பா.ஜனதா தமிழ்நாட்டுக்கு செய்த சிறப்பு என்ன ? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

பா.ஜனதா தமிழ்நாட்டுக்கு செய்த சிறப்பு என்ன ? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

what special things done to tamilnadu by bjp ? – chief minister mk stalin questioned

  • சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில் நுட்ப ஜவுளி பூங்கா காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் வந்தது.

  • ஜி.எஸ்.டி. நிதியில் தமிழ்நாட்டில் இருந்து தான் அதிகமாக கொடுத்து இருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டுக்கு தான் மத்திய அரசு நிதி கொடுப்பதில்லை.

சென்னை, ஜூன்.12

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் சென்னைக்கு புதிதாக கிடைத்த மெட்ரோ ரெயில், தமிழுக்கு செம்மொழி தகுதி, சேதுசமுத்திர திட்டம், ஒரகடத்தில் தேசிய மோட்டார் வாகன சோதனை ஆராய்ச்சி மையம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலத்தில் புதிய ரெயில்வே கோட்டம், சென்னை துறைமுகம், மதுரவாயல் பறக்கும் சாலை, நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், சென்னை அருகில் கடற்சார் தேசிய பல்கலைக்கழகம், திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம், கரூர், ஈரோடு, சேலம் ஆகிய 3 இடங்களில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில் நுட்ப ஜவுளி பூங்கா இதெல்லாம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் வந்தது.

இதையும் படியுங்கள் : கலைமாமணி விருதாளர்களுக்கு வாழ்நாள் இலவச பஸ் பாஸ் ; மும்முடிச்சோழன் நாடக விழாவில் நடிகர் எஸ்.வி.சேகர் கோரிக்கை

நிதி ஒதுக்கீடு

இதுபோல் பா.ஜனதா தமிழ்நாட்டுக்கு என்ன சிறப்புகள் கொண்டு வந்து இருக்கிறீர்கள்? என்பது தான் என்னுடைய கேள்வி. ஆகவே எந்த திட்டத்திற்கும் தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீடு செய்வதை நான் கேட்கவில்லை. அனைத்து மாநிலத்திற்கும் செய்யப்படும் பொதுவான இடத்தில் தமிழ்நாடு இணைக்கப்பட்டு இருப்பதை பற்றியும் நான் கேட்கவில்லை.

ஜி.எஸ்.டி.

இன்றைக்கு ஜி.எஸ்.டி.-ல் ஒவ்வொரு மாநிலமும் மத்திய அரசுக்கு நிதி கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அந்த ஜி.எஸ்.டி. நிதியில் தமிழ்நாட்டில் இருந்து தான் அதிகமாக கொடுத்து இருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டுக்கு தான் மத்திய அரசு நிதி கொடுப்பதில்லை. ரொம்ப குறைவாக கொடுத்துக் கொண்டு இருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் அதிகமாக கொடுக்கிறது. அதைத்தான் அடிப்படையாக வைத்து கேட்டேன்.

எய்ம்ஸ் மருத்துவமனை

அதுபோல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு ரூ.1200 கோடி மதிப்பில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் அன்றைக்கு நிதி மந்திரியாக இருந்த அருண்ஜெட்லி இதை பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதையடுத்து பிரதமர் வந்து அடிக்கல் நாட்டினார். அதன் பிறகு அமித் ஷா பலமுறை தமிழ்நாட்டிற்கு வந்து இருக்கிறார். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி 50 சதவீதம் முடிந்து விட்டது என சொன்னார்கள் தவிர இதுவரைக்கும் எந்த பணியும் நடக்கவில்லை என்பது தான் எனது குற்றச்சாட்டு.

மத்திய அரசு

அதை எல்லாம் மூடி மறைத்து பேசிவிட்டு அமித் ஷா சென்றுள்ளாரே தவிர நாங்கள் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் தரவில்லை. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனை அன்றைக்கு தேவையேபடவில்லை. ஏனென்றால் நம்முடைய மருத்துவ கட்டமைப்புகள் அதிகளவில் சிறப்பாக இருந்தது. இருந்தாலும் எய்ம்ஸ் திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு. அவர்கள் தான் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆகவே இது பற்றி கேள்விகள் கேட்பது பொறுப்புள்ள மத்திய மந்திரி அமித் ஷாவுக்கு அழகல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

Related Articles

Stay Connected

0FansLike
3,849FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles