Saturday, April 11, 2026
Google search engine
Homeஉலகம்பாகிஸ்தான் : போலீசார் வாகனம் மீது தற்கொலை தாக்குதல்-9 பேர் பலி

பாகிஸ்தான் : போலீசார் வாகனம் மீது தற்கொலை தாக்குதல்-9 பேர் பலி

 

  • குண்டு வெடித்ததில் போலீஸ் வாகனம் நொறுங்கியது. இந்த குண்டு வெடிப்பில் 9 போலீசார் பலியானார்கள். 15 போலீசார் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

  • பலுசிஸ்தானில் எரிவாயு மற்றும் கனிம வளங்களை சுரண்டுவதாக குற்றம் சாட்டி போராளிகள் குழு ஒன்று அரசாங்கத்துடன் சண்டையிட்டு வருகிறது

பாகிஸ்தான் , மார்ச் 06

தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் சிப்பி நகரில் இன்று போலீசார் ஒரு வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வாகனம் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர் போலீஸ் வாகனம் மீது மோதினார்.

இதில் குண்டு வெடித்ததில் போலீஸ் வாகனம் நொறுங்கியது. இந்த குண்டு வெடிப்பில் 9 போலீசார் பலியானார்கள். 15 போலீசார் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதையும் படியுங்கள் : ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடு : சீனா 2-வது இடம்

பாகிஸ்தானில் சமீப காலமாக தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மசூதி ஒன்றிலும் போலீஸ் தலைமை அலுவலகத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிட்டத்தக்கது.

பலுசிஸ்தானில் எரிவாயு மற்றும் கனிம வளங்களை சுரண்டுவதாக குற்றம் சாட்டி போராளிகள் குழு ஒன்று அரசாங்கத்துடன் சண்டையிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments