Home இந்தியா மத்​திய பட்​ஜெட் மக்​கள் விரோத பட்ஜெட் – மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி கடுமை​யாக சாடல்

மத்​திய பட்​ஜெட் மக்​கள் விரோத பட்ஜெட் – மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி கடுமை​யாக சாடல்

0
மத்​திய பட்​ஜெட் மக்​கள் விரோத பட்ஜெட் – மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி கடுமை​யாக சாடல்

மத்​திய பட்​ஜெட் மக்​கள் விரோத பட்ஜெட் – மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி கடுமை​யாக சாடல்

Central Budget is an anti-people budget – West Bengal Chief Minister Mamata Banerjee strongly criticizes

  • மத்​திய பட்​ஜெட் திசையற்றது, தொலைநோக்​குப் பார்​வையற்​றது, செயலற்றது. இது பெண்​கள், விவ​சா​யிகள், மாணவர்​கள் மற்​றும் எஸ்​சி, எஸ்​டி, ஓபிசி பிரி​வினருக்கு எதி​ரானது. குறிப்​பாக மேற்கு வங்​கத்​துக்​கான அறி​விப்​பு​கள் பட்ஜெட்டில் இடம்​பெற​வில்​லை.

  • திரிண​மூல் பொதுச் செய​லா​ளர் அபிஷேக் பானர்ஜி கூறுகை​யில், “81 நிமிட பட்​ஜெட் உரை​யில் மேற்கு வங்​கம் என்ற பெயரே இடம் பெற​வில்​லை.

 

கொல்​கத்தா, பிப். 02

2026–27- க்கான மத்​திய பட்​ஜெட் மக்​கள் விரோத பட்ஜெட் என்று மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி கடுமை​யாக சாடி​யுள்​ளார். தலை​மைத் தேர்​தல் ஆணையர் ஞானேஷ் குமாரை டெல்​லி​யில் இன்று மம்தா பானர்ஜி சந்​திக்க உள்​ளார். இதற்​காக, நேற்று கொல்​கத்தா விமான நிலை​யத்​துக்கு வந்த அவர் செய்​தி​யாளர்​களை சந்​தித்​தார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: மத்​திய பட்​ஜெட் திசையற்றது, தொலைநோக்​குப் பார்​வையற்​றது, செயலற்றது. இது பெண்​கள், விவ​சா​யிகள், மாணவர்​கள் மற்​றும் எஸ்​சி, எஸ்​டி, ஓபிசி பிரி​வினருக்கு எதி​ரானது. குறிப்​பாக மேற்கு வங்​கத்​துக்​கான அறி​விப்​பு​கள் பட்ஜெட்டில் இடம்​பெற​வில்​லை. சமூகப் பாது​காப்​புத் திட்டங்​களும் இல்​லை.

தேர்​தலில் தோல்​வியடைவோம் என்ற அச்​சத்​தில் பொருளா​தார ரீதி​யாக வங்​கத்தை அவர்​கள் புறக்​கணிக்​கிறார்​கள். மத்​திய பட்​ஜெட் பொய்​களின் குவிய​லாக உள்ளது. ஜிஎஸ்டி மூலம் மேற்கு வங்​கத்​திலிருந்து வரு​வாயைப் பெறும் மத்​திய அரசு, மாநிலத்​திற்கு அதை திருப்பித் தரு​வ​தில்​லை. நான் ரயில்வே அமைச்​ச​ராக இருந்​த​போது அறி​வித்த டன்​குனி – சூரத் சரக்கு வழித்​தடத் திட்​டம் தொடர்ந்து முடக்​கப்​பட்​டுள்​ளது. இது ஒரு மக்​கள் விரோத வெற்று பட்ஜெட். இவ்​வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

திரிண​மூல் பொதுச் செய​லா​ளர் அபிஷேக் பானர்ஜி கூறுகை​யில், “81 நிமிட பட்​ஜெட் உரை​யில் மேற்கு வங்​கம் என்ற பெயரே இடம் பெற​வில்​லை. மத்​திய அரசு மேற்கு வங்க மக்​களை வங்க தேசத்​தவர்​களாகப் பார்க்​கிற​தா? 2021 தேர்​தல் தோல்விக்​குப் பிறகு மாநிலத்​துக்​கான நிதியை மத்​திய அரசு நிறுத்தி வைத்​துள்​ளது. இதற்கு வரும் தேர்​தலில் மக்​கள் தகுந்​த பதிலடி கொடுப்​பார்​கள்​” என்​றார்​.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்