ஆந்திராவில் 4 குழந்தைகள் பெற்றால் ரூ. 40 ஆயிரம் ஊக்கத்தொகை: முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி அறிவிப்பு
Rs. 40,000 Incentive for Families with Four Children in Andhra: CM Chandrababu Naidu’s Bold Announcement
-
‘குழந்தைகளே செல்வம்’ என்ற முழக்கத்தின் கீழ், ஒரு புதிய திட்டம் விரைவில் தொடங்கப்படும் – சந்திரபாபு நாயுடு
-
‘தல்லிகி வந்தனம்’ திட்டத்தின் கீழ், தாய்மார்களுக்கு ஏற்கனவே ரூ.15,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது -சந்திரபாபு நாயுடு
ஸ்ரீகாகுளம், மே. 17
மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவது தடுக்க, ஆந்திராவில் மூன்றாவது குழந்தை பெற்றெடுக்கும் குடும்பத்துக்கு ரூ. 30 ஆயிரமும், நான்காவது குழந்தை பெற்றெடுக்கும் குடும்பத்துக்கு ரூ.40 ஆயிரம் வழங்கும் சிறப்புத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
ஸ்ரீகாகுளம் மாவட்டம், நரசன்னபேட்டையில் நடைபெற்ற ‘ஸ்வர்ண ஆந்திரா – ஸ்வச்ச ஆந்திரா’ (Swarna Andhra – Swatcha Andhra) நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார்.

அப்போது உரையாற்றிய முதலமைச்சர் நாரா சந்திரபாபு நாயுடு, குழந்தைகளே நாட்டின் உண்மையான செல்வம் என்று கூறினார். மக்கள் தொகை மேலாண்மை மூலம், மக்கள் தொகையை நாட்டிற்கு ஒரு சொத்தாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்த நாயுடு, இந்தப்போக்கை கட்டுப்படுத்த ஒரு சிறப்பு செயல் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். “‘குழந்தைகளே செல்வம்’ என்ற முழக்கத்தின் கீழ், ஒரு புதிய திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று நாயுடு கூறினார்.
பல குடும்பங்கள் தங்களை ஒரே குழந்தையுடன் நிறுத்திக்கொள்வதால், பல நாடுகளில் மக்கள் தொகை குறைந்து வருவதாகவும், முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்தார். மேலும், இது நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சந்திரபாபு நாயுடு தெளிவுபடுத்தினார்.
முன்னர் குடும்பக் கட்டுப்பாட்டின் மீது கவனம் செலுத்தப்பட்ட நிலையில், தற்போது சூழல்கள் மாறிவிட்டதாகவும், எனவே குழந்தைகளைச் செல்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதை கட்டுப்படுத்த ஒரு சிறப்பு செயல் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும்
மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் குடும்பங்களுக்கு ரூ.30,000-மும், நான்காவது குழந்தை பெற்றுக்கொள்ளும் குடும்பங்களுக்கு ரூ.40,000-மும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாரா சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
மக்கள் தொகை மேலாண்மைக் கொள்கையின் மூலம், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் வாயிலாக, தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் சத்தான உணவை வழங்க ஏதுவாக அங்கன்வாடி மையங்களை வலுப்படுத்துவது குறித்தும் அவர் குறிப்பிட்டார்.
‘தல்லிகி வந்தனம்’ (Thalliki Vandanam) திட்டத்தின் கீழ், தாய்மார்களுக்கு ஏற்கனவே ரூ.15,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாகவும் நாயுடு மேலும் தெரிவித்தார்.
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கொண்டு வரும் மக்கள் தொகை சரிவை கட்டுப்படுத்தும் “குழந்தைகளே செல்வம்” என்ற திட்டம் தமிழ்நாட்டிற்கும் தேவை என சமூக சில ஆர்வர்கள் குரல் எழுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.







