Home Blog Page 2

மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழப்பு

மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழப்பு

Maharashtra Deputy Chief Minister and Nationalist Congress Party leader Ajit Pawar dies in plane crash

  • அஜித் பவார் மகாராஷ்டிரா அரசியல் களத்தில் மிக முக்கியத் தலைவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்

  • மகாராஷ்டிரா அரசியல் தலைவர்களும் தேசிய அளவில் பல்வேறு கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் தங்களின் இரங்கலைப் பதிவு செய்து வருகின்றனர்.

மும்பை, ஜன.28

மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 67. அஜித் பவாருக்கு சுனேத்ரா பவார் என்ற மனைவியும், ஜெய், பார்த் பவார் என்ற மகன்களும் உள்ளனர்.

முன்னதாக, அஜித் பவார் இன்று காலை மும்பையில் இருந்து பாரமதிக்கு ஒரு சார்ட்டர்ட் விமானத்தில் பயணப்பட்டார். அவருடன் உதவியாளர்கள் இருவர் உள்பட 5 பேர் இருந்துள்ளனர்.

இந்நிலையில், அவர் சென்ற விமானம் இன்று (ஜன.28) காலை சரியாக 8.45 மணிக்கு விபத்துக்குள்ளாகியுள்ளது. பாராமதியில் விமானம் தரையிரங்க முயற்சித்தபோது விபத்துக்குள்ளானதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் இவர்.

முதன்முதலில் 1991-ல் பாராமதி மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1995, 1999, 2004, 2009, 2014 என தொடர்ச்சியாக அத்தொகுதியை அவர் தக்கவைத்தார்.

2019-ல் அக்கட்சிக்குள் பூசல் ஏற்பட்டபோது தேர்தல் ஆணையத்தில் கட்சிக்கான உரிமையை கோரி கட்சி மற்றும் சின்னத்தை தக்கவைத்துக் கொண்டவர்.

அஜித் பவார் மகாராஷ்டிரா அரசியல் களத்தில் மிக முக்கியத் தலைவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். பல்வேறு அரசுகளின் கீழ் 6 முறை துணை முதல்வராக இருந்துள்ளார். மகாராஷ்டிராவில் நீண்ட காலம் துணை முதல்வராக இருந்தவர் அவர்.

அவரது மறைவுக்கு மகாராஷ்டிரா அரசியல் தலைவர்களும் தேசிய அளவில் பல்வேறு கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் தங்களின் இரங்கலைப் பதிவு செய்து வருகின்றனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

தென்கொரியா பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வெற்றி பெற்ற 15 சிறந்த கட்டுரைகளுக்கு விருது: கொரிய தமிழ் ஆராய்ச்சி அமைப்பு தலைவர் முனைவர் ஆரோக்கியராஜ் வழங்கினார்

தென்கொரியா பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வெற்றி பெற்ற 15 சிறந்த கட்டுரைகளுக்கு விருது: கொரிய தமிழ் ஆராய்ச்சி அமைப்பு தலைவர் முனைவர் ஆரோக்கியராஜ் வழங்கினார்

Awards presented to 15 best papers at the South Korea International Thirukkural Conference: Presented by Dr. Arokiaraj, President of the Korean Tamil Research Organization

புதுச்சேரி, ஜன. 17

தென் கொரியா தலைநகர் சியோலில் உள்ள செஜோங் பல்கலைக்கழகத்தில் கடந்த நவம்பர் 8-ந் தேதி, கொரிய தமிழ் ஆராய்ச்சி அமைப்பு சார்பில் ‘தென்கொரியா முதல் பன்னாட்டு திருக்குறள் மாநாடு’ நடைபெற்றது.

மாநாட்டில் திருக்குறளுக்கும், சமூக, பொருளாதார, மருத்துவம், அறிவியியலுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து பல்வேறு தலைப்புகளில் இந்தியா, இலங்கை, மலேசியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து நூற்றுக்கும்மேற்பட்ட ஆய்வாளர்கள், ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில் 30 ஆய்வுக்கட்டுரைகள் சிறந்த கட்டுரைகளாக தேர்வு செய்யப்பட்டன. கொரியா, மலேசிய கட்டுரையாளர்களுக்கு விழா மேடையிலேயே விருதுகளும், பாட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதனிடையே அண்மையில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற ‘அயலக தமிழர் தினம்’ விழாவில் கலந்து கொள்வதற்காக, கொரிய தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் முனைவர் ஆரோக்கியராஜ் செல்வராஜ் மற்றும் துணைத் தலைவர் கவிஞர் சகாய டர்சியூஸ் பீ ஆகியோர் தமிழ்நாட்டிற்கு வந்தனர்.

இந்தநிலையில் புதுச்சேரி போப் ஜான் பால் II கல்லூரியில், தென்கொரிய முதல் பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில், சிறந்த ஆய்வுக்கட்டுரையாளர்களாக வெற்றி பெற்றவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கொரிய தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் முனைவர் ஆரோக்கியராஜ் செல்வராஜ், துணைத் தலைவர் கவிஞர் சகாய டர்சியூஸ் பீ, கல்லூரியின் செயலர் முனைவர் ரிச்சர்ட், முதல்வர் முனைவர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த பேராசிரியர் ரெமோ ஆரோக்கியதாஸ், பேராசிரியர் புவனேஸ்வரி மற்றும் மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

முன்னதாக புதுச்சேரி போப் ஜான் பால் II கல்லூரிக்கு, கொரியாவில் இருந்து வருகை தந்த கொரிய தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் முனைவர் ஆரோக்கியராஜ் செல்வராஜ், துணைத் தலைவர் கவிஞர் சகாய டர்சியூஸ் பீ ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

ஒப்​பந்த அடிப்​படை​யில் பணி​யாற்​றிய 831 செவிலியர்​களுக்கு பணி நிரந்தர ஆணை – சுகா​தா​ரத் ​துறை அமைச்​சர் வழங்​கி​னார்

ஒப்​பந்த அடிப்​படை​யில் பணி​யாற்​றிய 831 செவிலியர்​களுக்கு பணி நிரந்தர ஆணை – சுகா​தா​ரத் ​துறை அமைச்​சர் வழங்​கி​னார்

The Health Minister issued permanent appointment orders to 831 contractual basis nurses

  • தற்​போது பணி நியமன ஆணை​ வழங்​கப்​பட்டவர்கள், பொங்​கலுக்கு பின் கலந்​தாய்வு மூல​மாக அவர்​கள் பணி​யாற்​றும் இடங்​களை தேர்வு செய்​ய​லாம்.

  • கோரிய தொகையை விட கூடு​தலாக அவர்​களுக்​கான ஊதிய உயர்வு

சென்னை, ஜன. 14

ஒப்​பந்த அடிப்​படை​யில் பணி​யாற்​றிய 831 செவிலியர்​களுக்கு பணி நிரந்தர ஆணையை சுகா​தா​ரத் ​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வழங்​கி​னார்.

சென்​னை, கிண்​டி​யில் உள்ள, தமிழ்​நாடு டாக்​டர் எம்​ஜிஆர் மருத்​துவ பல்​கலைக்​கழகத்​தில் நேற்று ஒப்​பந்த அடிப்​படை​யில் பணி​யாற்​றிய 831 செவிலியர்​களுக்கு பணி நிரந்தர ஆணையை சுகா​தா​ரத்​ துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வழங்​கி​னார்.

சுகா​தா​ரத் ​துறை செயலர் ப.செந்​தில்​கு​மார், மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப்​பணி​கள் இயக்​குநர் சித்​ரா, பொது சுகா​தா​ரம் மற்​றும் நோய்த்​தடுப்பு மருந்​துத் ​துறை இயக்​குநர் சோமசுந்​தரம், மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் சுகந்தி ராஜகு​மாரி, குடும்​பநலத்​ துறை இயக்​குநர் சத்யா மற்​றும் கூடு​தல் இயக்​குநர்​கள், செவிலியர்​கள் மற்​றும் செவிலியர் சங்க நிர்​வாகி​கள் உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர்.

அப்​போது, அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சி​யில் ஒப்​பந்த அடிப்​படை​யில் நியமிக்​கப்​பட்​ட​வர்​களில், அவர்​களது ஆட்​சி​யில், 1,600 பேர் மட்​டுமே பணி நிரந்​தரம் செய்​யப்​பட்​டனர்.

ஆனால், நான்​கரை ஆண்டு திமுக ஆட்​சி​யில் 5,825 பேர் பணி நிரந்​தரம் பெற்​றுள்​ளனர். மீத​முள்ள 5,932 பேர் பணி நிரந்​தரம் செய்ய வேண்​டி​யுள்​ளது. மீண்​டும் திமுக ஆட்​சிக்கு வரும். அப்​போது இவர்​கள் பணி நிரந்​தரம் செய்​யப்​படு​வார்​கள்.

தற்​போது பணி நியமன ஆணை​ வழங்​கப்​பட்டவர்கள், பொங்​கலுக்கு பின் கலந்​தாய்வு மூல​மாக அவர்​கள் பணி​யாற்​றும் இடங்​களை தேர்வு செய்​ய​லாம். இந்த விவ​காரத்​தில் இடைத்​தரகர்​களை யாரும் நம்ப வேண்​டாம். கடந்த 20 ஆண்​டு​களுக்கு மேலாக பணி​யாற்றி வரும் 1,325 பகுதி நேர மகப்​பேறுபணி​யாளர்​கள் மாதம், ரூ.1,500 மட்​டுமே சம்​பளம் பெறுகின்​றனர்.

அவர்​கள் தங்​களுக்​கு, ரூ.5,000 உயர்த்தி வழங்க வேண்​டும் என கோரிக்கை வைத்​துள்​ளனர். அவர்​கள் கோரிய தொகையை விட கூடு​தலாக அவர்​களுக்​கான ஊதிய உயர்வு வழங்​கப்​படும். வரும் 19-ம் தேதி அவர்​களிடத்​திலேயே அறிவிக்​கப்​படும். இந்த 4 ஆண்​டு​களில், 37,603 பணி​யிடங்​கள் நிரப்​பப்​பட்​டுள்​ளன. இதில், 17,000 புதிய பணி​யிடங்​களை உரு​வாக்​கி​யிருக்​கிறோம். இவ்​வாறு அமைச்சர்​ தெரி​வித்​தார்​.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

நாகூர் தர்காவுக்கு வரும் சுற்று சாலைகளை சீரமைத்து, ஹெலிபேட் அமைத்து தரவேண்டும் : தமிழக அரசுக்கு தர்கா பரம்பரை அறங்காவலர் கோரிக்கை

நாகூர் தர்காவுக்கு வரும் சுற்று சாலைகளை சீரமைத்து, ஹெலிபேட் அமைத்து தரவேண்டும் : தமிழக அரசுக்கு தர்கா பரம்பரை அறங்காவலர் கோரிக்கை

The hereditary trustee of Nagore Dargah requests the Tamil Nadu government to repair the approach roads leading to the dargah and to construct a helipad.

  • நாகூர் தர்காவிற்க்கு சொந்தமாக 4 ஏக்கர் இடம் கடற்கரை அருகே உள்ளது. அங்கு இந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதி அமைக்க கோரிக்கை
  • நாகூருக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இன்னும் புதிய சாலை வசதி செய்து தராத காரணத்தால் இந்த பேட்டரி கார் இன்னும் மக்கள் பயன்பாட்டு வரவில்லை

நாகூர், ஜன. 09

நாகூர் தர்காவிற்கு வரும் பக்தர்கள் வசதித்திக்காக சுற்றியுள்ள சாலைகளை சீரமைத்து தரவேண்டும் என்றும், தர்காவிற்கு சொந்தமான இடத்தில் ஹெலிபேட் அமைத்து தரவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தர்காவின் பரம்பரை அறங்காவலர் முஹல்லி முத்தவல்லி ஹாஜி S. செய்யது முஹம்மது கலீபா சாஹிப் காதிரி ஹாசிமி கோரிக்கை வைத்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்கா உலக புகழ்பெற்றது. உலகெங்குமிருந்து ஜாதி மத பேதமின்றி பல லட்சகணக்கான பக்தர்கள் நாகூர் தர்கா தினமும் வருகை புரிகின்றனர். நாகூர், தமிழக அரசின் சுற்றுலா துறையில் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது.

நாகூரில் ஹெலிகாப்டர் இறங்கும் தள வசதி இல்லை. தமிழக அரசு இதனை நாகூரில் அமைத்திட வேண்டும், நாகூர் தர்காவிற்க்கு சொந்தமாக 4 ஏக்கர் இடம் நாகூர் கடற்கரை அருகே உள்ளது. அங்கு இந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதி அமைத்தால் மிகவும் வசதியாக இருக்கும் ஆகவே தயவு கூர்ந்து அரசு அடுத்து அறிவிக்க கூடிய நல திட்டத்தில் இதனை செய்து தர வேண்டும்  என்றும் மேலும் சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் நாகூர் தர்காவிற்க்கு ஒரு பேட்டரி கார் நன்கொடையாக கொடுத்தது. அதனை நாகை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு விடும் விழாவில் கலந்து கொண்டார்.

இதையும் படியுங்கள் : அமைச்சர் கே.என்.நேரு மீது அமலாக்கத் துறை முறைகேடு புகார்; தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணை

நாகூருக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இன்னும் புதிய சாலை வசதி செய்து தராத காரணத்தால் இந்த பேட்டரி கார் இன்னும் மக்கள் பயன்பாட்டு வரவில்லை. மேலும் தற்போதைய சாலை போடும் டெண்டரில் தர்காவை சுற்றியுள்ள வீதிகளில் மட்டும் சாலை வசதி போடும் படியாக டெண்டர் விடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்கள் பயன்பாட்டிற்க்காக இந்த பேட்டரி கார்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நாகூர் தர்காவில் இருந்து செய்யது பள்ளி தெரு, பீரோடும் தெரு வழியாக கடற்கரை வரும் செல்லும் சாலைகளையும், நாகூர் தர்காவில் இருந்து மணவரா வடபுறம் தெரு வழியாக தெருப்பள்ளி தெரு வழியாக ரயில் நிலையம் செல்லும் சாலைகளையும், நாகூர் தர்கா கிழக்கு வாசலில் இருந்து கலீபா சாஹிப் தெரு, குளத்தடி தெரு வழியாக யுசுப் நைனா தெரு வழியாக ரயில் நிலையம் செல்லும் சாலைகளையும், நாகூர் தர்காவில் இருந்து கடைத்தெரு வழியாக புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலைகளையும் புதிதாக நல்ல விதத்தில் அமைத்தால் மட்டுமே இந்த பேட்டரி கார்களை இலகுவாக இயக்கி மக்கள் பயன்பாட்டிற்க்கு விட முடியும் என்றும் ஆகவே உடனடியாக மேற்கன்ட இடங்களில் சாலை வசதி அமைத்து தந்திடுமாறு நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலரும் பரம்பரை ஆதீனமுமாகிய முஹல்லி முத்தவல்லி ஹாஜி S. செய்யது முஹம்மது கலீபா சாஹிப் காதிரி ஹாசிமி தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

அமைச்சர் கே.என்.நேரு மீது அமலாக்கத் துறை முறைகேடு புகார்; தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணை

அமைச்சர் கே.என்.நேரு மீது அமலாக்கத் துறை முறைகேடு புகார்; தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணை

Minister K.N. Nehru faces corruption allegations from the Enforcement Directorate; Tamil Nadu Anti-Corruption Police are investigating

  • தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு அதிகாரிகள், ஊழியர்களை நியமித்ததில் ரூ.1,020 கோடி அளவுக்கு முறைகேடு

  • அமலாக்கத் துறை அனுப்பிய கடிதங்களின் அடிப்படையில், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல் துறையின் லஞ்ச ஒழிப்பு பிரிவில் அதிமுக எம்.பி. இன்பதுரை புகார்

சென்னை, ஜன. 09

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மீது அமலாக்கத் துறை அனுப்பிய முறைகேடு புகார் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு அதிகாரிகள், ஊழியர்களை நியமித்ததில் ரூ.1,020 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும், பணியின் தன்மையைப் பொருத்து ஒவ்வொருவரிடமும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சப் பணம் கைமாறியதாகவும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியது.

இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை அடுத்தடுத்து 2 புகார் கடிதங்களையும் அனுப்பியது. குறிப்பாக அமைச்சர் நேரு மற்றும் அவரது சகோதரர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினர். தன் மீதானகுற்றச்சாட்டுகளை மறுத்த அமைச்சர் நேரு, இதை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, அமலாக்கத் துறை அனுப்பிய கடிதங்களின் அடிப்படையில், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல் துறையின் லஞ்ச ஒழிப்பு பிரிவில் அதிமுக எம்.பி. இன்பதுரை புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், அமலாக்கத் துறை அனுப்பிய 2 புகார் கடிதங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து கேட்டபோது லஞ்ச ஒழிப்புத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: யார் புகார் கொடுத்தாலும் விசாரணை நடத்துவோம். அந்த வகையில், அமலாக்கத் துறையினர் அனுப்பிய 2 கடிதங்களும் எங்களுக்கு வந்தன. அதுதொடர்பாக தனிப்படை அமைத்து ஆரம்பகட்ட விசாரணையை தொடங்கிஉள்ளோம். புகாரில் முகாந்திரம் இருந்தால், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, வழக்கு பதிவு உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்​பிடம், பிரதமர் மோடி அடிபணிந்​து​விட்​டார்” -எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி க​டும் விமர்​சனம்

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்​பிடம், பிரதமர் மோடி அடிபணிந்​து​விட்​டார்” -எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி க​டும் விமர்​சனம்

“Prime Minister Modi has surrendered to US President Donald Trump,” – Opposition leader Rahul Gandhi criticizes sharply

  • பிரதமர் மோடிக்கு என் மீது மகிழ்ச்சி இல்​லை. இப்​போது ரஷ்​யா​விடம் எண்​ணெய் வாங்​கு​வதை குறைத்​துக் கொண்​டுள்​ளனர்

  • அமெரிக்​கா​வின் அழுத்​தத்​துக்கு அப்​போதைய பிரதமர் இந்​திரா காந்தி அடிபணி​ய​வில்​லை. இது​தான் இந்​திரா காந்​திக்​கும் பிரதமர் மோடிக்​கும் உள்ள வித்​தி​யாசம்​

புதுடெல்லி, ஜன. 7

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்​பிடம், பிரதமர் மோடி அடிபணிந்​து​விட்​டார்” என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி மீண்​டும் விமர்​சனம் செய்​துள்​ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த செவ்​வாய்க்​கிழமை சமூக வலை​தளத்​தில் ஒரு பதிவை வெளி​யிட்​டார். அதில், ‘சார்.. உங்​களை பார்க்​கலா​மா?’ என்று பிரதமர் மோடி என்​னிடம் தனிப்​பட்ட முறை​யில் தொடர்பு கொண்டு பேசி​னார். நானும் ‘யெஸ்’ என்​றேன். அப்​பாச்சி ரக ஹெலி​காப்​டர்​கள் விவ​காரம் தொடர்​பாக பேசினோம். பிரதமர் மோடி​யுடன் எனக்கு நல்ல நட்​புறவு உள்​ளது.
ஆனால், ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால் இந்​தியா மீது அமெரிக்கா 50% வரி விதித்​தேன். இதனால் பிரதமர் மோடிக்கு என் மீது மகிழ்ச்சி இல்​லை. இப்​போது ரஷ்​யா​விடம் எண்​ணெய் வாங்​கு​வதை குறைத்​துக் கொண்​டுள்​ளனர்” என்​றார்.

இதையும் படியுங்கள் : ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% இறக்குமதி வரி உயர்த்த மசோதா ; அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆதரவு

இதைச் சுட்​டிக் காட்​டி​யும் தான் பேசிய பழைய வீடியோ ஒன்றை வெளி​யிட்​டும் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​தியா – பாகிஸ்​தான் இடையே நடை​பெற்ற போரின்போது, ட்ரம்ப்​பிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்​தவுடன், பிரதமர் மோடி சரணடைந்துவிட்​டார்.

கடந்த 1971-ல் பாகிஸ்​தானுட​னான போரின் போது, தனது போர்க் கப்​பலை அனுப்பி இந்​தி​யாவை அமெரிக்கா மிரட்​டியது. எனினும் அமெரிக்​கா​வின் அழுத்​தத்​துக்கு அப்​போதைய பிரதமர் இந்​திரா காந்தி அடிபணி​ய​வில்​லை. இது​தான் இந்​திரா காந்​திக்​கும் பிரதமர் மோடிக்​கும் உள்ள வித்​தி​யாசம்​ என தெரி​வித்​துள்​ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% இறக்குமதி வரி உயர்த்த மசோதா ; அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆதரவு 

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% இறக்குமதி வரி உயர்த்த மசோதா ; அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆதரவு

Bill to raise import tax by 500% on countries buying crude oil from Russia; President Donald Trump supports it

  • கிரஹாம்-ப்ளூமென்தால் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அதிபர் டொனால்டு ட்ரம்ப் பச்சைக் கொடி

  • ரஷ்ய அதிபர் புதின் தொடர்ந்து அப்பாவி மக்களை கொல்வதால் இது சரியான நேரத்தில் எடுக்கப்ப்டட நடவடிக்கை

வாஷிங்டன், ஜன. 08

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான வரி 500% உயர்த்த மசோதா ; அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆதரவு : ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான வரியை 500% உயர்த்த வழிவகுக்கும் மசோதாவுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆதரவு அளித்திருப்பதாக குடியரசு கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, தான் அதிபரானால் உக்ரைன்-ரஷ்யா போரை 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டு வருவேன் என உறுதி அளித்தார் டொனால்டு ட்ரம்ப். ஆனால், இதுவரை போர் முடிவுக்கு வரவில்லை. ஏறக்குறைய நான்கு ஆண்டுகளாக போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ட்ரம்ப்பின் முயற்சிகள் முழு அளவில் பலன் தரவில்லை.
இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% இறக்குமதி வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. குடியரசு கட்சியின் செனட்டரும் ட்ரம்ப்பின் பாதுகாப்பு கொள்கைகளுக்கான ஆதரவாளருமான லிண்ட்சே கிரஹாம், ஜனநாயகக் கட்சியின் செனட்டர் ரிச்சர்ட் ப்ளூமென்தால் ஆகியோர் இணைந்து இதற்கான மசோதாவை தயாரித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் :  தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பிற்கு தமிழ்நாடு அரசு சான்றோர் சிறப்பு விருது

கிரஹாம்-ப்ளூமென்தால் மசோதா என்று அழைக்கப்படும் இந்த மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அதிபர் டொனால்டு ட்ரம்ப் பச்சைக் கொடி காட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை, லிண்ட்சே கிரஹாம் நேற்று (புதன்கிழமை) சந்தித்ததாகவும், அப்போது பல மாதங்களாக உருவாக்கப்பட்டு வரும் இந்த மசோதாவுக்கு அதிபர் தனது ஆதரவை தெரிவித்ததாகவும் கிரஹாம் கூறியதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டு வர உக்ரைன் பல சலுகைகளை வழங்கி வரும் நிலையிலும், ரஷ்ய அதிபர் புதின் தொடர்ந்து அப்பாவி மக்களை கொல்வதால் இது சரியான நேரத்தில் எடுக்கப்ப்டட நடவடிக்கையாக இருக்கும் என்று கிரஹாம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பிற்கு தமிழ்நாடு அரசு சான்றோர் சிறப்பு விருது

தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பிற்கு தமிழ்நாடு அரசு சான்றோர் சிறப்பு விருது

Tamil Nadu Government’s Special Award for Scholars presented to South Korea Tamil Research Association

  • இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் தமிழ் மொழிக்கு சேவையாற்றிய அறிஞர்களுக்கு சிறப்பு விருதுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தார்.

  • கொரிய தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் இந்த சேவையை பாராட்டி, அந்த அமைப்பின் துணைத் தலைவர் கவிஞர் சகாய டர்சியூஸ் பீ -க்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பாராட்டு

மதுரை, ஜன. 7

உலகம் முழுவதும் தமிழ் மொழிக்கு சேவையாற்றும் சான்றோர் பெருமக்களை கவுரவிக்கும் வகையில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் நடத்திய சான்றோர் பெருவிழாவில், தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்புக்கு (SKTRA) சிறப்பு விருதும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டன.

மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் கடந்த 5 மற்றும் 6-ந் தேதிகளில் நடைபெற்ற விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று, இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் தமிழ் மொழிக்கு சேவையாற்றிய அறிஞர்களுக்கு சிறப்பு விருதுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தார்.

இதில் கடந்த நவம்பர் மாதம் 8 -ந் தேதி, தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள செஜோங் பல்கலைக்கழகத்தில், கொரிய தமிழ் ஆராய்ச்சி அமைப்பு நடத்திய ‘கொரிய முதல் பன்னாட்டு திருக்குள் ஆய்வு மாநாட்டில், ‘திருக்குறளுக்கும், சமூக தொடர்புகளின் ஒப்பீடு’ குறித்து தென் கொரியா உள்பட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல்வேறு தலைப்பில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, பரிசளித்து கவுரவிக்கப்பட்டனர்.

கொரிய தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் இந்த சேவையை பாராட்டி, அந்த அமைப்பின் துணைத் தலைவர் கவிஞர் சகாய டர்சியூஸ் பீ -க்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார் .
நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சுகி.சிவம், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர்/இயக்குனர் முனைவர் இ.சா. பர்வீன் சுல்தானா மற்றும் தமிழறிஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு happy news: தமிழகத்தில் ஜன.8 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

 குடும்ப அட்டைதாரர்களுக்கு happy news:
தமிழகத்தில் ஜன.8 முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

Happy news for ration cardholders:
Pongal gift hamper distribution in Tamil Nadu from January 8th.


  • அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் ரொக்கப்பரிசாக ரூ.3000

  • நேற்று நியாயவிலைக் கடைபணியாளர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகித்தனர்

சென்னை, ஜன. 06

பொங்கல் பரிசுத் தொகுப்பு: ஜன.8 முதல் கடைகளில் விநியோகம்:

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3 ஆயிரம் ரொக்கம் வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் நேற்று தொடங்கியது.

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுத்தொகுப்பு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும், தமிழகத்தில் உள்ள 2 கோடியே 22 லட்சத்து 91,730 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவற்றுக்கு, ரூ. 248 கோடியே 66 லட்சத்து 17,959 நிதி ஒதுக்கி தமிழக அரசு கடந்த டிச.31-ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்நிலையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் ரொக்கப்பரிசாக ரூ.3000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். அந்த வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் ஆகியவை சேர்த்து ரூ.6,936 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 959 செலவில் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

வழக்கமாக பொங்கல் பரிசுத் தொகுப்பானது, நியாயவிலைக் கடைகளில் உள்ள குடும்ப அட்டைகள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, டோக்கன் அடிப்படையில் வழங்கப்படும். அதன்படி, இதற்கான டோக்கன் விநியோகம் நேற்று தொடங்கியது. நியாயவிலைக் கடைபணியாளர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகித்தனர். இதுதவிர, கடைகளுக்குப் பொருட்கள் வாங்க வருவோரிடமும் டோக்கன்கள் வழங்கினர். இப்பணிகளை நாளைக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை நாளை மறுநாள் (ஜன.8) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்று முதல் கடைகளில் பொதுமக்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறலாம்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

முழுநேர பிஎச்.டி மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை – தமிழக ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை 

முழுநேர பிஎச்.டி மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை – தமிழக ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை

A stipend of Rs. 1 lakh for full-time PhD students – Tamil Nadu Adi Dravidar and Tribal Welfare Department

  • ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்கள் 2 ஆயிரம் பேருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் – அரசு ஆணை

  • தமிழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்களாக இருக்க வேண்டும்.முதுகலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு வயது வரம்பு 50, மாணவிகளுக்கு 55 ஆக நிர்ணயம்

சென்னை, ஜன. 02

தமிழக ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: முழுநேர முனைவர் பட்டப் படிப்பு (பிஎச்.டி) படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்கள் 2 ஆயிரம் பேருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, நடப்பு (2025-26) கல்வி ஆண்டில் இந்த ஊக்கத்தொகை பெறுவதற்கும், ஏற்கெனவே ஊக்கத்தொகை பெறும் மாணவர்கள் அதை புதுப்பிக்கவும் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள் : உமர் காலித்துக்கு ஜாமீன் வழங்கப்பட, சர்வதேச சட்டத்தின்படி நியாயமான விசாரணை வேண்டும் – அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய தூதருக்கு கடிதம்

விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் முழுநேர பிஎச்.டி பயிலும் தமிழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்களாக இருக்க வேண்டும்.முதுகலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு வயது வரம்பு 50, மாணவிகளுக்கு 55 ஆகநிர்ணயம் செய்யப்பட் டுள்ளது.

இதற்கான விண்ணப்பத்தை adwphdscholarship.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பத்தை துறைத் தலைவர் மற்றும் பல்கலை. பதிவாளரின் பரிந்துரையுடன், ‘ஆணையர்,ஆதிதிராவிடர் நல ஆணையரகம், எழிலகம் (இணைப்பு), சேப்பாக்கம், சென்னை – 5’ என்ற முகவரிக்கு ஜன.31-க்குள் அனுப்ப வேண்டும்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்