மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு; முதல்வர் விஜய் அழைப்பு
Census for Public Welfare;Chief Minister Vijay’s Appeal
-
நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.
-
இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம். நான் பதிவு செய்துள்ளேன். உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும்
சென்னை, ஜூலை.17
மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு – முதல்வர் விஜய் அழைப்பு: ‘நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள். உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும்” என தமிழக முதல்வர் விஜய் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.

இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம். நான் பதிவு செய்துள்ளேன். உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு’ எனத் தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.







