“இனி படங்களில் நடிக்க மாட்டேன்”- நடிகர் ரவி மோகன் கண்ணீர் பேட்டி

“இனி படங்களில் நடிக்க மாட்டேன்”- நடிகர் ரவி மோகன் கண்ணீர் பேட்டி

“I Will No Longer Act in Films” – Actor Ravi Mohan Gives Tearful Interview

  • இத்தனை நாள் பேசாமல் அமைதி காத்ததற்காக நான் வருத்தப்படுகிறேன்

  • பெண் உரிமைகளுக்காக என் படங்களில் குரல் கொடுத்துள்ளேன். நான் பெண்களுக்கு எதிரானவனா?

சென்னை, மே. 16

“இனி படங்களில் நடிக்க மாட்டேன்”- நடிகர் ரவி மோகன் கண்ணீர் பேட்டி : “எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப் பார்க்க வேண்டும்.” என நடிகர் ரவி மோகன் கண்ணீர் மல்கப் பேசியுள்ளார்.

நடிகர் ரவி மோகன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இது என்னுடைய தனிப்பட்ட பேட்டி, இதற்கும் சினிமாவுக்கும் சம்பந்தம் கிடையாது. இத்தனை நாள் பேசாமல் அமைதி காத்ததற்காக நான் வருத்தப்படுகிறேன். ரவி மிகவும் மென்மையானவர், அவர் எதைச் சொன்னாலும் புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்துவிடுவார் என்று நினைத்துக் கொண்டார்கள். அதுதான் என்னுடைய கேரக்டர். ஆனால், ‘சாது மிரண்டால் காடு தாங்காது…’ சாதுவாக இருந்த என்னை நிறைய பேர் சீண்ட நினைக்கிறார்கள். இதுதான் என் அலுவலகம், இங்கே வாருங்கள். மறைமுகமாக இல்லாமல் நேரடியாக வாருங்கள்.

எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை இனி என் படங்கள் வெளியாகாது. விவாகரத்து கிடைக்கும் வரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. 23 ஆண்டுகள் இரவு பகலாக வேலை செய்துள்ளேன். என்னுடைய 95 சதவீத படங்கள் வெற்றியடைந்துள்ளன. மாநில விருதுகள், கலைமாமணி விருதுகள் பெற்றுள்ளேன். என் குடும்பத்தைக் காப்பாற்ற நிறைய உழைத்துள்ளேன். என் குடும்பத்தைச் சீண்டினால் சும்மா விட மாட்டேன்.

என்னை சீண்டினால் விட்டுவிடுவேன் என்று நினைத்தீர்களா?. பெண்ணுரிமை என்றால் என்னவென்று தெரியுமா?. பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நான் படம் எடுத்தேன். பெண் உரிமைகளுக்காக என் படங்களில் குரல் கொடுத்துள்ளேன். நான் பெண்களுக்கு எதிரானவனா?.

14 ஆண்டுகள் என் திருமண வாழ்க்கையில் நன்றாகத் தானே இருந்தேன். அதனை அவர்களே சொல்லியுள்ளனர். அதற்கான வீடியோ ஆதாரங்களே என்னிடம் உள்ளன. குழந்தைகளுக்காக 14 வருடங்கள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டேன். இப்போது என் குழந்தைகளை பார்க்க விடமாட்டேன் என்கிறார்கள். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப் பார்க்க வேண்டும். என் பிள்ளைகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் கல்விக் கட்டணம் கட்டி நான் இப்போது வரை படிக்க வைக்கிறேன். என் பாசத்தை பற்றி மட்டும் பேசாதீர்கள். குழந்தைகள் மீது அன்பில்லாதவன் என்று என்னைச் சொல்லாதீர்கள்.

அத்தனை கோடிகளில் வீடு கட்டிக் கொடுத்தேனே, உங்களுக்காக தானே. இருக்கும்போது என்னை நன்றாக பார்த்துக் கொள்ளாதவர்கள் அவர்கள். அந்த வாழ்க்கை பிடிக்காமல் தானே தெறித்து ஓடி வந்தேன். ஒரு குழு அமைத்து, காசு கொடுத்து அவதூறு பரப்புகிறார்கள். சைபர் புல்லியிங் செய்து ஒரு பெண்ணை அனுப்பி விட்டார்கள். கெனிஷாவை காலி பண்ணி அனுப்பி விட்டார்கள். அதற்காகவெல்லாம் இந்தப் பேட்டி கொடுக்கவில்லை. யாருக்கு அநீதி நடந்தாலும் குரல் கொடுப்பேன்.

சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள  https://puthiyaparimaanam.com/  மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.

Related Articles

Stay Connected

0FansLike
3,849FollowersFollow
22,800SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles