தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்​வர் விஜய் தொடங்கி வைத்தார்

 தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்​வர் விஜய் தொடங்கி வைத்தார்

Polio vaccination camp across Tamil Nadu: Chief Minister Vijay inaugurated the drive in Chennai.

  • இந்​தி​யா​வில் போலியோவை (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்​ப​தற்​காக ஆண்​டு​தோறும் 5 வயதுக்கு உட்​பட்ட குழந்​தைகளுக்கு 2 தவணை​களில் போலியோ சொட்டு மருந்து விநியோகம்

  • தமிழகத்​தி​லுள்ள அரசு மருத்​து​வ​மனை​கள், அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள், அங்​கன்​வாடி மையங்​கள், சத்​துணவு மையங்​கள், பள்​ளி​கள் மற்​றும் முக்​கிய இடங்​கள் என மொத்​தம் 43,051 மையங்​களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள்

சென்னை, ஜூன். 28

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்​வர் விஜய் தொடங்கி வைத்தார். தமிழகத்​தில் இன்று நடை​பெற்று வரும் போலியோ சொட்டு மருந்து முகாமை சென்னை பால​வாக்​கத்​தில் முதல்​வர் விஜய் தொடங்கி வைத்தார்.  தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இன்று (28.6.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, பாலவாக்கம், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். மேலும், குழந்தைகளுக்கு பொம்மைகளையும் முதல்வர் பரிசளித்தார்.
இந்நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், சட்டப்பேரவை உறுப்பினர் பி.சரவணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு செயலாளர் தாரேஸ் அகமது, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அனீஷ் சேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இந்​தி​யா​வில் போலியோவை (இளம்பிள்ளை வாதம்) ஒழிப்​ப​தற்​காக ஆண்​டு​தோறும் 5 வயதுக்கு உட்​பட்ட குழந்​தைகளுக்கு 2 தவணை​களில் போலியோ சொட்டு மருந்து வழங்​கப்​பட்டு வந்​தது. போலியோ ஒழிக்​கப்​பட்ட நாடு​களின் பட்​டியலில் இந்​தி​யா​வும் சேர்ந்​துள்​ளது. அதனால், தற்​போது ஆண்​டுக்கு ஒரு​முறை மட்​டும் போலியோ சொட்டு மருந்து வழங்​கப்​படு​கிறது.
அதன்​படி, இந்த ஆண்​டுக்​கான போலியோ சொட்டு மருந்து வழங்​கும் முகாம் நாடு​ முழு​வதும் இன்று நடை​பெறுகிறது. தமிழகம் முழு​வதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடை​பெறவுள்ள இந்த முகாமில் 5 வயதுக்கு உட்​பட்ட 52.91 லட்​சம் குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தி​லுள்ள அரசு மருத்​து​வ​மனை​கள், அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யங்​கள், அங்​கன்​வாடி மையங்​கள், சத்​துணவு மையங்​கள், பள்​ளி​கள் மற்​றும் முக்​கிய இடங்​கள் என மொத்​தம் 43,051 மையங்​களில் நடை​பெறும் முகாம்​களில் போலியோ சொட்டு மருந்து வழங்​கப்​பட்டு வருகிறது.
நடமாடும் குழுக்​கள் ஏற்பாடு: பேருந்து நிலை​யங்​கள், ரயில் நிலை​யங்​கள், விமான நிலை​யங்​கள், சோதனைச்​சாவடிகளி​லும் சொட்டு மருந்து வழங்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. தொலை​தூரம் மற்​றும் எளி​தில் செல்ல முடி​யாத பகு​தி​களில் வசிக்​கும் குழந்​தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க நடமாடும் குழுக்​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. சுகா​தா​ரப் பணி​யாளர்​கள், அங்​கன்​வாடி பணி​யாளர்​கள், ஆசிரியர்​கள், தன்​னார்​வலர்​கள் என 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் சொட்​டுமருந்து வழங்​கும் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்டுள்ளனர்.

தேசிய தடுப்​பூசி அட்​ட​வணைப்​படி ஏற்​கெனவே குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்​கப்​பட்​டிருந்​தா​லும் முகாம் நாளில் மீண்​டும் சொட்டு மருந்து வழங்​கப்பட வேண்​டும். அண்​மை​யில் பிறந்த குழந்​தைகளுக்​கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்​பது அவசி​ய​மாகும். விடு​பட்ட குழந்​தைகளுக்கு முகாம் முடிந்த பிறகு 29, 30-ம் தேதி​களில் தற்​காலிக மையங்​களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. சென்​னையைப் பொருத்​தவரை 5 வயதுக்கு உட்​பட்ட சுமார் 5.56 லட்​சம் குழந்​தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்​ப​தற்கு 1,641 மையங்​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. சொட்டு மருந்​து வழங்​கும்​ பணி​யில்​ 6,564 பேர்​ ஈடு​படுத்தப்பட்டுள்ளனர்.

சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள  https://puthiyaparimaanam.com/  மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.

Related Articles

Stay Connected

0FansLike
3,849FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles