தென்கொரியா பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வெற்றி பெற்ற 15 சிறந்த கட்டுரைகளுக்கு விருது: கொரிய தமிழ் ஆராய்ச்சி அமைப்பு தலைவர் முனைவர் ஆரோக்கியராஜ் வழங்கினார்

தென்கொரியா பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வெற்றி பெற்ற 15 சிறந்த கட்டுரைகளுக்கு விருது: கொரிய தமிழ் ஆராய்ச்சி அமைப்பு தலைவர் முனைவர் ஆரோக்கியராஜ் வழங்கினார்

Awards presented to 15 best papers at the South Korea International Thirukkural Conference: Presented by Dr. Arokiaraj, President of the Korean Tamil Research Organization

புதுச்சேரி, ஜன. 17

தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள செஜோங் பல்கலைக்கழகத்தில் கடந்த நவம்பர் 8-ந் தேதி, கொரிய தமிழ் ஆராய்ச்சி அமைப்பு சார்பில் ‘தென்கொரியா முதல் பன்னாட்டு திருக்குறள் மாநாடு’ நடைபெற்றது.

மாநாட்டில் திருக்குறளுக்கும், சமூக, பொருளாதார, மருத்துவம், அறிவியியலுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் இந்தியா, இலங்கை, மலேசியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து நூற்றுக்கும்மேற்பட்ட ஆய்வாளர்கள், ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில் 30 ஆய்வுக்கட்டுரைகள் சிறந்த கட்டுரைகளாக தேர்வு செய்யப்பட்டன. கொரியா, மலேசிய கட்டுரையாளர்களுக்கு விழா மேடையிலேயே விருதுகளும், பாட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதனிடையே அண்மையில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற ‘அயலக தமிழர் தினம்’ விழாவில் கலந்து கொள்வதற்காக, கொரிய தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் முனைவர் ஆரோக்கியராஜ் செல்வராஜ் மற்றும் துணைத் தலைவர் கவிஞர் சகாய டர்சியூஸ் பீ ஆகியோர் தமிழ்நாட்டிற்கு வந்தனர்.

இந்தநிலையில் புதுச்சேரி போப் ஜான் பால் II கல்லூரியில், தென்கொரிய முதல் பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில், சிறந்த ஆய்வுக்கட்டுரையாளர்களாக வெற்றி பெற்றவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கொரிய தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் முனைவர் ஆரோக்கியராஜ் செல்வராஜ், துணைத் தலைவர் கவிஞர் சகாய டர்சியூஸ் பீ, கல்லூரியின் செயலர் முனைவர் ரிச்சர்ட், முதல்வர் முனைவர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த பேராசிரியர் ரெமோ ஆரோக்கியதாஸ், பேராசிரியர் புவனேஸ்வரி மற்றும் மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

முன்னதாக புதுச்சேரி போப் ஜான் பால் II கல்லூரிக்கு, கொரியாவில் இருந்து வருகை தந்த கொரிய தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் முனைவர் ஆரோக்கியராஜ் செல்வராஜ், துணைத் தலைவர் கவிஞர் சகாய டர்சியூஸ் பீ ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

Related Articles

Stay Connected

0FansLike
3,849FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles