தமிழக அரசு சார்பில் இதழியல் கல்வி நிறுவனம் ; முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Chief Minister MK Stalin inaugurated the Journalism Education Institute in Chennai
- ஓராண்டு இதழியல் கல்வி முடிக்கும் நபர்கள் அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றில் பணி
- தமிழகத்தில் மேலும் திறமையான பத்திரிக்கையாளர்களை உருவாக்கும் வகையில் இதழியல் கல்வி நிறுவனமும் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை, ஆக. 25
கோட்டூர்புரத்தில் தமிழக அரசு சார்பில் இதழியல் கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வி நிறுவனத்தை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 25) தொடங்கி வைத்தார். இந்த கல்வி நிறுவனத்தில் டிஜிட்டல் மீடியா காட்சி தொடர்புகள் திறன் உள்ளிட்ட படிப்புகள் கற்றுத்தரப்பட உள்ளது. இதில், சேர்வதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் மேலும் திறமையான பத்திரிக்கையாளர்களை உருவாக்கும் வகையில் இதழியல் கல்வி நிறுவனமும் தொடங்கப்பட்டுள்ளது.
இதில், ஓராண்டு இதழியல் கல்வி முடிக்கும் நபர்கள் அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றில் பணி கிடைக்கும். இதே போல பி. ஐ. பி. மத்திய அரசு துறைகளில் வேலை கிடைக்கும். தனியார் கல்வி நிறுவனங்களில் அதிக அளவு கட்டணம் செலுத்தி படிக்கும் மாணவர்கள், இதழ்கள் கல்வி நிறுவனத்தில் குறைந்த அளவில் கட்டணம் செலுத்தி படிக்கலாம்.இவர்களுக்கு மூத்த பத்திரிகையாளர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இதில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு முதலாம் ஆண்டு மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் ஏழ்மை சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 40 பேர் பயின்று வருகின்றனர். இதைப்போல ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தற்போது, ஊடகத்துறை வளர்ந்து வரும் துறையாக உள்ளது. இதில், இதழ்கள் தொடர்பான படிப்பு முடித்ததற்கான சான்றிதழ் இருந்தால் தான் பி. ஐ. பி., தூர்தர்ஷன், சென்னை வானொலி மையம் ஆகியவற்றில் வேலை வாய்ப்பு கிடைக்கும். இதே போல, மெட்ராஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் இவை தொடர்பான படிப்பு இருந்தாலும், ஓராண்டு இதழியல் படிப்பு கற்றுத் தரும் நிறுவனம் சென்னையில் தற்போது தான் முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களிலும் இதழியல் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வில் முதலாம் ஆண்டு சேர்க்கையில் பங்கேற்று உள்ள ஆண் நபர் ஒருவர் கூறுகையில், மக்கள் பணியிலும், கழகப் பணியிலும் ஆர்வமாக இருக்க வேண்டும் என்று முதல் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அப்போது, இருந்த ஆர்வம் தான் என்னை ஒரு முழு பத்திரிக்கையாளராக மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இதழியல் கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகிறேன் என்று தெரிவித்தார்.தென்காசி மாவட்டம், கீழக்கலங்களைச் சேர்ந்த மாணவி ஒருவர் பேசுகையில், நான் திமுகவின் இளம் பேச்சாளராக இருந்து வருகிறேன். ஒவ்வொரு பொதுக்கூட்டங்களில் பேசும் போது எனக்கு ஆர்வம் தோன்றியது. ஒவ்வொரு புத்தகங்களையும் வாசிக்கும் போதும் அதில் இவ்வளவு தகவல்களை உள்ளதா என்று ஆர்வம் என்னை ஆட்கொண்டது. இதில், என்னுடைய பங்கு இருக்க வேண்டும் என்பதற்காக இதழியல் துறையை தேர்ந்தெடுத்துள்ளேன். தனியார் நிறுவனங்களில் ஒரு செமஸ்டர் தேர்வுக்கு ரூ. 40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இதழியல் கல்வி நிறுவனத்தில் ரூ.10 ஆயிரத்தில் கல்வி பெற்று விடலாம் என்று தெரிவித்தார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்