தென்கொரியாவில் முனைவர் பாலமுரளிகிருஷ்ணன் அறிவியல் சாதனை : சேஜோங் பல்கலைக்கழகம் பாராட்டு

தென்கொரியாவில் முனைவர் பாலமுரளிகிருஷ்ணன் அறிவியல் சாதனை : சேஜோங் பல்கலைக்கழகம் பாராட்டு

Scientific Achievement by Dr. Balamuralikrishnan in South Korea: Sejong University Honors Professor

  • தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் பாலமுரளிகிருஷ்ணன், சேஜோங் பல்கலைக்கழகத்தில் உயிரித் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆராய்ச்சித் துறைகளில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

  • தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் (SKTRA) தலைவர் பேராசிரியர் ஆரோக்கியராஜ், முனைவர் பாலமுரளிகிருஷ்ணன் மற்றும் முனைவர் K.P. நித்தியானந்தம் ஆகியோரின் சாதனைகளைப் பாராட்டி வாழ்த்து

சியோல், ஆக. 29

தென்கொரியாவில் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வரும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சேஜோங் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் பாலமுரளிகிருஷ்ணனுக்கு, அவரது சிறப்பான ஆராய்ச்சி மற்றும் கல்விப் பணியைப் பாராட்டி பல்கலைக்கழகம் சார்பில் பாராட்டு வழங்கப்பட்டது.

EMPIRE DESIGN SOLUTION
EMPIRE DESIGN SOLUTION

தென்கொரியாவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆட்டோமொபைல் பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.

சியோல் தேசியப் பல்கலைக்கழகம் (SNU), KAIST, சேஜோங் பல்கலைக்கழகம் (sejong University), Yonsei பல்கலைக்கழகம் உள்ளிட்ட முன்னணி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.

இதில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனைவர் பாலமுரளிகிருஷ்ணன், சேஜோங் பல்கலைக்கழகத்தில் உயிரித் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆராய்ச்சித் துறைகளில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

உயிரித் தொழில்நுட்பம், நுண்ணுயிரியல், விலங்கு தீவன அறிவியல் மற்றும் உணவு அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் இவர், சர்வதேச அறிவியல் இதழ்களில் 300-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

மேலும், Stanford University மற்றும் Elsevier இணைந்து வெளியிடும் உலகின் முன்னணி 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் 2022-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இடம்பெற்று வருகிறார். சர்வதேச அளவில் அவரது அறிவியல் ஆராய்ச்சிப் பங்களிப்புக்கு கிடைத்துள்ள முக்கிய அங்கீகாரமாக இது கருதப்படுகிறது.

முனைவர் பாலமுரளிகிருஷ்ணனின் சிறப்பான ஆராய்ச்சி மற்றும் கல்விப் பணியைப் பாராட்டும் வகையில், சேஜோங் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு பாராட்டு கேடயம், சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

இதே நிகழ்வில், சேஜோங் பல்கலைக்கழகத்தின் நானோடெக்னாலஜி மற்றும் மெட்டீரியல் இன்ஜினியரிங் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த K.P. நித்தியானந்தம் தனது முனைவர் பட்டத்தை வெற்றிகரமாக நிறைவு பெற்றார்.

அவரது கல்வி மற்றும் ஆராய்ச்சிச் சாதனையையும் பாராட்டி, தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் (SKTRA) தலைவர் பேராசிரியர் ஆரோக்கியராஜ், முனைவர் பாலமுரளிகிருஷ்ணன் மற்றும் முனைவர் K.P. நித்தியானந்தம் ஆகியோரின் சாதனைகளைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

சேஜோங் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் முனைவர் மணியழகன், முனைவர் நவீன்குமார், முனைவர் விக்னேஷ், முனைவர் சச்சின், முனைவர் காசிநாதன், பொறியாளர் நவீன் பழனிசாமி, முனைவர் ஆசைதம்பி, முனைவர் ஜெய்சிவா, முனைவர் சதீஸ், முனைவர் சத்யா, முனைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோரும், ஆராய்ச்சி மாணவர்கள் சாருமதி ஆரோக்கியராஜ், சுஜித், சுமிதா விக்னேஷ், தமிழ்செல்வி நவீன் உள்ளிட்டோரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் தமிழர்கள் கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சாதித்து வருவது, தமிழர்களின் அறிவியல் திறமை, கல்வி ஆர்வம் மற்றும் கடின உழைப்பை உலகிற்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள  https://puthiyaparimaanam.com/  மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.

Related Articles

Stay Connected

0FansLike
3,849FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles