சென்னை மதுரை கோவைக்கு வாங்க இருந்த மின்சார பேருந்து டெண்டர் ரத்து – விஜய் அரசு அதிரடி
Tender for Electric Buses for Chennai, Madurai, and Coimbatore Cancelled – Vijay Government’s Decisive Move
-
ஜெர்மனி வங்கியிடம் தெரிவிக்கப்பட்டு, தற்போதுள்ள நடைமுறையை பின்பற்ற கோரிக்கை கடிதம்
-
கடந்த ஜூன் 18-ம் தேதி டெண்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஜெர்மன் வங்கியும் ஒப்புதல்
சென்னை, ஜூன். 25
தமிழகத்துக்கு 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை அரசு ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில் 2025 முதல் மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார பேருந்துகளை ஒப்பந்த நிறுவனமே கொள்முதல் செய்து, இயக்கி பராமரிக்கும். அதற்கான குறிப்பிட்ட தொகையை ஒப்பந்த நிறுவனத்துக்கு அரசு வழங்கும்.

அதன்பின், சென்னை, மதுரை, கோவையில் பயன்படுத்த 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டது. இந்தப் பேருந்துகள் ஜெர்மனி வங்கி நிதியுதவிடன் வாங்க திட்டமிடப்பட்டது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தற்போதைய சூழலில் பேருந்துகளைப் போக்குவரத்துக் கழகங்கள் கொள்முதல் செய்து இயக்குவது நிதி இழப்பை ஏற்படுத்தும். இதுகுறித்து ஜெர்மனி வங்கியிடம் தெரிவிக்கப்பட்டு, தற்போதுள்ள நடைமுறையை பின்பற்ற கோரிக்கை கடிதம் அனுப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று, கடந்த ஜூன் 18-ம் தேதி டெண்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஜெர்மன் வங்கியும் ஒப்புதல் அளித்தது. இதன் காரணமாகவே டெண்டர் ரத்து செய்யப்பட்டது. விரைவில் டெண்டரில் திருத்தம் செய்து மீண்டும் வெளியிடப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.







