Home Blog Page 110

சென்னை மாநகர பேருந்து ஏறி இறங்கியதில் துடிதுடித்து பலியான இளம் பெண்

 

  • அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதி சாலையில் விழுந்த இளம் பெண்

  • பின்னால் வந்த மாநகர பேருந்து மோதி உடல் நசுங்கினார் ப்ரியங்கா

சென்னை, பிப். 11

சென்னையில் அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி ஐடி ஊழியர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை அருகே வரும் போது திடீரென விபத்து ஏற்பட்டு அவர் உயிரிழந்தார்.

சென்னையில் மாநகர பேருந்தை முந்தி செல்ல முயன்ற போது எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம் உரசியதன் காரணமாக பின்னால் அமர்ந்து சென்ற பெண் நிலைதடுமாறி கீழே விழுந்தார். பின்னால் வந்த மாநகர பேருந்து பிரியங்கா மீது ஏறி இறங்கியதில் அந்த இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை ஆயிரம் விளக்கு அஜிஸ் முல்லக் தெருவில் வசித்து வந்தவர் பிரியங்கா. இவருக்கு வயது 22. பிரியங்கா சென்னை கிண்டியில் உள்ள ஐடி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பிரியங்கா தனது அண்ணன் ரிஷிநாதன்(23) உடன் பைக்கில் ராயப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அவர்களது இருசக்கர வாகனம் சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை அருகே வரும் போது, முன் சென்ற மாநகர பேருந்தை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர் திசையில் அடையாளம் தெரியாத மற்றோரு இருசக்கர வாகனம் வேகமாக வந்து உரசியபடி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் வாகனம் நிலைதடுமாறியது.

இதில் பின்னால் அமர்ந்து சென்ற பிரியங்கா நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது திடீரென வந்த மாநகர பேருந்து பிரியங்கா மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் பிரியங்கா படுகாயம் அடைந்து துடிதுடித்தார்.

இதையும் படியுங்கள் : ஈரோடு இடைத்தேர்தல் : 816 புதிய வாக்காளர்கள்; இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்

அதேநேரம் அதிர்ஷ்டவசமாக பிரியங்காவின் அண்ணன் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விரைந்து வந்தனர்.

அதேநேரம் படுகாயமடைந்த பிரியங்காவை காப்பாற்ற ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிரியங்காவை போலீசார் மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரியங்கா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவ்விபத்தை ஏற்படுத்த பதிவு எண் இல்லாமல் வந்த இருசக்கர வாகனம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த மோசமான விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற இருசக்கர வாகனத்தை தேடி வருகின்றனர். சென்னையில் அரசுப்பேருந்தின் சக்கரத்தில் சிக்கி ஐடி ஊழியர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒருவரின் அவசரமான மற்றும் அலட்சியமான வேகம் மற்றொருவரின் உயிரையே பறித்துள்ளது. சாலையில் செல்வோர் கவனமாகவும் பொறுமையாக செல்வது அவர்களுக்கு மட்டுமல்ல அந்த சாலையில் செல்வோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

 

 

 

ஈரோடு இடைத்தேர்தல் : 816 புதிய வாக்காளர்கள்; இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்

 

  • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்துவது ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. இந்த நிலையில் அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. இறந்ததால் அங்கு இடைத்தேர்தல் 

  • 375 ஆண் வாக்காளர்கள், 439 பெண் வாக்காளர்கள், 2 மூன்றாம் பாலினத்தவர் என 816 பெயர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு

சென்னை, பிப். 11

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்கள்; 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்கள்; 23 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் இருந்தனர்.

மேலும் வழக்கம்போல தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்துவது ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. இந்த நிலையில் அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. இறந்ததால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : வந்தே பாரத் ரெயில் மீது மர்ம நபர்கள் கல் வீச்சு ; உடைந்தன ஜன்னல் கண்ணாடிகள்

எனவே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் இருந்து இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் வரையில் வரப்பெற்ற விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் இருந்து 145 பெயர்கள் நீக்கப்பட்டன.

இடைத்தேர்தல் நடப்பதால் அந்தத் தொகுதியில் 7-ந்தேதிவரை (வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள்) வாக்காளர் பெயர்களை சேர்க்க முடியும். அந்த வகையில் 375 ஆண் வாக்காளர்கள், 439 பெண் வாக்காளர்கள், 2 மூன்றாம் பாலினத்தவர் என 816 பெயர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் தற்போதுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியின் துணை வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. அதன்படி அங்கு 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண் வாக்காளர்கள்; 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண் வாக்காளர்கள்; 25 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் இடம்பெற்று உள்ளனர்.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

 

வந்தே பாரத் ரெயில் மீது மர்ம நபர்கள் கல் வீச்சு ; உடைந்தது ஜன்னல் கண்ணாடிகள்

 

  • தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மத்திய அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரெயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தால் தெலுங்கானாவில் பரபரப்பு

  • தாக்குதலில் சி-4 பெட்டியில் 34 மற்றும் 35 சீட் அருகே இருந்த ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது. இதே போல் சி-8 பெட்டியில் 40,41,42 ஆகிய இருக்கை ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்தது

 

திருப்பதி, பிப். 11

நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து வருகிறார். இந்த ரெயில் குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் மட்டும் நின்று செல்லக்கூடியது. அதிவேகமாக செல்லும் இந்த ரெயிலில் பயணிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குறித்த நேரத்திற்கு செல்ல முடியும்.

இந்த நிலையில் நேற்று செகந்திராபாத்திலிருந்து விசாகப்பட்டினம் நோக்கி வந்தே பாரத் ரெயில் சென்று கொண்டிருந்தது. குன்றத்திமடுகு என்ற இடத்தில் செல்லும்போது மாலை 5-40 மணி அளவில் சூர்யா தியேட்டர் அருகே மூடப்பட்ட ரெயில்வே கேட் அருகே மறைந்திருந்த மர்ம நபர்கள் வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசி தாக்கினர்.

இந்த தாக்குதலில் சி-4 பெட்டியில் 34 மற்றும் 35 சீட் அருகே இருந்த ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது. இதே போல் சி-8 பெட்டியில் 40,41,42 ஆகிய இருக்கை ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கியது.

இதில் பயணிகள் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை. இருப்பினும் ரெயில் நிற்காமல் கம்மம் நோக்கி சென்றது. இது குறித்து ரெயில் என்ஜின் டிரைவர் காசி பேட்டை ரெயில் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் காசி பேட்டை உதவி பாதுகாப்பு ஆணையர் சீனிவாஸ் தலைமையில் வாரங்கல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரெயில் மீது கல்வீசி தாக்கியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மத்திய அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரெயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

இந்திய சந்தையில் ரியல்மி 10 ப்ரோ கோகோ கோலா லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஸ்மார்ட்போனில் பிரத்யேக கோகோ-கோலா யுஐ, ஐகான் பேக், டைனமிக் சார்ஜிங் எஃபெக்ட், ரிங்டோன், கோக் பபிள் நோட்டிஃபிகேஷன் டோன், கோகோ கோலா கேமரா ஃபில்ட்டர், பாட்டில் ஓபனிங் ஷட்டர் சவுண்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

மும்பை, பிப் 10

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் ரியல்மி 10 ப்ரோ கோகோ கோலா லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.

வலைதள முன்பதிவில் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக ரியல்மி அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மேட் இமிடேஷன் மெட்டல் பிராசஸ் செய்யப்பட்ட கோகோ கோலா லோகோ, கேமராவை சுற்றி சிவப்பு நிற வளையங்கள் உள்ளன.

இந்த ஸ்மார்ட்போனில் பிரத்யேக கோகோ-கோலா யுஐ, ஐகான் பேக், டைனமிக் சார்ஜிங் எஃபெக்ட், ரிங்டோன், கோக் பபிள் நோட்டிஃபிகேஷன் டோன், கோகோ கோலா கேமரா ஃபில்ட்டர், பாட்டில் ஓபனிங் ஷட்டர் சவுண்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் டீலக்ஸ் பாக்ஸ் செட் மற்றும் லிமிடெட் நம்பர் கார்டு, டிஐவை ஸ்டிக்கர்கள், பாட்டில் மூடி வடிவம் கொண்ட பிரத்யேக சிம் கார்டு பின், ரியல்மியோவ் கோகோ கோலா வடிவம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்மத்திய பட்ஜெட்: மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

6.72 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+LCD ஸ்கிரீன், 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட் ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் மாலி G68 MC4 GPU 8 ஜிபி LPDDR4X ரேம் 128 ஜிபி UFS 2.2 மெமரி மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி ஹைப்ரிட் டூயல் சிம் ஆண்ட்ராய்டு 13 மற்றும் ரியல்மி யுஐ 4.0 108MP பிரைமரி கேமரா 2MP போர்டிரெயிட் கேமரா 16MP செல்ஃபி கேமரா பக்கவாட்டில் கைரேகை சென்சார் 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2 யுஎஸ்பி டைப் சி 5000 எம்ஏஹெச் பேட்டரி 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ரியல்மி 10 ப்ரோ கோகோ கோலா எடிஷன் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இது ஸ்டாண்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போனை விட ரூ. 1000 விலை அதிகம் ஆகும். விற்பனை ரியல்மி, ப்ளிப்கார்ட் ஆன்லைன் வலைதளங்களிலும், ஆஃப்லைன் ஸ்டோர்களில் பிப்ரவரி 14 ஆம் தேதி துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆயிரம் யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

 

 

 

மத்திய பட்ஜெட்: மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

 

  • 7 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் உள்ளவர்களுக்கு எந்த விதமான வரியும் இல்லை.

  • மூத்த குடிமக்களுக்கான சிறுசேமிப்பு திட்டத்திற்கான வைப்பு நிதி 15 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக உயர்வு 

புது டெல்லி, பிப் 10

பாராளுமன்றத்தின் மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை சமரசம் செய்யாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் நலன் கவனத்தில் வைக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க மூலதன செலவின நிதி அதிகரிப்பு. பெண்களுக்கு 7.5% வட்டியில் புதிய சேமிப்பு திட்டம் அறிமுகம்.

இதையும் படியுங்கள்இந்தியாவில் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு தடை – உச்சநீதி மன்றம் மறுப்பு

மத்திய பட்ஜெட்டில் முதலீட்டு செலவீனங்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 2013-14 காலகட்டத்தில் 2.91 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.

நடுத்தர வர்க்கத்தை பொறுத்தவரை புதிய வரி முறை அதிகம் கவரக்கூடியதாக உள்ளது. 7 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் உள்ளவர்களுக்கு எந்த விதமான வரியும் இல்லை.

மூத்த குடிமக்களுக்கான சிறுசேமிப்பு திட்டத்திற்கான வைப்பு நிதி 15 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கான நிதி 66 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வரிவிதிப்பு முறை மிகவும் கவர்ச்சிகரமானது.

இவ்வாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

 

 

 

இந்தியாவில் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு தடை – உச்சநீதி மன்றம் மறுப்பு

  • குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப்படம் எடுத்தது இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி
  • இந்தியா: மோடி கேள்விகள் என்ற இந்த பிபிசியின் ஆவணப்படம் இந்தியாவில் சமூகவலைதளங்கள் மூலம் பகிர்வதை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு 

டெல்லி பிப் 10

குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மதக்கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த கலவரம் நடைபெற்றபோது குஜராத்தின் முதலமைச்சராக நரேந்திரமோடி செயல்பட்டு வந்தார். அதன் பின்னர் நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமரானார். இதனிடையே, குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது.

இந்தியா: மோடி கேள்விகள் என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய முதலமைச்சரும் இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், பிபிசி ஆவணப்படத்தின் 2-ம் பகுதியில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து ரத்து, டெல்லி வன்முறை, குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளது.

இந்த ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும், காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாகவும் பிபிசி ஆவணப்படத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

தொடர்ந்து இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடவும் மத்திய அரசு கடந்த மாதம் 21-ம் தேதி தடை விதித்தது. இங்கிலாந்து உள்பட பல்வேறு வெளிநாடுகளில் பிபிசி இந்த ஆவணப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் இந்தியாவில் தடையை மீறி பல அமைப்புகள் இந்த ஆவணப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர்-ரோகித் சர்மா சாதனை

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி அம்பேத்கார் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழங்களில் தடையை மீறி பிரதமர் மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம் வெளியிடப்பட்டது.

தடையை மீறி பல்கலைக்கழங்களில் ஒளிபரப்பப்படும் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிடுவதில் இருந்து தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும், இந்தியா: மோடி கேள்விகள் என்ற இந்த பிபிசியின் ஆவணப்படம் இந்தியாவில் சமூகவலைதளங்கள் மூலம் பகிர்வதை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்து ஆவணப்படம் எடுத்த இங்கிலாந்தின் பிபிசி செய்தி நிறுவனம் இந்தியாவில் செயல்பட தடை செய்ய வேண்டுமெனவும், இந்த ஆவணப்படத்திற்கு பின்னால் சதி உள்ளதா? என கண்டறிய என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென இந்து சேனா என்ற அமைப்பின் தலைவர் விஷ்ணு உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதி மன்றம், இந்தியாவில் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு தடை விதிக்கவேண்டுமென தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. ஒரு ஆவணப்படம் நாட்டை எப்படி பாதிக்கும்? என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதி மன்றம், மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்துவைத்தது.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

 

 

மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர்-ரோகித் சர்மா சாதனை

  • . சீரான இடைவெளியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து வந்தது. ஒருமுனையில் நங்கூரம் போல் நின்று சதம் அடித்த கேப்டன்

  • மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் கேப்டனாக சதம் அடித்த வீரர்கள் பட்டியல் 1. தில்சன் (இலங்கை) 2. ஃபாஃப் டு பிளெசிஸ் (தென் ஆப்பிரிக்கா) 3. பாபர் அசாம் (பாகிஸ்தான்) 4. ரோகித் சர்மா (இந்தியா).

நாக்பூர் , பிப் 10

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 5 விக்கெட் ,அஸ்வின் 3 விக்கெட் வீழ்த்தினார்.

அதையடுத்து முதல் இன்னிங்சில் இந்திய அணி விளையாடியது. முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

இதையும் படியுங்கள்சாகுந்தலம் சரித்திர கதையில் நடிகை சமந்தா- ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியீடு

அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா அரை சதம் கடந்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டநேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் சேர்த்திருந்தது. ரோகித் 56 ரன்களுடனும், அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சீரான இடைவெளியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து வந்தது. ஒருமுனையில் நங்கூரம் போல் நின்ற கேப்டன் சதம் அடித்து அசத்தினார்.

இதன் மூலம் கேப்டனாக விராட் கோலி, டோனியால் செய்ய முடியாத சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா நிகழ்த்தியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக 4 வீரராக ரோகித் உள்ளார். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் கேப்டனாக சதம் அடித்த வீரர்கள் பட்டியல் 1. தில்சன் (இலங்கை) 2. ஃபாஃப் டு பிளெசிஸ் (தென் ஆப்பிரிக்கா) 3. பாபர் அசாம் (பாகிஸ்தான்) 4. ரோகித் சர்மா (இந்தியா).

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

 

 

 

சாகுந்தலம் சரித்திர கதையில் நடிகை சமந்தா- ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியீடு

0
  • சாகுந்தலம்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீடு

சென்னை, பிப்.10

நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்தமிழ் சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்றியது கருணாநிதியின் பேனா-முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் சமீபத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘சாகுந்தலம்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்

தமிழ் சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்றியது கருணாநிதியின் பேனா-முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • வாரிசு அரசியல் என்ற அவப்பெயர் வரும் என இளைஞரணி பொறுப்பு எனக்கு தர தயங்கினார் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

  • கருணாநிதியின் பேனா எப்போதெல்லாம் குனிந்ததோ அப்போதெல்லாம் தமிழகம் தலை நிமிர்ந்தது.

சென்னை, பிப்.10

தமிழ் சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்றியது கருணாநிதியின் பேனா என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், “மதுரையில் திமுக துணை அமைப்பாக இளைஞரணியை உருவாக்கினார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அதன் பிறகு திருச்சியில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடல் கூட்டத்தில் இளைஞரணிக்கு தலைவராக என்னை நியமிக்க வேண்டும் என அனைவரும் பேசினார்கள்.

இதையும் படியுங்கள்ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு- மத்திய அரசு

வாரிசு அரசியல் என்ற அவப்பெயர் வரும் என இளைஞரணி பொறுப்பு எனக்கு தர தயங்கினார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. மேலும் இளைஞர் அணிக்கு ஒரு அமைப்பு குழுவை உருவாக்கினார். இதன்பிறகு திமுக இளைஞரணி அமைப்பாளராக நியமனமாகி படிப்படியாக உயர் பதவிக்கு வந்தேன்.

கருணாநிதியின் பேனா எப்போதெல்லாம் குனிந்ததோ அப்போதெல்லாம் தமிழகம் தலை நிமிர்ந்தது. கருணாநிதியின் பேனா பல முன்னோடி திட்டங்களை தமிழகத்திற்கு கொடுத்துள்ளது. வள்ளுவர் கோட்டத்தை உருவாக்க பாடுபட்ட பேனா தான் கருணாநிதி பேனா. டைடல் பார்க உருவாக்க கையெழுத்து இட்ட பேனா கருணாநிதி பேனா.

குடிசைகளை மாற்றி அடுக்குமாடி குடியிருப்புகளாக கட்ட உத்தரவிட்ட பேனா தான் கருணாநிதி பேனா. லட்சக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்க காரணமாக இருந்தது பேனா தான் கருணாநிதி பேனா. தமிழ் சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்றியது கருணாநிதியின் பேனா.” இவ்வாறு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்  பேசினார்.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

 

ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு- மத்திய அரசு 

  • லித்தியம் தான் மின்சார வாகனங்களுக்குத் தேவைப்படும் பேட்டரிக்களுக்கு முக்கிய தேவை

  • ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது மத்திய அரசு 

காஷ்மீர், பிப்.10

கார்பன் உமிழ்வைக் குறைக்க உலகின் அனைத்து நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரி தயாரிக்கத் தேவையான முக்கிய தாதுவான லித்தியம் நாட்டிலேயே முதல்முறையாகக் காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

பூமி இப்போது பருவநிலை மாற்றம் தொடங்கி பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. புவி வெப்ப மயமாதலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதனால் பெட்ரோல் வாகன பயன்பாட்டைக் குறைத்து… மின்சார வாகனங்களை நோக்கிச் செல்ல அனைத்து நாடுகளும் ஊக்குவித்து வருகிறது. மின்சார வாகனங்களுக்கு மிக மிக முக்கியமானது என்றால் அது பேட்டரிக்கள் தான்.

இப்போது உருவாக்கப்படும் பேட்டரிக்கள் பெரும்பாலும் லித்தியன் ஐயான் பேட்டரிக்களாகவே உள்ளன. இதற்கிடையே நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த லித்தியம் தான் மின்சார வாகனங்களுக்குத் தேவைப்படும் பேட்டரிக்களுக்கு முக்கிய தேவையாகும். காற்று மாசை குறைக்க மின்சார வாகனங்களை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இப்போது பேட்டரிக்களுக்கு தேவையான முக்கிய தாது உள்நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தின் சலால்-ஹைமானா பகுதியில் 5.9 மில்லியன் டன்கள் கொண்ட லித்தியம் வளங்களை இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளதாகச் சுரங்க துறை தெரிவித்துள்ளது. இந்தியா முழுக்க பல மாநிலங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. நாட்டில் மொத்தம் 51 கனிம தொகுதிகளில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. இவை அனைத்தும் இப்போது சம்மந்தப்பட்ட மாநில அரசிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த 51 கனிமத் தொகுதிகளில், 5 தொகுதிகள் தங்கமும் மற்ற தொகுதிகளில் பொட்டாஷ், மாலிப்டினம் உள்ளிட்ட தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை ஜம்மு மற்றும் காஷ்மீர் (UT), ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய 11 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளன. இவை தவிர, 7897 மில்லியன் டன் நிலக்கரி மற்றும் லிக்னைட் பற்றிய 17 அறிக்கைகளும் நிலக்கரி அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இதையும் படியுங்கள் : அதானி நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. முறைகேடா ? – கலால் வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

இப்படிப் பல கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட இதில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் லித்தியம் கண்டறியப்படுவது இதுவே முதல்முறையாகும். வரும் காலங்களில் லித்தியம் பேட்டரி பயன்பாடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த பேட்டரிக்களையும் இந்தியாவிலேயே தயாரிக்க முடியும். இதனால் பேட்டரி வாகனங்களில் விலையும் கூட கணிசமாகக் குறையும்.

ரயில்வே-க்கு தேவையான நிலக்கரி டெபாசிட்களை கண்டுபிடிக்க 1851இல் இந்தியப் புவியியல் ஆய்வு மையம் (ஜிஎஸ்ஐ) அமைக்கப்பட்டது. அதன் பிறகு நிலக்கரி தவிரப் பல முக்கிய தாதுகளையும் கண்டறியத் தொடங்கியது. சர்வதேச அளவிலும் புவி-அறிவியல் துறையில் இது முக்கியமான ஒரு இடத்தை பெற்றுள்ளது. இதன் முக்கிய பணி தேசிய புவி அறிவியல் தகவல் மற்றும் கனிம வள மதிப்பீட்டை உருவாக்குவதே ஆகும்.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்