
உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா | வரும் 25-ம் தேதி முதல் டிக்கெட் விற்பனை துவக்கம்
world cup cricket festival | tickets to go on sale on aug.25th
-
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 9 ஆட்டங்களின் தேதி மற்றும் நேரங்களில் மாற்றம் செய்து திருத்தப்பட்ட புதிய போட்டி அட்டவணையை ஐ.சி.சி. நேற்று வெளியீடு
-
உலக கோப்பை கிரிக்கெட் இணையதளத்தில் வரும் 15-ம் தேதி முதல் தங்கள் பெயரை பதிவுசெய்து கொண்டால், அவர்களுக்கு டிக்கெட் விற்பனை தொடர்பான தகவல்கள் முதலிலேயே தெரிவிக்கப்படும்
புதுடெல்லி, ஆக.10
உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா :13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான போட்டி அட்டவணை கடந்த ஜூன் 27-ம் தேதி வெளியிடப்பட்டது.
அக்டோபர் 5-ம் தேதி அகமதாபாத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதற்கிடையே, திருத்தப்பட்ட புதிய போட்டி அட்டவணையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. ஆனால் இடங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்திய அணி அல்லாத மற்ற ஆட்டங்கள்
இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. அன்று இந்திய அணி அல்லாத மற்ற ஆட்டங்கள் மற்றும் பயிற்சி ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய அணி மோதும் போட்டிக்குரிய டிக்கெட்டுகள் வரும் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை கிடைக்கும்.
இதையும் படியுங்கள் : இந்தியாவில் பாரத மாதாவை கொன்று விட்டீர்கள் | மக்களவையில் ராகுல் காந்தி அனல் பேச்சு
உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா
அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 15-ம் தேதி விற்கப்படும். ரசிகர்கள் உலக கோப்பை கிரிக்கெட் இணையதளத்தில் வரும் 15-ம் தேதி முதல் தங்கள் பெயரை பதிவுசெய்து கொண்டால், அவர்களுக்கு டிக்கெட் விற்பனை தொடர்பான தகவல்கள் முதலிலேயே தெரிவிக்கப்படும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.