‘ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை, நடத்தை விதிகளை உருவாக்க வேண்டும்’ –  திமுக எம்.பி.க்கள் குழு கூட்டத்தில் தீர்மானம்

ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை, நடத்தை விதிகளை உருவாக்க வேண்டும்’ –  திமுக எம்.பி.க்கள் குழு கூட்டத்தில் தீர்மானம்

‘Until the Governor is removed, a code of conduct should be formulated’ – Resolution passed at DMK MPs’ group meeting

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன

  • ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு புதிய ரயில் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை, ஜன. 29

ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை, நடத்தை விதிகளை உருவாக்க வேண்டும்’ –  திமுக எம்.பி.க்கள் குழு கூட்டத்தில் தீர்மானம்: திமுக எம்.பிக்கள் ஆலோசனைம் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. மாநில அரசின் கோப்புகள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திட கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2025-26 நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை எம்.பிக்களுக்கு வழங்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். தமிழக நிதி விவகாரம் பற்றி விவாதங்களை எழுப்புவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு, 3வது முறையாக ஆட்சிக்கு வந்தபிறகு தற்போது, முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது.

இதையும் படியுங்கள் : வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது இஸ்ரோவின் 100-வது ராக்கெட் 

பிப்ரவரி 1 ஆம் தேதி 2025-26 மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக, ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரையும், 2 ஆம் கட்டமாக மார்ச் 2வது வாரம் முதல், ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை, நடத்தை விதிகளை உருவாக்க வேண்டும் என திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், மாநில அரசின் கோப்புகள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திட கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், யுஜிசியின் வரைவு விதிகளை திரும்பப் பெற நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும். இரும்பு 5,870 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலத்தில் அறிமுகமாகி உள்ளது. அதன் ஆய்வுகளை ஒன்றிய அரசும், பிரதமரும் முன்னெடுக்க வேண்டும். ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு புதிய ரயில் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.

Related Articles

Stay Connected

0FansLike
3,849FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles