள் தங்​கும் இடங்​களில் போதிய வசதி​கள் இருப்​ப​தோடு, முறை​யான அனு​ம​தி​யின்றி மாணவர்​களை முகாமில் இருந்து வெளியே செல்ல அனு​ம​திக்​கக் கூடாது.

இதுத​விர மதம் சார்ந்த பரப்​புரைகளை மேற்​கொள்ள எவருக்​கும் அனு​மதி அளிக்​கக் கூடாது. குறைந்​தது 1,000 மரக்​கன்​றுகள் மற்​றும் விதைகள் நட வேண்​டும். உயர்​கல்வி வழி​காட்​டும் நிகழ்​வு, மண் பாது​காப்​பு, மழை நீர் சேகரிப்​பு, போதைப்​பொருள் தடுப்பு சார்ந்த விழிப்​புணர்வு உள்​ளிட்ட செயல்​பாடு​களை சிறப்பு முகாமில் மேற்​கொள்ள வேண்​டும்

என்பன உட்பட பல்​வேறு அம்​சங்​கள் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட அறிக்கையில் இடம் பெற்​றுள்​ளன.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

ஜிஎஸ்டி வரிவிகித மாற்றம் : நான்கு வரி அடுக்குகள் இரு அடுக்குகளாக குறைப்பு

ஜிஎஸ்டி வரிவிகித மாற்றம் : நான்கு வரி அடுக்குகள் இரு அடுக்குகளாக குறைப்பு

GST Tax Rate Change: Four tax brackets reduced to two brackets

  • பல்வேறு பொருட்களின் விலை வரும் 22-ம் தேதி முதல் குறையும்.

  • சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், ஆடம்பர பொருட்களுக்கு 40% சிறப்பு வரி

புதுடெல்லி, செப். 04

ஜிஎஸ்டி வரிவிகித மாற்றத்தின்படி, தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு வரி அடுக்குகள் 18%, 5% என இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. செப்.22 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றத்தால் விலை குறையும், விலை உயரும் பொருட்களின் பட்டியலைப் பார்ப்போம்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் புதன்கிழமை டெல்லியில் தொடங்கியது. இதில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், வரும் 22-ம் தேதி முதல் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளின் கீழ் மட்டுமே ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஏற்கெனவே இருந்த 5%, 12%, 18% மற்றும் 28% ஜிஎஸ்டி அடுக்குகளில் 12% மற்றும் 28% நீக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், ஆடம்பர பொருட்களுக்கு 40% சிறப்பு வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜிஎஸ்டி வரி மறுசீரமைப்பு நடவடிக்கை மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதான நிதி சுமையை பெரிய அளவில் குறைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5% என மாற்றப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பொருட்களின் விலை வரும் 22-ம் தேதி முதல் குறையும். இது மக்களுக்கு நேரடியாக பலன் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், ஆடம்பரப் பொருட்களுக்கு கூடுதல் வரி வசூலிக்கப்படும் என ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு அறிவிப்பால் விலை குறையும் மற்றும் உயரும் பொருட்கள் பட்டியல் இதோ…

விலை குறையும் பொருட்கள்:

>*பால் பொருட்கள்: யு.எச்.டி பாலுக்கு இப்போது வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கன்டன்ஸ்டு மில்க், வெண்ணெய், நெய், பனீர், பாலாடைக்கட்டி உள்ளிட்ட பொருட்கள் 12%-லிருந்து 5%-ஆக குறைந்துள்ளது.

> *மால்ட், ஸ்டார்ச், பாஸ்தா, கார்ன்ஃப்ளேக்ஸ், பிஸ்கட், சாக்லெட்டுகள் மற்றும் கோகோ பொருட்கள் 12% அல்லது 18%-லிருந்து 5%-ஆக குறைக்கப்படும்.

> பேரீச்சம்பழம் மாதிரியான உலர்ந்த பழங்கள், பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 12%-லிருந்து 5%-ஆக குறையும்.

> சர்க்கரை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5%-ஆக மாற்றப்பட்டுள்ளது.

> தாவர எண்ணெய், விலங்கு கொழுப்பு, இறைச்சி மற்றும் மீன் தயாரிப்பு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 5%-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

> மிக்சர் உள்ளிட்ட சாப்பிட தயாராக இருக்கும் பேக் செய்யப்பட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி
18%-லிருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில் வறுக்கப்பட்ட பருப்புகள் சேராது.

> சர்க்கரை அல்லது சுவை சேர்க்கப்பாடாத தண்ணீர், மினரல் வாட்டர் மீதான வரி 18%-லிருந்து 5%-ஆக மாற்றப்பட்டுள்ளது.

> விவசாய பொருட்கள்: விவசாய இடு பொருட்கள் மீதான வரியும் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உரங்கள், விதைகள் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 12% அல்லது 18%-லிருந்து 5%-ஆக மாற்றப்பட்டுள்ளது.

> உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12% அல்லது 18%-லிருந்து 5%-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

>தனிநபர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ்களுக்கு இனி ஜிஎஸ்டி வரி இல்லை.

> பென்சில், கிரேயான்ஸ் உள்ளிட்ட எழுதுபொருட்கள், நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி சார்ந்த பொருட்கள் மீதான வரி பூஜ்யம் அல்லது 5%-ஆக மாற்றப்பட்டுள்ளது.

> நுகர்வோர் பொருட்கள்: ஜிஎஸ்டி மறுசீரமைப்பில் 32 இன்ச்களுக்கு மேலான டிவி, ஏசி, மானிட்டர், டிஷ் வாஷ் இயந்திரம் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் மீதான வரி 28%-லிருந்து 18%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

> காலணி மற்றும் ஆடை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியும் 12%-லிருந்து 5%-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

> ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 18%-லிருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

> ஆட்டோமொபைல் துறை: சிறிய கார்கள், 350 சிசி திறனுக்கு கீழான இருசக்கர வாகனம் மீதான ஜிஎஸ்டி வரி 28%-லிருந்து 18%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

> அனைத்து கார் பாகங்கள் மீதான வரி 18%-ஆக உள்ளது.

> மின் வாகனங்கள் மீதான வரி 5%-ஆக தொடரும்.

விளையாட்டு பொருட்கள் மற்றும் பொம்மைகள், தோல், மரம் மற்றும் கைவினை பொருட்கள் மீதான வரி 5%-ஆக உள்ளது.

விலை உயரும் பொருட்கள்:

ஒரு பக்கம் ஜிஎஸ்டி வரி சீரமைப்பு நடவடிக்கை காரணமாக பல்வேறு பொருட்களின் மீதான வரி விகிதம் குறைந்துள்ள நிலையில், ஆடம்பர பொருட்கள் உள்ளிட்ட சிலவற்றின் வரி 40%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

> பான் மசாலா, குட்கா, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், சர்தா, பீடி உள்ளிட்ட பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

> கார்பனேட்டட் குளிர்பானம், சோடா, இனிப்பு சேர்க்கப்பட்ட பானம் உள்ளிட்ட பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதற்கான ஜிஎஸ்டி வரி விகிதம் 18%-ஆக இருந்தது.

> ஆடம்பர பொருட்கள், சொகுசு கார்கள், விளையாட்டு போட்டிக்கான டிக்கெட்டுகள், ப்ரீமியம் மதுபான வகைகள் மீதான வரி 40% என அறிவிக்கப்பட்டுள்ளது.

> நிலக்கரி மீதான ஜிஎஸ்டி வரி 5%-லிருந்து 18%-ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களில் இயங்கும் உணவகங்கள், லாட்டரி உள்ளிட்ட சேவை துறை சார்ந்த ஜிஎஸ்டி வரியும் உயர்ந்துள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

குடி​யுரிமை திருத்​தச் சட்​டத்​தின் காலக்​கெடு நீட்​டிப்பு -மத்​திய அரசு அறி​விப்பு

0

குடி​யுரிமை திருத்​தச் சட்​டத்​தின் காலக்​கெடு நீட்​டிப்பு -மத்​திய அரசு அறி​விப்பு
Citizenship Amendment Act deadline extended – Central Government Notification

  • பாகிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான், வங்​கதேசத்தை சேர்ந்த இந்​து, கிறிஸ்​தவர்​கள், சீக்​கியர்​கள், புத்த மதத்​தினர், ஜெயின், பார்சி ஆகிய 6 மதச் சிறு​பான்​மை​யினர் பலர் இந்​தி​யா​வில் தஞ்​சமடைய வரு​கின்​றனர்

  • குடியேற்ற மற்​றும் வெளி​நாட்​டினர் சட்​டம் 21-வது பிரி​வின் படி, பாஸ்​போர்ட், விசா போன்ற அதி​காரப்​பூர்வ ஆவணங்​கள் இல்​லாமல் இந்​தி​யா​வுக்​குள் நுழைபவர்​களுக்கு 5 ஆண்டு சிறை தண்​டனை மற்​றும் ரூ.5 லட்​சம் வரை அபராதம் விதிக்க வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது.

புதுடெல்லி, செப். 04

குடி​யுரிமை திருத்​தச் சட்​டத்​தின் காலக்​கெடு நீட்​டிப்பு -மத்​திய அரசு அறி​விப்பு;

பாகிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான், வங்​கதேசத்தை சேர்ந்த இந்​து, கிறிஸ்​தவர்​கள், சீக்​கியர்​கள், புத்த மதத்​தினர், ஜெயின், பார்சி ஆகிய 6 மதச் சிறு​பான்​மை​யினர் பலர் இந்​தி​யா​வில் தஞ்​சமடைய வரு​கின்​றனர். அந்த நாடு​களில் மதரீ​தியி​லான துன்​புறுத்​தல்​களால் அவர்​கள் இப்​படி இந்​தி​யா​வுக்​குள் வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், மேற்​கூறிய 6 மதச் சிறு​பான்​மை​யினர், அதி​காரப்​பூர்வ பாஸ்​போர்ட், விசாவுடன் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்​பர் 31-ம் தேதிக்​குள் இந்​தி​யா​வுக்​குள் வந்​திருந்​தால், அவர்​கள் தொடர்ந்து இங்கு தங்​கலாம். அவர்​களு​டைய பாஸ்​போர்ட், விசா போன்ற ஆவணங்​கள் காலா​வ​தி​யாகி இருந்​தா​லும், 6 மதச் சிறு​பான்​மை​யினர் இந்​தி​யா​வில் தங்க விலக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது. அவர்​கள் மீது சட்​டப்​பூர்​வ​மான நடவடிக்கை எடுக்​கப்​ப​டாது.

இதற்​காக இந்​திய குடியேற்ற மற்​றும் வெளி​நாட்​டினர் சட்​டம் 2025 கடந்த திங்​கட்​கிழமை முதல் அமலுக்கு வந்​துள்​ளது. அதே​போல், குடியேற்ற மற்​றும் வெளி​நாட்​டினர் (விலக்​கு) உத்​தரவு 2025-ன்​படி நேபாளம், பூடான், திபெத்​தில் இருந்து கடந்த 1959-ம் ஆண்​டில் இருந்து கடந்த 2003-ம் ஆண்டு மே 30-ம் தேதிக்​குள் காத்​மாண்​டு​வில் உள்ள இந்​திய தூதரகத்​தின் மூலம் சிறப்பு உள்​நுழைவு பர்​மிட் மூலம் இந்​தி​யா​வுக்கு வந்​தவர்​களும் இங்கு தங்க விலக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், சீனா, மக்​காவ், ஹாங்​காங், பாகிஸ்​தான் வழி​யாக நேபாளம் மற்​றும் பூடான் மக்​கள் இந்​தி​யா​வுக்​குள் நுழைவதற்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

குடியேற்ற மற்​றும் வெளி​நாட்​டினர் சட்​டம் 21-வது பிரி​வின் படி, பாஸ்​போர்ட், விசா போன்ற அதி​காரப்​பூர்வ ஆவணங்​கள் இல்​லாமல் இந்​தி​யா​வுக்​குள் நுழைபவர்​களுக்கு 5 ஆண்டு சிறை தண்​டனை மற்​றும் ரூ.5 லட்​சம் வரை அபராதம் விதிக்க வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த சட்​டம் கடந்த ஏப்​ரல் மாதம் நிறைவேற்​றப்​பட்​டது.

பாஸ்​போர்ட், விசா காலம் முடிந்த பிறகு இந்​தி​யா​வில் தங்​கி​யிருக்​கும் வெளி​நாட்​டினருக்கு இந்​தச் சட்​டப்​பிரிவு 23-ன் கீழ் 3 ஆண்டு சிறை தண்​டனை மற்​றும் ரூ.3 லட்​சம் அபராதம் விதிக்க வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது.

கல்​லூரி​கள், மருத்​து​வ​மனை​களில் சேர்ந்​துள்ள வெளி​நாட்​டினர்​கள் தங்​கள் விவரங்​களை தெரிவிக்​காமல் மறைத்​தா​லும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குடி​யுரிமை திருத்த சட்​டம் கடந்த 2024 மார்ச் 11-ம் தேதி அமலுக்கு வந்​தது. அந்த திருத்த சட்​டத்​தின்​படி, கடந்த 2014-ம் ஆண்டு டிச.31-ம் தேதிக்கு முன்​ன​தாக இந்​தி​யா​வுக்கு அகதி​களாக வந்​தவர்​களுக்கு இந்​திய குடி​யுரிமை வழங்க வழி வகை செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், குடி​யுரிமை திருத்​தச் சட்​டத்​தின் காலக்​கெடு 2014-ம் ஆண்​டில் இருந்து 2024 டிச.31-ம் தேதி வரை நீட்​டித்து மத்​திய அரசு அறி​வித்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

தூய்மைப் பணியாளர்களை பணிக்கு திரும்ப அறிவுறுத்த, வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவு

தூய்மைப் பணியாளர்களை பணிக்கு திரும்ப அறிவுறுத்த, வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவு

Judges order lawyer to instruct sanitation workers to return to work

  • தற்காலிகமாக, தூய்மை பணியாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.761 ஊதியத்தை தொடர்ந்து வழங்க ஒப்பந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது

  • அக்டோபர் 6-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கும், ஒப்பந்த நிறுவனத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைப்பு

சென்னை, செப். 01

சென்னை மாநகராட்சியில், இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி கே.சுரேந்தர், தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டார்.

அதேசமயம், தூய்மைப் பணியாளர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தை வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், அதை ரத்து செய்யக் கோரியும், உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், தூய்மைப் பணிகள் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொழிலாளர் நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவின் அடிப்படையில், தொழிலாளர் நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடியும் வரை, தற்காலிகமாக, தூய்மை பணியாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.761 ஊதியத்தை தொடர்ந்து வழங்க ஒப்பந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; 800-க்கும் மேற்பட்டோர் பலி

ஒப்பந்த நிறுவனம் தரப்பில், தனி நீதிபதி உத்தரவுக்குப் பிறகு 800 பணியாளர்கள் பணியில் சேர்ந்த நிலையில், மேல் முறையீடு செய்ததை அடுத்து, அவர்கள் பணிக்கு வர மறுக்கின்றனர். இதனால் 2000 டன் குப்பைகள் தேங்கி, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இனியும் அவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் வேறு ஆட்களை நியமிக்க வேண்டி வரும். அதனால் தூய்மை பணியாளர்களை பணிக்கு திரும்ப அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கப் போவதில்லை என கூறி, மனுவுக்கு அக்டோபர் 6-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி சென்னை மாநகராட்சிக்கும், ஒப்பந்த நிறுவனத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

மேலும், தூய்மைப் பணியாளர்களை பணிக்கு திரும்ப அறிவுறுத்தும்படி, மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; 800-க்கும் மேற்பட்டோர் பலி

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; 800-க்கும் மேற்பட்டோர் பலி

Powerful earthquake in Afghanistan; Over 800 dead

  • கடந்த 2023-ம் ஆண்டுக்குப் பின்னர் ஆப்கனில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலநடுக்கமாக இது உள்ளது

  • கட்டிட இடிபாடுகள் உள்ள பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் செல்வதில் சிக்கல்

காபூல், செ. 01

ஆப்கானிஸ்தானில் இன்று (திங்கள்கிழமை) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 800-க்கும் அதிகமானோர் பலியாகினர். 2500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து அங்கு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானின் நாங்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் எனுமிடத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கங்கள் குறித்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதலில் 6.3 ரிக்டர் அளவிலும், பின்னர் 4.7 ரிக்டர் அளவிலும் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

கடந்த 2023-ம் ஆண்டுக்குப் பின்னர் ஆப்கனில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலநடுக்கமாக இது உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இப்பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 4000 பேர் வரை உயிரிழந்ததாக தலிபான் அரசு தெரிவித்தது. ஆனால் ஐ.நா சபையோ 1500 பேர் உயிரிழந்தனர் எனத் தெரிவித்தது.

இந்நிலையில் இன்றைய நிலநடுக்கத்தில் இதுவரை 800-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல்கள் வருகின்றன. இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையில், தலிபான் அரசின் சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் ஷராஃபத் ஜமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “800 பேர் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. இன்னும் பலி எண்ணிக்கை அதிகமாகலாம். கட்டிட இடிபாடுகள் உள்ள பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் செல்வதில் சிக்கல் நிலவுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாடானது நிலநடுக்கங்கள் ஏற்படக் கூடிய பகுதியில் உள்ளது. அதுவும் குறிப்பாக அங்குள்ள இந்துகுஷ் மலைகளானது இந்தியா மற்று யூரேஸியா டெக்டானிக் தகடுகள் இணையும் இடத்தில் உள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, ஜெர்மனி, இங்கிலாந்தில் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணம்

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, ஜெர்மனி, இங்கிலாந்தில் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணம்

Chief Minister Stalin’s official visit to Germany and England to attract industrial investments to Tamil Nadu

  • மொத்தம் 36 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 30,037 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் ரூ.18,498 கோடிக்கான முதலீடுகள் தமிழகத்துக்கு வந்துள்ளன

  • ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 4ம் தேதி நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று, பெரியார் படத்தை திறந்து வைக்கிறேன்.

சென்னை, ஆக. 31

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, ஜெர்மனி, இங்கிலாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று புறப்பட்டுச் சென்றார்.

தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, ஜெர்மனி, இங்கிலாந்தில் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து விமானத்தில் ஜெர்மனிக்கு அவர் நேற்று புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த 2021-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை ரூ.10 லட்சத்து 62 ஆயிரத்து 752 கோடிக்கான முதலீடுகளை ஈர்த்து, 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 32.81 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதில் பெரும்பாலான திட்டங்கள் நிறைவடையும் நிலையில் உள்ளன. பல நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கிவிட்டன. இதனால் வளர்ச்சி வந்திருக்கிறதா என்று கேட்பவர்களுக்கு, மத்திய அரசு வெளியிடும் புள்ளி விவரங்களே ஆதாரம்வெளிநாட்டு பயணங்களால் 36 ஒப்பந்தங்கள்: எனது ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்திலும், தமிழகம் அமைதியான மாநிலமாக, திறமையான இளைஞர்கள் உள்ள மாநிலமாக, வாய்ப்புகளை ஊக்குவிக்கும் மாநிலமாக உயர்ந்துள்ளதை தரவுகளுடன் எடுத்துச் சொல்லி, முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளேன். இதுவரை. அமெரிக்க பயணத்தில் 19, ஸ்பெயினில் 3, ஜப்பானில் 7, ஐக்கிய அரபு அமீரகத்தில் 6, சிங்கப்பூரில் ஒன்று என மொத்தம் 36 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 30,037 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் ரூ.18,498 கோடிக்கான முதலீடுகள் தமிழகத்துக்கு வந்துள்ளன. இந்த 36 ஒப்பந்தங்களில் 23 திட்டங்கள் பல்வேறு செயல்பாட்டு நிலைகளில் உள்ளன.


இதன் தொடர்ச்சியாகவே ஒரு வார பயணமாக தற்போது ஜெர்மனி, இங்கிலாந்துக்கு செல்கிறேன். முதலில் ஜெர்மனிக்கு செல்கிறேன். அங்கிருந்து செப்.1-ம் தேதி இங்கிலாந்து செல்கிறேன். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 4ம் தேதி நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று, பெரியார் படத்தை திறந்து வைக்கிறேன். 8-ம் தேதி தமிழகம் திரும்புகிறேன். இவ்வாறு முதல்வர் கூறினார். பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

எனது வெளிநாட்டு பயணங்களால் தமிழகத்துக்கு பயன் உண்டா என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கேட்கிறார். அவர் தனது பயணம் போலவே இதுவும் இருக்கும் என்று கருதி பேசுகிறார். ஆனால், நான் கையெழுத்திடும் அனைத்து ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வரப்போகின்றன, வந்திருக்கின்றன.

பிஹார் போல, தமிழகத்திலும் cளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளுமா என்ற கேள்வி எழுகிறது. யார், என்ன சதி செய்தாலும், தமிழகம் முறியடிக்கும். திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு உள்ளதா என்று கேட்கிறீர்கள். புதிய கட்சிகள் வருகிறதோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் அதிகம் வருகின்றனர்.

விஜய்யின் அரசியல் வருகை மற்றும் ‘திமுகவுக்கு தவெகதான் போட்டி’ என்று அவர் சவால்விட்டுள்ளது குறித்து நான் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பேச்சை குறைத்து, செயலில் நம் திறமையை காட்ட வேண்டும். சி-வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பு வந்துள்ளது. எல்லா கருத்துக் கணிப்புகளையும் மிஞ்சி ஒரு அமோக வெற்றியை திமுக கூட்டணி பெறும். அதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு முதல்வர் கூறினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு ; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முதல்வர் கோரிக்கை 

அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிப்பு ; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முதல்வர் கோரிக்கை

Tamil Nadu’s exports severely affected by US tariffs, CM demands the central government to take action

  • தமிழ்நாட்டின், குறிப்பாகப் பின்னலாடை மையமான திருப்பூரின், ஏற்றுமதி வர்த்தகத்தினைப் பெரிதும் பாதித்துள்ளது

  • தொழிலாளர் சார்ந்த துறைகள் ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, ஆக. 28

இந்தியப் பொருட்களின் மீதான அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒன்றிய அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளை வலியுறுத்தி, உடனடி நிவாரணம் மற்றும் அமைப்புரீதியான சீர்திருத்தங்கள் மூலம் நமது தொழிற்சாலைகள் மற்றும் பணியாளர்களைக் காக்க வேண்டுகிறேன் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, கடந்த 16-ம் தேதி (ஆக.16) இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியுள்ளதால், தமிழ்நாட்டில் பின்னலாடை உள்ளிட்ட பல்வேறு தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்தை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) சமூகவலைதளப் பதிவொன்று வெளியிட்டுள்ளார்.

அதில் முதல்வர் ஸ்டாலின், “அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு தமிழ்நாட்டின், குறிப்பாகப் பின்னலாடை மையமான திருப்பூரின், ஏற்றுமதி வர்த்தகத்தினைப் பெரிதும் பாதித்துள்ளது. ஆண்டுக்கு 3000 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பதோடு, பல்லாயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பும் இதனால் பாதிப்படைந்துள்ளது.

 

இந்நிலையில், ஒன்றிய அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துகிறேன். உடனடி நிவாரணம் மற்றும் அமைப்புரீதியான சீர்திருத்தங்கள் மூலம் நமது தொழிற்சாலைகள் மற்றும் பணியாளர்களைக் காக்க வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறையும்’ – இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு புதன்கிழமை (ஆக.27) அமலுக்கு வந்தது. ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியோடு இந்த கூடுதல் 25 சதவீதமும் சேர்ந்துள்ள நிலையில், 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும். இதனால், தொழிலாளர் சார்ந்த துறைகள் ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியப் பொருட்களின் மீதான அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு மத்திய அரசின் நடவடிக்கையை கோரியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

முன்னாள் அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

முன்னாள் அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

Enforcement Directorate officials raid 13 places, including former minister Sourav Bhardwaj’s house

  • 2018 – 19 காலகட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி ரூ.5,590 கோடி மதிப்பீட்டில், 24 மருத்துவமனைகள் கட்ட, மேம்படுத்த ஒப்புதல் வழங்கியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டினார்.

  • பிரதமர் மோடியின் பட்டச் சான்றிதழ் தொடர்பாக கேள்வி எழுப்பப்படுவதால், அதிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப இந்தச் சோதனை நடத்தப்படுகிறது.”

புதுடெல்லி, ஆக. 26

டெல்லி முன்னாள் அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் வீடு உள்பட 13 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஆம் ஆத்மி ஆட்சியின் போது மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு வழங்கப்பட்ட ஒப்புதல் ரீதியாக சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாகக் கூறி இந்தச் சோதனையை அமலாக்கத் துறை நடத்தியுள்ளது.

இந்தச் சோதனை ஒரே நேரத்தில் 13 இடங்களில் நடைபெற்றாலும் கூட இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

சவுரவ் பரத்வாஜ் கிரேட்டர் கைலாஷ் பகுதியில் 3 முறை எம்எல்ஏவாக இருந்தவராவார். மேலும் அவர் டெல்லி சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு மற்றும் நீர் வளத்துறை அமைச்சராகவும், டெல்லி நீர் வாரியத் துறை தலைவராகவும் இருந்தார். ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 2024 ஆகஸ்டில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்திர குப்தா, 2018 – 19 காலகட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி ரூ.5,590 கோடி மதிப்பீட்டில், 24 மருத்துவமனைகள் கட்ட, மேம்படுத்த ஒப்புதல் வழங்கியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டினார்.

 

இந்நிலையில், இந்தப் புகாரை விசாரித்த அமலாக்கத் துறை, இந்த ஒப்பந்தங்களை வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. சிலவற்றில் மதிப்பீட்டை விட அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால், எந்த ஒரு பணியும் திட்டமிட்ட காலத்துக்குள் முழுமையாக முடிக்கப்படவில்லை என்று கூறுகிறது. உதாரணத்துக்கு ரூ.1,125 கோடி மதிப்பீட்டில் உருவாக்க திட்டமிடப்பட்ட ஐசியு மருத்துவமனை திட்டம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 6000 படுக்கை வசதிகளுடன் உருவாக்க திட்டமிடப்பட்ட இந்த மருத்துவமனையில் பாதியளவு கூட பணிகள் முடியவில்லை என்று அமலாக்கத் துறை கூறுகிறது.

இந்தச் சோதனை முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்பட்டது என டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி கூறியுள்ளார். “சவுரவ் வீடு, சொந்தமான இடங்களில் இன்று சோதனை நடத்தப்பட்டது ஏன் தெரியுமா?. பிரதமர் மோடியின் பட்டச் சான்றிதழ் தொடர்பாக கேள்வி எழுப்பப்படுவதால், அதிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப இந்தச் சோதனை நடத்தப்படுகிறது.” என்று கூறினார்.

இதேபோல் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, “நேற்று ஒட்டுமொத்த தேசமும் பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு பற்றி கேள்வி எழுப்பியது. அதிலிருந்து மக்களை திசை திருப்ப அடுத்த நாளே ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்தப்படுகிறது. எங்களது கேள்வி மிகவும் எளிமையானதே. மோடியின் பட்டச் சான்றிதழ் போலியானதா என்பதே அது. அதற்குப் பதில் சொல்வதற்கு பதில் ரெய்டு நடத்துவது ஏன்?.” என்று வினவியுள்ளார்.

டெல்லியில் தற்போது பாஜக ஆட்சி நடைபெறுகிறது. ரேகா குப்தா முதல்வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க்து.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்