‘விக்சித் பாரத் – ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம்’ (VB-G RAM G) திட்டம் : நாடு முழுவதும் இன்று முதல் அமல்

‘விக்சித் பாரத் – ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம்’ (VB-G RAM G) திட்டம் : நாடு முழுவதும் இன்று முதல் அமல்

‘Viksit Bharat – Rural Employment and Livelihood Guarantee Mission’ (VB-G RAM G) Scheme: Implemented Nationwide Starting Today

  • கிராமப்புறக் குடும்பங்கள் 100 நாட்கள் அல்ல 125 நாட்கள் வேலைவாய்ப்புக்கான உரிமையைப் பெறுவார்கள்.

  • வளம் மிக்க, அதிகாரமளிக்கப்பட்ட, சுயசார்பு கொண்ட கிராமங்களை உருவாக்குவதில் நாம் அனைவரும் பங்கேற்பாளர்களாக இணைவோம்”

புதுடெல்லி, ஜூலை.01

கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பை வழங்கும் கிராமப்புற மக்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதத் திட்டம் இன்று அமலுக்கு வந்துள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இந்திய கிராமப்புறங்களில் ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு (MGNREGA), மாற்றாக, ‘விக்சித் பாரத் – ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம்’ (VB-G RAM G) எனும் திட்டத்தை மத்திய அரசு சட்டமாக இயற்றி உள்ளது. இந்த திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இன்றைய நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நாள். முன்னெப்போதும் இல்லாத ஒரு நாள். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் விபி ஜி ராம் ஜி திட்டம் இன்று நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இது வெறும் ஒரு சட்டம் மட்டுமல்ல. லட்சக்கணக்கான கிராமப்புற தொழிலாளர் சகோதர – சகோதரிகளின் கண்ணியம், சுயமரியாதை, பாதுகாப்பான வாழ்வாதாரம் ஆகியவற்றை அளிப்பதில் ஒரு புதிய அத்தியாயமாகும். இனி, கிராமப்புறக் குடும்பங்கள் 100 நாட்கள் அல்ல 125 நாட்கள் வேலைவாய்ப்புக்கான உரிமையைப் பெறுவார்கள்.

இத்திட்டம் கிராமங்களில் புதிய வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும், நிலையான சொத்துக்களை உருவாக்குவதை விரைவுபடுத்தும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும், சுயசார்பு கிராமப்புற இந்தியாவை உருவாக்குவதற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. வளம் மிக்க, அதிகாரமளிக்கப்பட்ட, சுயசார்பு கொண்ட கிராமங்களை உருவாக்குவதில் நாம் அனைவரும் பங்கேற்பாளர்களாக இணைவோம்” என மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்  தெரிவித்துள்ளார்.

சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள  https://puthiyaparimaanam.com/  மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.

Related Articles

Stay Connected

0FansLike
3,849FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles